69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா? – விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: 69 சதவீத இடஒதுக்​கீடு முறை​யாக செயல்​படுத்​தப்​பட்​டதா என்​பது குறித்து நீதிபதி தலை​மை​யில் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்க வேண்​டும்’ என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: 69 சதவீத இடஒதுக்​கீட்​டைப்பின்​பற்றி பணி​யாளர்​களைத் தேர்வு செய்​யும்​போது, முதலில் பொதுப்​போட்​டிப் பிரிவுக்​கான 31 சதவீத இடங்​கள் தகுதி அடிப்​படை​யில் நிரப்​பப்பட வேண்​டும். அதில் சாதி பார்க்​கக் கூடாது. அதன்​பின், பின்​னடைவுப் பணி​யிடங்​கள் ஏதேனும் இருந்​தால், அவை உரிய இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினரைக் கொண்டு நிரப்​பப்பட வேண்​டும். … Read more

“விஜய் அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை” – அண்ணாமலை கருத்து

சென்னை: ‘அனு​மதி பெற்​று​த்தான் கரூர் செல்ல வேண்​டும் என்ற நிலை இல்​லை. கரூர் பாது​காப்​பான ஊர். விஜய் தைரிய​மாக வரலாம்’ என அண்​ணா​மலை தெரி​வித்​தார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தாயார் மறைவையொட்​டி, சென்னை சாலிகி​ராமத்​தில் உள்ள அவரது வீட்​டுக்​குச் சென்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை நேற்று அஞ்​சலி செலுத்​தி​னார். அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்​தில் எல்​லோருக்​கும் எந்த இடத்​துக்கு செல்​லவும் உரிமை உண்டு. என்​னைப் பொறுத்தவரை கரூர் சென்று பாதிக்​கப்​பட்ட மக்​களை … Read more

தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்! ரூ.15 லட்சம் எளிய கடன், 15% மானியம் – முழு விவரம்

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு படித்து வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு 15 விழுக்காடு மானியத்துடன் 15 லட்சம் ரூபாய் தொழில் கடன் வழங்குகிறது. முழு விவரம் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வட சென்னையின் முக்கிய ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முக்கிய ரவுடி நாகேந்திரன் நேற்று காலை உடல்நலக் குறைவால் உரிழந்தார். சென்னை வியாசர்பாடியை பூர் வீகமாகக் கொண்டவர் நாகேந்திரன் (52). இவருக்கு உஷா மற்றும் விசாலாட்சி என்ற இரு மனைவிகள். 3 பிள்ளைகள் உள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான மூத்த மகன் அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியின் மாணவரணி முன்னாள் தலைவராகவும் இருந்தார். 2-வது மகன் அஜீத்ராஜ் பாஜக-வில் பொறுப்பில் உள்ளார். 3-வது மகள் ஷாலினி. நாகேந்திரன் ஆரம்ப … Read more

ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு! எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே நாளில் தீர்வு

Ration Card : அக்டோபர் மாத த்துக்கான ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்களுக்கான தேதி வெளியானது. சென்னை, திருப்பூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புராதன சின்னங்கள், கோயில்கள், கட்டிடங்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் புராதன சின்ன ஆணையத்தை அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களில் ஆணையத்தை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, கோயிலில் சுற்றுச்சுவருக்கு மிக அருகில், கியூ காம்ப்ளக்ஸும், பக்தர்கள் … Read more

தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடியில் நிதியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும் என்று கோவையில் நேற்று தொடங்கிய உலகளாவிய ‘ஸ்டார்ட்அப்’ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு சார்பில், உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ இரண்டு நாள் மாநாடு கோவையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழகம் ஈர்த்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட 6 மடங்கு … Read more

‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலர் 2025: நடிகர் சிவகுமார் வெளியிட்டார் 

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ 2025 தீபாவளி மலரை, நடிகர் சிவகுமார் சென்னையில் நேற்று வெளியிட்டார். ‘இந்து தமிழ் திசை’யின் ‘தீபாவளி மலர்’ 2013-ம் ஆண்டு முதல் வெளியாகிவருகிறது. 2025 தீபாவளி மலர் 276 பக்கங்களுடன் அனைத்து வயதினரும் படிக்கும் வகையிலான பல்வேறு சிறப்பு படைப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மலரில் இடம் பெற்றுள்ள தமிழ் சினிமாவின் கானக்குயில் பி.சுசீலாவின் ஈடற்ற இசைப் பங்களிப்பு, நூற்றாண்டு கண்ட திரை ஆளுமைகளான ஆர்.எஸ்.மனோகர், எம்.பி.சீனிவாசன், கலை கங்காஆகியோரின் தனித்தன்மைகள், சிறப்புகள் குறித்து … Read more

அதிமுகவின் 54-ம் ஆண்டு தொடக்கவிழா: அக்.17, 18-ம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள்

சென்னை: அ​தி​முக​ பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மாபெரும் மக்​கள் பேரியக்​க​மாம் அதி​முக, அக்​.17-ம் தேதி 54-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைப்​பதை முன்​னிட்​டு, அக்​.17, 18-ம் தேதி​களில், கட்சி அமைப்​புரீ​தி​யாக செயல்​பட்டு வரும் 82 மாவட்​டங்​களி​லும்; புதுச்​சேரி, ஆந்​திரா உள்​ளிட்ட பிற மாநிலங்​களி​லும் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெற உள்​ளன. அதற்​கான இடங்​கள், அவற்​றில் கலந்​து​கொண்டு சிறப்​புரை​யாற்​று​வோர் விபரங்​கள் அடங்​கிய பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி17-ம் தேதி சேலத்​தில் நான் உரை​யாற்​றுகிறேன். மாவட்​டச் செய​லா​ளர்​கள், தங்​கள் மாவட்​டத்​தில் நடை​பெற உள்ள … Read more

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது

கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டு நரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் … Read more