69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா? – விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: 69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா என்பது குறித்து நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 69 சதவீத இடஒதுக்கீட்டைப்பின்பற்றி பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, முதலில் பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31 சதவீத இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அதில் சாதி பார்க்கக் கூடாது. அதன்பின், பின்னடைவுப் பணியிடங்கள் ஏதேனும் இருந்தால், அவை உரிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். … Read more