கில் இல்லை.. ரோகித்துக்கு பின் இந்த வீரர் தான் கேப்டன்!

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தன்னை தேர்வுக்குழு தேர்வு செய்ய விருப்பம் காட்டாத காரணத்தினாலேயே அவர் ஓய்வை அறிவித்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து கடந்த மே மாதம் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தர். தற்போது அவர் இந்திய … Read more

ஐபிஎல் தொடரில் அசத்தியும் ஆசியக் கோப்பை அணியில் இடம் பெறாத டாப் 3 வீரர்கள்!

India Cricket Team : இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட பட்டியல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று அறிவிக்கப்பட்டது. இதில் சுப்மன் கில் துணை கேப்டனாக மீண்டும் டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால், ஐபிஎல் 2025-ல் மிகச் சிறப்பாகச் செயல்பட்டும், ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. அந்த பிளேயர்கள் யார் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் … Read more

சாஹலுடனான விவாகரத்து.. "காரணம் யாருக்காவது தெரியுமா?" மனம் உடைந்து பேசிய தனஸ்ரீ!

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவருக்கு சமீப காலமாக இந்திய அணி வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீச்சக்கூடிய அவருக்கு ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. யுஸ்வேந்திர சாஹல், தொழில் ரீதியாக பின்னடைவை சந்தித்தது மட்டுமல்லாமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.  சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து அதாவது, பிரபல நடன கலைஞரான … Read more

தேசிய தடகள போட்டி: தமிழக அணியில் 79 வீரர், வீராங்கனைகள்

சென்னை, 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியில் பிரவீன் சித்ரவேல், ராகுல்குமார், ராஜேஷ், தமிழ் அரசு, சந்தோஷ், விஷால் உள்பட 43 வீரர்களும், தனலட்சுமி, அபினயா, வித்யா ராம்ராஜ் உள்பட 36 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். கடும் பயிற்சி எடுத்துள்ள அவர்கள், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று நம்புவதாக தமிழ்நாடு தடகள சங்க … Read more

ஆசிய கோப்பை: கில்லுக்காக தேர்வுக்குழு அவர்களுக்கு அநியாயம் செய்துவிட்டது – அஸ்வின் விமர்சனம்

சென்னை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு … Read more

சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: வெற்றியுடன் தொடங்கிய பிரக்ஞானந்தா

செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை கிளாசிக்கல் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் முதல் 40 நகர்த்தலுக்கு 90 நிமிடம் ஒதுக்கப்படும் அதன் பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடமும், ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக … Read more

ஆசிய கோப்பை: சாம்சனுக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் கில்.. சூசகமாக தெரிவித்த அகர்கர்

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு … Read more

கில், பண்ட் இல்லை.. ரோகித்துக்கு பின் அவரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் – இந்திய முன்னாள் வீரர் தேர்வு

மும்பை, இந்திய ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் ஓய்வு அறிவித்து அதிர்ச்சி அளித்தார். … Read more

ஐபிஎல்லில் சொதப்பினாலும்.. கம்பீர் கருணையால் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்!

ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2025 தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அதே சமயம் மோசமாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்க்கு வழங்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களை தாண்டி சில முன்னாள் வீரர்களிடையும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த இருவர் … Read more

ஆசிய கோப்பை: துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டது ஏன்? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

வருகிற செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணியை சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர்.  முக்கிய மாற்றங்கள் இந்த அணியில் முன்னாள் முக்கிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. ஜெய்ஸ்வால் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் கோப்பையில் கேப்டனாக … Read more