கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐயிடம் 2-வது நாளாக ஆவணங்களை ஒப்படைத்த தவெக நிர்வாகிகள்
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் 2-வது நாளாக தவெக வழக்கறிஞர், நிர்வாகிகள் ஆவணங்களை ஒப்படைத்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக். 30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. … Read more