ஸ்டாலினா பெட்டியைத் திறந்து மனுக்களை படிக்கப் போகிறார்? – உள்ளதைச் சொல்ல முடியாமல் உழலும் உடன்பிறப்புகள்!

ஆளும் கட்சியாக இருந்தாலும் அடிமட்ட திமுக-வினருக்கு ஆயிரம் மனக்குறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புகளில் ஆர்வமாக பங்கெடுக்கும் உடன்பிறப்புகள், தங்களது மனக்குமுறலை கொட்டி ஆறுதல் தேட முடியாமல் பேருக்கு வந்து போய்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு முன்​பும் இது​போன்ற சந்​திப்​பு​களை நடத்தி இருக்​கி​றார் ஸ்டா​லின். அப்​போதெல்​லாம், மாவட்​டச் செய​லா​ளர்​கள், உள்​ளிட்​டோர் மீது கீழ்​மட்ட … Read more

கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: முத்தரசன் உறுதி

சேலம்: கொள்கை ரீதியி​லான திமுக கூட்​டணி ஒரு​போதும் உடை​யாது என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் கூறி​னார். சேலத்​தில் நடை​பெறவுள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான இலச்​சினையை வெளியிடும் நிகழ்ச்சி சேலத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் மாநாடு இலச்​சினையை வெளியிட்டார். பின்னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கட்​சி​யின் 26-வது மாநில மாநாடு சேலத்​தில் ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் மூத்த … Read more

தமிழகம் நிதி நெருக்கடியில் உள்ளதா? – அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: பணப்பலன்கள் வழங்கக்கோரி ஏராளமான வழக்குகள் தொடரப்படுவதால், தமிழகத்தின் நிதிநிலை நெருக்கடியில் உள்ளதா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்று ஒப்பந்தம் பெற்ற கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், சமையல் எண்ணெய்யை விநியோகம் செய்தது. இந்த வகையில் ரூ.141 கோடியே 22 லட்சத்தை தமிழக அரசு தங்களுக்கு … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடலூர் கூத்தப்பாக்கத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் பள்ளியை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 7 அதிகாரிகள் ஜூலை 10-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமாக, கூத்தப்பாக்கத்தில் பல கோடி மதிப்பிலான 6.10 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள புனித … Read more

மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் நலனைக் காத்திட, போதிய சந்தை தேவையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சுமார் 1.46 லட்சம் ஹெக்டரில் … Read more

பாமக நிறுவனர் ராமதாஸ் திருமண நாள் நிகழ்வு: அன்புமணி – சவுமியா புறக்கணிப்பு

விழுப்புரம்: தைலாபுரத்தில் இன்று (ஜுன் 24-ம் தேதி) மாலை நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சியை பாமக தலைவர் அன்புமணி – சவுமியா குடும்பத்தினர் புறக்கணித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கி வரும் … Read more

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்புகள் சொல்வது என்ன?

மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் உரிய முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க கோரியும், … Read more

“மருத்துவத் துறை சாதனைகளை பழனிசாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வேலூர்: “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சாதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பொறாமையில் அறிக்கை விட்டுள்ளார்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.198 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 25) திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இன்று … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உட்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில், அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். … Read more

சமஸ்கிருத மொழிக்கு ஏன் இவ்வளவு நிதி…? மத்திய அரசுக்கு சீமான் கிடுக்குபிடி!

NTK Seeman Latest News Updates: யாருமே பேசாத மொழிக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றும் கோவிலில் அர்ச்சனை செய்பவர்கள் தான் அதை பயன்படுத்துகிறார்கள் என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.