மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா? அவரே கொடுத்துள்ள விளக்கம்!

இந்தியாவுக்கான இனி டி20 போட்டிகளில் விளையாடவும், ஓய்வு பெற்ற முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை என்று ரோஹித் சர்மா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த முடிவில் தான் நிம்மதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பிறகு, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வது பெறுவதாக அறிவித்து இருந்தார் ரோஹித் சர்மா. மேலும், தற்போதைய உலக கிரிக்கெட்டில் ‘ஓய்வு’ என்ற வார்த்தை அதன் சாரத்தையும் நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டதாகக் கருதுகிறார். ஒரு சில … Read more

இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி; சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்காளதேச அணி … Read more

தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும்… காரணத்துடன் கருத்துச் சொன்ன Ex சிஎஸ்கே வீரர்

MS Dhoni: 2020ஆம் ஆண்டு ஆக. 15ஆம் தேதி அன்றே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார், எம்எஸ் தோனி. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய அணியில் தனது கேப்டன்ஸி பதவியையும் விராட் கோலியிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டார். அவருக்கு தற்போது வயது 43 ஆகிறது. இந்த வயதிலும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையேயும், முன்னாள் வீரர்கள் இடையேயும் நிலவுகிறது என்றால் அது சாமானியமானது அல்ல.  சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super … Read more

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் – தலையெழுத்து மாறுமா?

ஐபிஎல் தொடங்கியது முதல் சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மூன்று அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கியது முதல் இருந்தாலும், இந்த அணிகள் இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஒவ்வொரு சீசன்களின் மிகமிக மோசமாக விளையாடி முதல் அணிகளாக இந்த மூன்றில் ஏதேனும் ஒரு அணி வெளியேறும். ஆண்டுதோறும் இந்தமுறையாவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் … Read more

ஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது – ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்து

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இப்போட்டி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடைபெற இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் அந்த அணிக்கு பல டிப்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர். ரிக்கி பாண்டிங் அண்மையில் பேட்டியில் பேசும்போது, இம்முறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணியை தோற்கடிக்க அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவேன் என தெரிவித்துள்ளார். அவருடைய … Read more

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா விளையாடிய இறுதி போட்டியில் சீன கொடியை வைத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள்

ஹூலுன்பியர், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சீனாவை எதிர்கொண்டது. சீனாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய இறுதி போட்டியின்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகளில் சீன கொடியை வைத்திருந்தனர். பாகிஸ்தான் அணிக்கான பயிற்சியாளரும் கூட கைகளில் சீன … Read more

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; கோவாவை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி

கோவா, 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா – ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் ஒரு கோல் அடித்து கோவா அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஜாம்ஷெட்பூர் எப்.சி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து … Read more

இந்திய அணியுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய அஸ்வின்

சென்னை , இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரசிச்சந்திரன் அஷ்வின். அஷ்வின் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அஸ்வின் இந்திய அணி வீரர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்த நிலையில், அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டம் மைதானத்தின் டிரெசிங் ரூமிலேயே நடைபெற்றது. அஷ்வின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் … Read more

ரிஷப் பந்திற்கு பதில் துருவ் ஜூரில்? முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!

இந்தியா அணி தனது நீண்ட டெஸ்ட் சீசனை வரும் செப்டம்பர் 19ம் தேதியுடன் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் உட்பட இந்திய அணி மொத்தம் 10 போட்டிகளில் விளையாட உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சென்னையில் வரும் வியாழக்கிழமை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் இந்திய அணி விளையாடவில்லை. பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் மண்ணில் அவர்களை … Read more

10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி; சென்னையில் 19-ந்தேதி தொடக்கம்

சென்னை, எம்.சி.சி.- முருகப்பா தங்கக் கோப்பைக்கான 95-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் களம் காணுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம் (ரெட்), பாரத் பெட்ரோலியம், மராட்டியம், தமிழ்நாடு ஆக்கி யூனிட் ஆகிய அணிகளும் பி பிரிவில் ஆக்கி கர்நாடகா, இந்தியன் … Read more