உக்ரைனில் சிக்கிய தமிழர்கள் அரசின் உதவியை பெறுவது எப்படி?

Tamilnadu Govt release helpline number for Ukraine live Tamil people: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்கள், உதவி கோரி தொடர்பு கொள்வதற்கு தமிழக அரசு மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்களை அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் படையெடுப்பை ஆரம்பித்துள்ளது. முன்னதாக உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் ஆரம்பித்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேறும் படி இந்திய அரசுக் கேட்டுக்கொண்டது. மேலும் இந்தியர்கள் விரைவாக வெளியேற கூடுதல் விமானங்களை … Read more

அடுத்த குடியரசு தலைவர் இவர்தனா? ரகசிய ஆலோசனை., மறுப்பு., விருப்பம்.!

வருகின்ற ஜூலை மாதத்துடன் தற்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவி காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது ஒரு மாற்று அணியை உருவாக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவு <!– முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி ஜார்ஜ்டவு… –>

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நிபந்தனை ஜாமீன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது திமுக பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கப்படாததால் ஜெயக்குமார் சிறையிலேயே இருப்பார் Source link

'சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல': திக பொதுச்செயலாளர் துரைசந்திரசேகர்

கடலூர்: மன்னர்கள் கட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்யக் கோரி சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் துரைசந்திரசேகர் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில்(கனகசபை) ஏற சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை தீட்சிதர்கள் தாக்கி சாதிப் பெயரைச் கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு … Read more

"வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள்" – திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது… எதிர்கட்சியை பழி வாங்கும் நடவடிக்கையாக அமைச்சர் ஜெயகுமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியை நசுக்கும் முயற்சியில் முதல்வர் … Read more

ஜெயலலிதா பிறந்தநாள்: இபிஎஸ் செய்யாததை செய்து காட்டிய ஸ்டாலின்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, … Read more

பதிலடி கொடுக்கும் உக்ரைன்., இருதரப்பில் உயிர்சேதம்., இரு நாடுகளும் வெளியிட்ட பலி எண்ணிக்கை.!

உக்ரைனின் இரு நகரங்களை ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏவுகணை, ராணுவ டாங்கி, போர் விமானங்கள் மூலம் உக்ரைன் நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.  மேலும், உக்ரைன் நகரங்கள் மீது பாராசூட் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை ரஷ்யா களமிறக்கி உள்ளது. உக்ரைனின் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் மேலும் இரு பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் ரஷ்ய … Read more

உக்ரைனில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு தொலைபேசி எண்கள் வெளியீடு <!– உக்ரைனில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு தொலைபேசி எண்கள்… –>

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. அலயக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள தமிழக அரசு, உக்ரைனில் வாழும் தமிழர்களுக்கு உதவி தேவைப்பாட்டல் அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய சிறப்பு தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் வசிக்கும் தமிழர்களில் உதவி தேவைப்படுவோர் … Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

சென்னை: “மத்திய அரசின் மூலம் தனி விமானம் ஏற்பாடு செய்து உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய அழுத்தங்களை தமிழக அரசு தர வேண்டும்” என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை அறிவித்து குண்டுகளை வீசி வரும் நிலையில், அந்த நாட்டிற்கு கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்றுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க … Read more

”அதிமுகவில் தற்போது தலைமையே கிடையாது” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

“அதிமுகவில் தலைமையே கிடையாது. தற்போது உள்ளவர்கள் கட்சியை வழி நடத்தவே நாங்கள் உருவாக்கியுள்ளோம். பணபலம் மற்றும் அதிகார பலம் தான் திமுக வெற்றிக்கு காரணம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், … Read more