மதுரையில் களைகட்டிய முருக பக்தர்கள் மாநாடு – பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு

மதுரை: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்தார். காலை முதலே மாநாடு நடைபெறும் திடலுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வேல்களை ஏந்தியும், காவடி எடுத்தும் வருகை தந்தனர். மாநாட்டு திடலில் திரண்ட பக்தர்கள்: மதுரை ரிங்ரோடு அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் பங்கேற்க, வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதலே … Read more

''முருகப்பெருமான் முதல்வர் பக்கம் இருக்கிறார்'' – அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவர்கள் நடத்துகின்ற இன்றைய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு,” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை அயனாவரம், காசி விஸ்வநாதர் கோயிலில் பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளை இன்று (ஜூன் 22) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் … Read more

ஆரிய கலாச்சாரத்தை திணிக்க பாஜக முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆரிய கலாச்சாரத்தை திணிக்க, மத்தியில் ஆளும் பாஜக முயன்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். ஈரோட்டில் இன்று நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமையில், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன ராஜ் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ஈரோட்டில் இன்று நடைபெறவுள்ள … Read more

கோவை அருகே உள்ள இந்த 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம போயிடுங்க!

பலருக்கும் சுற்றுலா செல்வது விருப்பமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கோவை அருகே உள்ள பின்வரும் 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம கண்டிப்பாக போயிடுங்க. 

இஸ்ரேல், ஈரானில் தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்க சீமான் வலியுறுத்தல்

இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடும் போர் மூண்டுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் பல்வேறு பணிகளுக்காக சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஈரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள், தாயகம் திரும்ப … Read more

இந்துக்கள் தான் முஸ்லீம், கிறிஸ்டின் ஆக மாறி உள்ளனர் – அமைச்சர் ஐ . பெரியசாமி!

இந்துக்களாக இருந்தவர்கள் தான் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறி உள்ளனர். அனைவரும் ஒன்றுதான், தமிழ் மண்ணில் பாஜக கால் பதிக்க முடியாது – அமைச்சர் ஐ . பெரியசாமி பேட்டி!

மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க ஜூலை 1 முதல் விண்ணப்பம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்று, மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடத்திய பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், உள்ளாட்சி பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கி. சமூகநீதி நிலைநாட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டும் விழா, சென்னை வள்ளுவர் கோட்ட அரங்கில் நேற்று … Read more

கொடைக்கானலில் இந்த இடத்திற்கு செல்ல தடை! வனத்துறை அறிவிப்பு!

Kodaikanal Tourist Spot: கொடைக்கானலில் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மூன்று நாள் தடை என்று வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை சார்பில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் யோகா தினம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துறை செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவத் துறை மற்றும் ஓமியோபதி ஆணையர் விஜயலட்சுமி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, … Read more

இயேசு, அல்லாவை கும்பிட்டால் மத கலவரம் வராதா? மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி

Murugan Pakthargal Manadu: முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசி உள்ளார்.