சிஎஸ்கே அணியில் அஸ்வின்… திரும்பி வந்துட்டேனு சொல்லு – பிளெம்மிங் எடுத்த முடிவு..!

Chennai Super Kings, IPL Auction 2025 | சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். சவுதி அரேபியா ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 ஏலத்தில் அஸ்வினை (Ravichandran Ashwin) 9.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து. இதனால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருக்கிறார். மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பியதை அந்த அணி கொண்டாடி கொண்டிருக்கிறது. சிஎஸ்கே அணி எக்ஸ் … Read more

2025 சாம்பியன்ஸ் டிராபி எங்கு நடக்கும்? ஐசிசி எடுத்த முக்கிய முடிவு!

2025 சாம்பியன்ஸ் டிராபி இந்த முறை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதட்டமான அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்தநிலையில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு இடத்தில் மாற்றலாமா என்ற பேச்சு வார்த்தை எழுந்த நிலையில் பாகிஸ்தானில் தான் அனைத்து போட்டிகளையும் நடத்த … Read more

விராட் கோலி சதம்… உடனே அனுஷ்காவுக்கு பிளையிங் கிஸ் – ஆஸ்திரேலியாவுக்கு இமாலய இலக்கு

India vs Australia, Virat Kohli Century Celebration: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றைப் போலவே மூன்றாவது நாளான இன்றும் இந்திய அணி பேட்டிங்கின் மூலம் ஆதிக்கம் செலுத்தியது. நவ. 22ஆம் தேதி போட்டி தொடங்கிய நிலையில், இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங்கை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 … Read more

IPL Auction Live: ஒவ்வொரு அணியிடம் எவ்வளவு தொகை மீதம் உள்ளது? RTM யாரிடம் உள்ளது?

IPL Auction Live 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 மெகா ஏலம் இன்று இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவை தாண்டி வெளியே நடக்கக்கூடிய இரண்டாவது ஐபிஎல் ஏலம் இதுவாகும். இதற்கு முன்பு ரியாத்தில் நடைபெற்றது, தற்போது சவுதி அரேபியாவின்  ஜெட்டாவில் இந்த ஆண்டு ஏலம் நடைபெறுகிறது. ஐபிஎல் ஏலம் நடைபெறும் அபாடி அல் ஜோஹர் அரங்கு வெறும் 79 நாட்களில் கட்டப்பட்ட இடம் ஆகும். இங்கு 5,000 இருக்கைகள் மற்றும் 10,000க்கும் … Read more

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவேன் – குகேஷ் நம்பிக்கை

சிங்கப்பூர், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நாளை தொடங்கி அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென், இந்திய வீரர் குகேஷ் உடன் மோதுகிறார். 138 ஆண்டு கால இந்த போட்டி வரலாற்றில் ஆசிய வீரர்கள் இருவர் மோதுவது இதுவே முதல்முறையாகும். ரூ.21 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி 14 சுற்றுகள் கொண்டதாகும். இந்த போட்டியில் முதலில் 7½ புள்ளியை பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். இந்நிலையில், … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் – சென்னையின் எப்.சி அணிகள் இன்று மோதல்

கொச்சி, 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னையின் எப்.சி. அணி 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 டிரா, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கேரளா … Read more

சையத் முஷ்டாக் அலி கோப்பை; திரிபுராவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய தமிழகம்

இந்தூர், 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் தமிழக அணி திரிபுராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தமிழகம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 234 ரன்கள் குவித்தது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 78 ரன், ஜெகதீசன் 50 ரன் … Read more

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: இன்று எத்தனை மணிக்கு தொடங்கும்…? நேரலையை எங்கு பார்ப்பது…?

IPL 2025 Mega Auction Today Timings And Live Telecast: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பெரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாள் வந்துவிட்டது. ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் இன்று (நவ. 24) தொடங்குகிறது. சௌதி அரேபியாவின் துறைமுக நகரம் என்றழைக்கப்படும் ஜெட்டாவில் (Jetta) உள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.  ஐபிஎல் மெகா ஏலம் (IPL 2025 Mega Auctiom) என்றாலே ஐபிஎல் தொடருக்கு … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மோகன் பகான்

கொல்கத்தா, 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 11 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்த போட்டித் தொடர் நேற்று தொடங்கியது இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஜாப்ஷெட்பூர் எப்.சி – மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மோகன் பகான் அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தியது. … Read more

சவுதி அரேபியாவில் இன்று தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

துபாய், 10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறுகிறது. 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் … Read more