பாபா அபராஜித் அரைசதம்… திண்டுக்கல் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சேலம், சேலத்தில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 12 ரன்களிலும், மோகித் ஹரிஹரன் … Read more

5 பந்துகளில் 5 விக்கெட்! விரைவில் இந்திய அணியில் இடம்பெறும் திக்வேஷ் ரதி?

Digvesh Rathi: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு இந்த ஆண்டு எதுவுமே நல்லதாக நடக்கவில்லை. 27 கோடிக்கு ரிஷப் பந்தை ஏலத்தில் எடுத்து இருந்தாலும், இரண்டு போட்டிகள் தவிர வேறு எந்த போட்டியிலும் அவர் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் லக்னோ அணி பிளேஆப் செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இருப்பினும் சில வீரர்கள் இந்த ஆண்டு லக்னோ அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். அவர்களில் ஒருவர் திக்வேஷ் ரதி. கிட்டத்தட்ட சுனில் நரேன் போன்ற பவுலிங் ஆக்சன் கொண்ட இவர் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியுடன் கம்பீர் இணைவது எப்போது..?

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற … Read more

பயிற்சி ஆட்டத்தில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம்! மாற்று வீரர்கள் இவர்கள் தான்!

ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாடியிருந்தாலும் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது இந்திய அணி U 19 அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்திய U 19 அணி ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் குறைந்த நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து U 19 அணிக்கு எதிராக வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை விளையாட உள்ளனர். இந்நிலையில் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு … Read more

டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு

சேலம், 8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் … Read more

சீட்டிங் செய்தாரா அஸ்வின்…? பந்தை சேதப்படுத்தியதாக புகார் – TNPL தொடரில் ஷாக்!

Ball Tampering Allegation On Ravichandran Ashwin: டிஎன்பிஎல் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன், ஓய்வுபெற்ற இந்திய அணி வீரருமான ரவிசந்திரன் அஸ்வின் மீது டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் மதுரை பேந்தர்ஸ் அணி புகார் அளித்துள்ளது. டிஎன்பிஎல் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கியது. கோயம்புத்தூர் நகரில் நடைபெற்ற முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட போட்டிகள் அனைத்தும் சேலத்தில் … Read more

ஏபிடி செய்த தவறு.. கோபத்தால் பேசாமல் இருந்த கோலி! என்ன நடந்தது?

ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி எந்த அளவிற்கு நெருக்கமான நண்பர்கள் என்று நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இந்த நிலையில் விராட் கோலி தன்னிடம் சில மாதங்கள் பேசாமல் இருந்ததாகவும் தான் செய்த செயலால் அவருக்கு மன கசப்பு ஏற்பட்டதாகவும் எபிடி வில்லியர்ஸ் கூறி உள்ளார்.  கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், யூடியூப் நேரலையின் போது, அனுஷ்கா சர்ம தனது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தவறான தகவலை வெளியிட்டிருந்தார். கோலி மற்றும் … Read more

மகளிர் ஒருநாள் உலக கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெறுகிறது.. வெளியான அட்டவணை!

Womens World Cup Schedule: 2025ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று பிற்பகல் (ஜூன் 16) வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் உலக கோப்பை தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இம்முறை இந்த தொடரை இலங்கை மற்றும் இந்தியா நடத்துகிறது.  இந்தியாவில் பெங்களூரு, விசாகப்பட்டினம், கெளகாத்தி மற்றும் இந்தூர் மைதானங்களில் நடைபெறுகிறது. இங்கையில் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் … Read more

பும்ரா, சிராஜ் பந்துவீச்சை துவம்சம் செய்த ஷர்துல் தாக்கூர்! பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி!

India Tour of England: இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் ஜூன் 20ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக இங்கிலாந்தின் உள்நாட்டு அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணி விளையாடியது. அதனை தொடர்ந்து இந்தியா ஏ அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது, இந்த பயிற்சி ஆட்டம் மூன்றாவது நாளில் முடிக்கப்பட்டுள்ளது. காரணம் ஆல் ரவுண்டர் ஷர்துல் … Read more

பணத்துக்காக என்னை ஓய்வு பெற சொன்னார்.. கருண் நாயார் ஓபன் டாக்!

Ind vs Eng: இந்திய வீரர் கருண் நாயார் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கூட நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் விளாசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.  அதையடுத்து, கருண் நாயர் ரஞ்சி டிராபி போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக விஜய் … Read more