தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை

சென்னை: தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில நிர்​வாகி​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே டெல்​லி​யில் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் கூட்​டணி படு​தோல்வி அடைந்​துள்​ளது. இந்​நிலை​யில், நாடு முழு​வதும் காங்​கிரஸின் செயல்​பாடு மற்​றும் 2026-ல் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்ள தமிழகம், புதுச்​சேரி​யில் தேர்​தல் தயார் நிலை குறித்து காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில், பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், தமிழக பொறுப்​பாளர் … Read more

‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான் புதிய கண்டுபிடிப்பு

தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டது, ஓட்டுக்கு காசு கொடுத்தது எல்லாம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? இதை எல்லாம் தேர்தல் ஆணையத்தால் சரிசெய்ய முடியவில்லை. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை தான் மக்களுக்கு உள்ள உரிமை. அதை … Read more

'ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்…' பிரதமர் மோடியை சாடிய முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin: உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் நடந்துள்ளது என நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ – மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் ஜான்குமார். இதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மேலிடமும் கண்டும் காணாமல் இருக்கிறது. ஆனாலும் இவை அனைத்தையும் மவுனமாக கடந்து கொண்டிருக்கும் ரங்கசாமி, பிஹார் தேர்தல் வெற்றிக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதுடன், டெல்லி சென்று … Read more

Rain Alert: அதிக கனமழை இருக்கும்! இந்த மாவட்ட மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, அடுத்தடுத்த நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் மாணவிகளால் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் – ஜி.கே.வாசன் நம்பிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சேலம் வரும்போது மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். கூட்டணி கட்சி தலைவரான பழனிசாமி, மாநிலம் முழுவதும் … Read more

கூண்டில் சிக்கியது ஒன்று… வேட்டையாடுவது இன்னொன்று: சிறுத்தையின் வைரல் வீடியோ

பொள்ளாச்சி ஆனைமலை அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை. மகிழ்ச்சியில் விவசாயிகள் ஆனால், மீண்டும் ஒரு சிறுத்தை நடமாட்டம். வைரலாக்கும் வீடியோ

தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: எழும்​பூரில் உள்ள ஆவணக் காப்​பகத்​தின் அரிய ஆவணங்​கள் உதவி​யுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்​வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை எழும்​பூரில் இயங்கி வரும் பழமை​யான தமிழ்நாடு ஆவணக் காப்​பகத்​தில் 1633-ம் ஆண்டு முதலான புத்​தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமை​யான ஆவணங்​களும் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. Source link

அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. ஊதியம் இரட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை!

Election Allowance Hiked: தமிழகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO) மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு (BLO Supervisors) ஊதிய உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

“அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இன்று அதை பற்றியே பேசுவதில்லை. ஏனென்றால், டாஸ்மாக் மூலம் ரூ.50 … Read more