அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) , செக் குடியரசுவை சேர்ந்த கோபிரிவாவை எதிர் கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-1, 6-1 ,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் 2வது … Read more

என்னை போல் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.. இளைஞர்களுக்கு புஜாரா அறிவுரை!

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவமான பேட்ஸ்மேன் சேட்டேஷ்வர் புஜாரா. 2010 முதல் 2023 வரையில் 13 ஆண்டுகள் இந்தியாவுக்காக 103 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 43.6 சராசரியில் 7,195 ரன்கள் அடித்துள்ளார். குறிப்பாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2 தொடர்களை வென்று சாதனை படைத்ததற்கு இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது.  Add Zee News as a Preferred Source கிரிக்கெட் பயணமும் ஸ்பெஷலாக இருந்தது   தொடக்கத்திலிருந்து, சச்சின், டிராவிட், சைவராக நங்கூரம் பிடித்து பொறுமை, நிலைப்பட்ட … Read more

ஐபிஎல் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை, இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்த்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்தார் .இது தொடர்பாக அஸ்வின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள், ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது, ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது. … Read more

அடுத்தது இவரா? முக்கிய முடிவை எடுத்த மற்றொரு CSK வீரர்!

தமிழ்நாடு அணியின் முக்கிய சீனியர் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், 2024–25 ரஞ்சி டிராபி போன்ற பெரிய உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் இனி கேரளா அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த சில சீசன்களில் தமிழ்நாடு அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட விஜய் சங்கர், இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.  Add Zee News as a Preferred Source விஜய் சங்கரின் பயணமும், சவால்களும்   2019 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக ஆல்ரவுண்டர் பங்கு வகித்த விஜய் சங்கர், பேட்டிங், … Read more

ஆசிய கோப்பை ஆக்கி: போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்

பாட்னா, இந்தியா, சீனா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை காண ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆக்கி இந்தியா நேற்று அறிவித்துள்ளது. ரசிகர்கள் www.ticketgenie.in என்ற இணைய தளம் அல்லது ஆக்கி இந்தியா செயலியில் தங்களது பெயர் விவரங்களை பதிவு செய்து இலவச டிக்கெட்டை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தேவங்க் தலால் நியமனம்

மும்பை, நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும். இந்த நிலையில் , 12-வது புரோ கபடி லீக் போட்டிக்கான பெங்கால் … Read more

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இரட்டை தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

ஷிம்கென்ட், 16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் 41 வீராங்கனைகள் பங்கேற்றனர். தகுதி சுற்று முடிவில், உலக சாதனையாளரான இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, ஸ்ரீயங்கா (தலா 589 புள்ளி) ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஸ்ரீயங்கா ரேங்கிங் புள்ளிக்கான பந்தயத்தில் மட்டும் கலந்து கொண்டதால் பதக்க சுற்றில் களம் காண முடியாது. சிப்ட் … Read more

ஒட்டுமொத்த ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் – அஸ்வின் திடீர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பாதியில் அவர் ஓய்வை அறிவித்தது பல்வேறு விதமான சர்ச்சைகளை எழுப்பியது. முதல் இரண்டு போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத அஸ்வின் மூன்றாவது போட்டியின் நடுவில் ஓய்வைஅறிவித்து இருந்தார். அதன் பிறகு ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அதன் … Read more

பிசிசிஐ தோனிக்கு எவ்வளவு ஓய்வூதியம் கொடுக்கிறது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக அரங்களில் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வரும் தோனி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாதமும் தோனிக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. தோனி மாதம் மாதம் எவ்வளவு ஓய்வூதியம் பெறுகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். தோனிக்கு வழங்கப்படும் … Read more

இந்த 4 வீரர்களை கழட்டிவிடும் பஞ்சாப் அணி? குறி வைத்து காத்திருக்கும் சிஎஸ்கே!

ஐபிஎல் 2025 தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி சிறப்பாக செயல்பட்டது. டாப் ஆர்டர், மிடில் மற்றும் பவுலிங் என அனைத்தும் அவர்களுக்கு கை கொடுத்தது. இதனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டி வரை முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இருப்பினும் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும், இந்த சீசனில் பஞ்சாப் அணியின் ஆட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.  … Read more