சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி

பாசெல், சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் … Read more

ஆர்சிபி இந்த வருடமாவது கோப்பையை வெல்லுமா? பலம், பலவீனம் என்ன? பிளேயிங் XI?

வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. இத்தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஆர்சிபி அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றனர்.  இம்முறை ஆர்சிபி அணி புது தோற்றத்துடன் இருக்கின்றது. புதிய வீரர்கள் புதிய கேப்டன் என புது முகத்துடன் இம்முறை ஐபிஎல் தொடரை எதிர்கொள்கிறது. கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேப்டனாக்கப்பட்டது குறித்து கோலியும் பெருமையாக … Read more

இந்த வயதிலும் ஏன் ஐபிஎல் விளையாடுகிறாய்? தோனியிடமே கேட்ட ஹர்பஜன்

2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருடன் பல முன்னணி வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமானவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி.  இன்று வரை சென்னை ரசிகர்கள் சிலர் ஐபிஎல்லை விரும்புவது தோனிக்காகதான். ஐபிஎல்லில் தோனியின் பார்ப்பதற்காகவே பலர் மைதானத்திற்கு வருகிறார்கள். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் தோனி தொடர்ந்து ஐபிஎல் விளையாடி வருகிறார்.  அதேபோல் தோனிக்கு இந்த சீசன் தான் கடைசியாக … Read more

ஐபிஎல் 2025: IPL Ball Boy to பஞ்சாப் கேப்டன்.. ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் 2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என முக்கிய வீரர்களே கேப்டனாக இருந்த தங்களது அணியை விட்டு வேறு அணிகளுக்கு மாறினர்.  இதில் ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு கேப்டனாவும் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இத்தொடரில் பயணம் செய்ய உள்ளனர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த  ஐபிஎல் தொடரில் கொல்கத்த நைட் … Read more

IPL 2025: கொல்கத்தாவில் நடைபெறும் போட்டி இடமாற்றம்? வெளியான தகவல்!

2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  மைதானத்தை மாற்ற வாய்ப்பு  இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அஜின்கியா ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியும் … Read more

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மீண்டும் மாற்றம் – பரபரப்பு பின்னணி

Mumbai Indians New Captain : ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பிரேங்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டயா முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியா இழந்திருப்பதால் அவருக்கு பதிலாக இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த … Read more

ஐபிஎல் 2025 டிக்கெட் : ஆன்லைன் மற்றும் ஆப்லைன் டிக்கெட் பெறுவது எப்படி? முழு விவரம்

How To Book IPL 2025 Tickets Online : ஐபிஎல் 2025 மெகா கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் இந்தியா முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது என ஆன்லைனில் தேடத்தொடங்கியுள்ளனர். இதனால் கூகுள் டிரெண்டிங்கில் ஐபிஎல் 2025 டிக்கெட், ஐபிஎல் 2025 டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி, ஐபிஎல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்குவது எப்படி, ஐபிஎல் 2025 டிக்கெட் எங்கு வாங்குவது போன்ற கீவேர்டுகள் … Read more

ஐபிஎல் போட்டிகள் இனி இலவசம் இல்லை! எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றனர். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இந்த … Read more

திரும்பி வந்துட்டேனு சொல்லு! பத்திரனா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி!

இந்தியாவில் ஐபிஎல் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வரும் மார்ச் 23ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், … Read more

மியாமி டென்னிஸ்: முதல் சுற்றில் கேத்ரினா சினியகோவா வெற்றி

புளோரிடா, மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு), யு யுவானை (சீனா) சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-2, 2-6, 7-6 (4) என்ற செட் கணக்கில் யு யுவானை (சீனா) வீழ்த்தி கேத்ரினா சினியகோவா வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் போலந்தின் லினெட் 7-6 (3), 6-2 என்ற நேர் செட்டில் ரஷியாவின் பாவ்லிசென்கோவை வீழ்த்தினார். … Read more