‘தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி செய்தவை…’ – பட்டியலிட்டு ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: “கடவுள் அனுப்பியதாக கூறும் நபர், 22 பணக்காரர்களுக்காக மட்டும் வேலை செய்கிறார். அம்பானி, அதானிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்தார். முன்னதாக, “கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார்” என்று பிரதமர் மோடி பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது எப்போதும் … Read more

“பாஜகவுக்கு 300+ இடங்கள் உறுதி!”- பிரசாந்த் கிஷோர் விவரித்த ‘கணக்கு’

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024-ல் பாஜக 300+ இடங்களைக் கைப்பற்றும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘தி வயர்’ ஊடகத்துக்காக கரண் தாப்பருக்கு பிரசாந்த் கிஷோர் நேர்காணல் அளித்திருந்தார். அதில், “இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்களில், பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் கடந்த 2019 தேர்தலின்போது பதிவான வாக்கு சதவீதத்தைவிட குறைந்திருப்பதால் பாஜக ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்ற கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் … Read more

“இந்தியா திரும்பி வந்து சட்ட நடவடிக்கையை எதிர்கொள்…” – பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக திரும்ப வேண்டும் என்றும், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவரது தாத்தாவும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கடந்த 18-ம் தேதி ஊடகங்களில் நான் பேசினேன். அப்போது நான் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தேன். அதிர்ச்சி மற்றும் வலியில் இருந்து நான் சற்று விடுபட எனக்கு நேரம் தேவைப்பட்டது. எனக்கு மட்டுமல்ல, எனது ஒட்டுமொத்த குடும்பம், கட்சியினர், … Read more

தானே ரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்து 7 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம்

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் ஆம்பர் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை பகல் நேரத்தில், தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாது. இதனால், தொழிற்சாலையில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. தொழிற்சாலையில் மூன்று முறை … Read more

“நான் தாக்கப்பட்டபோது கேஜ்ரிவால் வீட்டில்தான் இருந்தார்” – ஸ்வாதி மாலிவால் விவரிப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் மே 13-ம் தேதி தான் தாக்கப்பட்டபோது, அவர் வீட்டில் இருந்தார் என்று தாக்குதலுக்கு உள்ளான ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால், கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரான பிபவ் குமாரால் கடந்த 13-ம் தேதி தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது: மே 13 அன்று … Read more

பிரதமர் அவர்களே.. எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் -கெஜ்ரிவால்

Arvind Kejriwal Video: பிரதமரே, உங்கள் சண்டை என்னுடன் இருக்கட்டும்.. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புனே கார் விபத்து: “மைனரை மேஜராக கருத செயல்முறை உள்ளது” – சிறுவனின் வழக்கறிஞர்

புனே: கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனை மேஜராக கருத 90 நாட்கள் செயல்முறை உள்ளது என அவரது வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது: “குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், ‘மைனரா அல்லது மேஜரா’ என்பதை சிறார் நீதி வாரியம் தீர்மானிக்க 90 நாட்கள் செயல்முறை உள்ளது. சிறுவனை கைது செய்த 30 நாட்களில் குற்றப்பத்திரிகையை விசாரணை மேற்கொள்ளும் தரப்பில் தாக்கல் செய்ய … Read more

Maharashtra Thane Blast: ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் காயம்

Thane Dombivli Blast: தானே டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன ஆலை ஒன்றின் கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். 

உருவாகிறது ‘ரீமல்’ புயல்: மே 26-ல் வங்கதேசம் அருகே கரையை கடக்க வாய்ப்பு

புதுடெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், அந்தத் தீவிர புயலுக்கு ‘ரீமல்’ (Remal) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலில், ‘வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. தொடர்ந்து, அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வடகிழக்கு திசையில் … Read more

வாக்கு இயந்திரம் உடைப்பு: ஜெகன் கட்சி வேட்பாளர் கைதாகிறார்

ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நாளிலும் தேர்தலுக்குப் பிறகும் ஆந்திராவில் வன்முறைகள் நிகழ்ந்தன. இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநரை டெல்லிக்கு நேரில் அழைத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தேர்தல் நாளில் 7 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more