ரோகித், ரஹானே விக்கெட்டை அள்ளிய ஜம்மு காஷ்மீர் பவுலர் உமர் யார்?

Umar Nazir Mir, Ranji Trophy | இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான பார்ம் ரஞ்சிக்கோப்பையிலும் தொடர்கிறது. அவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணிக்காக இன்று களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து அவுட்டானார். அவரது விக்கெட்டை ஜம்மு காஷ்மீர் பவுலர் உமர் நசீர் மிர் கைப்பற்றினார். ரஹானே விக்கெட்டையும் அவரே கைப்பற்றி கவனத்தையும் ஈர்த்தார். இதனால் மும்பை அணி 120 … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி

பெங்களூரு , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு – ஒடிசா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்று … Read more

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: சிந்து தோல்வி; லட்சயா சென் வெற்றி

ஜகர்த்தா, இந்தோனேசியாவில் இந்தியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சிந்து, வியட்நாமை சேர்ந்த குயென் துய் லின் என்பவருடன் நேற்று விளையாடினார். 37 நிமிடங்கள் நடந்த முதல் சுற்று போட்டியில் 22-20, 21-12 என்ற புள்ளி கணக்கில் தோற்று போட்டியில் இருந்து … Read more

முதல் டி20 போட்டி – இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

கொல்கத்தா, பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் … Read more

விராட் கோலி முதல் அக்சர் படேல் வரை! ஐபிஎல் 2025ல் 10 அணிகளின் கேப்டன்கள்!

ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்றதால் இந்த ஆண்டு முதல் போட்டியும், பைனலும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் சில புதிய வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் நிறைய அணிகளில் கேப்டன்கள் மாற உள்ளனர். சென்னை மற்றும் மும்பை போன்ற அணிகளில் மாற்றம் இருக்காது என்றாலும் கொல்கத்தா, டெல்லி, லக்னோ போன்ற அணிகளில் புதிய கேப்டன்கள் பொறுப்பு … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரா? பிசிசிஐ விளக்கம்!

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் அனைத்தும் போட்டிகளும் துபாயில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2027ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணி சென்று விளையாடாது என அறிவித்தது. இதனிடையே இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சியில், தொடரை … Read more

தொடரும் சோகம்.. ரஞ்சியிலும் சொதப்பும் ரோகித், கில்!

நியூசிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டிகள் என இந்திய அணி தொடர் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்திய வீரர்களை உள்ளூர் போட்டிகளில் சென்று விளையாட உத்தரவிட்டது.  பொதுவாக காயம் ஏற்பட்ட போது தான் இந்திய வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தேர்ச்சி பெற்ற பிறகு இந்திய அணிக்குள் வருவார்கள். ஆனால் இந்த படுதோல்விகளால் விரக்தி அடைந்த பிசிசிஐ, இந்திய அணியில் யாராக இருந்தாலும் சரி ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக … Read more

IND vs ENG: தோற்றது இங்கிலாந்து தான்! ஆனால் கவலையில் ஆர்சிபி ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி எளிதானது. இருப்பினும் இந்த வெற்றியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். காரணம் இந்த இங்கிலாந்து அணியில் 3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து : பெங்களூரு – ஒடிசா அணிகள் இன்று மோதல்

பெங்களூரு , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு – ஒடிசா அணிகள் மோதுகின்றன . இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு 3வது இடத்திலும், ஒடிசா 7வது இடத்திலும் உள்ளன. தினத்தந்தி Related … Read more

ஆட்டம் காட்டிய அபிஷேக் சர்மா… அடங்கியது இங்கிலாந்து – மிரட்டலான வெற்றி!

IND vs ENG 1st T20 Latest News Updates: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இந்திய அணியில் பலரும் எதிர்பார்த்த ஷமி இன்று விளையாடவில்லை. அர்ஷ்தீப் மட்டுமே பிரீமியம் வேகப்பந்துவீச்சாளராக களமிறங்கினார். மூன்று ஸ்பின்னர்களுடன் இந்தியா வந்தது. மறுபுறம், அடில் ரஷீத் மட்டுமே இங்கிலாந்துக்கு பிரீமியம் ஸ்பின்னர், … Read more