காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று (நவ.17) மழை பெய்துள்ளது. குறிப்பாக, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 17 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் … Read more

திருப்பத்தூர் ஆட்சியர் தலைமையில் "போதைப்பொருள் வேண்டாம்" விழிப்புணர்வு

நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.  

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்கும் பழனிசாமி – அரசியல் முக்கியத்துவம் என்ன?

கோவை: கோவைக்கு நாளை (நவ.19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நாளை (நவ.19) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் … Read more

ஈரக்குலை நடுங்குது! பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. அலறிய தருமபுரி!

Man Kills Wife In Dharmapuri: தருமபுரி மாவட்டத்தில் மனைவியை, கணவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், ஆத்திரத்தில் அவரது கை, கால்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.   

வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்த திமுக அரசு தூண்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். திருநெல்வேலியில் வ.உ.சி-யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வ.உ.சி-க்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப் படுகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர் பிரதமர் மோடி. திருநெல்வேலி மக்களுக்கு நான் என்றும் … Read more

சென்னையில் திறக்கப்படும் Wonderla! ஒரு நபருக்கு விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் திறக்கப்படும் வொண்டர்லாவின் அடிப்படை டிக்கெட் விலை, வார நாட்களில் ரூ.1,489 (ஜி.எஸ்.டி உட்பட) ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.1,789 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

‘பாஜகவுக்குச் சாமரம் வீசவே எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்தது’ – என்.ஆர்.இளங்கோ எம்.பி

சென்னை: பாஜகவுக்கு சாமரம் வீசுவதற்காகவே எஸ் ஐ ஆரை அதிமுக ஆதரித்தது என்றும் திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு என்றும் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டான, திமுகவின் பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கணக்கீட்டுப் படிவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி. பிஎல்ஓ-க்கள் … Read more

மேல்மருவத்தூர் தைப்பூசம், இருமுடி விழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு அறிவிப்பு

Southern Railway Thai Poosam Train: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெறும் இருமுடி மற்றும் தைப்பூச விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் நிறுத்தம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் – பாஜக சாடல்

சென்னை: தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்களை மறைமுகமாக செயல்பட தமிழக அரசு நிர்வாகம் ஊக்குவிக்கக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு … Read more

Rain Alert | இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழுபட்டியல்

Schools Holiday News: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (18.11.2025) தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.