இஸ்ரேல், ஈரானில் தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்க சீமான் வலியுறுத்தல்

இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடும் போர் மூண்டுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் பல்வேறு பணிகளுக்காக சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஈரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள், தாயகம் திரும்ப … Read more

இந்துக்கள் தான் முஸ்லீம், கிறிஸ்டின் ஆக மாறி உள்ளனர் – அமைச்சர் ஐ . பெரியசாமி!

இந்துக்களாக இருந்தவர்கள் தான் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறி உள்ளனர். அனைவரும் ஒன்றுதான், தமிழ் மண்ணில் பாஜக கால் பதிக்க முடியாது – அமைச்சர் ஐ . பெரியசாமி பேட்டி!

மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க ஜூலை 1 முதல் விண்ணப்பம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்று, மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடத்திய பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், உள்ளாட்சி பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கி. சமூகநீதி நிலைநாட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டும் விழா, சென்னை வள்ளுவர் கோட்ட அரங்கில் நேற்று … Read more

கொடைக்கானலில் இந்த இடத்திற்கு செல்ல தடை! வனத்துறை அறிவிப்பு!

Kodaikanal Tourist Spot: கொடைக்கானலில் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மூன்று நாள் தடை என்று வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை சார்பில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் யோகா தினம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துறை செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவத் துறை மற்றும் ஓமியோபதி ஆணையர் விஜயலட்சுமி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, … Read more

இயேசு, அல்லாவை கும்பிட்டால் மத கலவரம் வராதா? மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி

Murugan Pakthargal Manadu: முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசி உள்ளார். 

முதல்வர், அமைச்சர்களுக்கு கொடுக்க வேண்டும் என குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக வழக்கு

தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் கட்டிங் கொடுக்க வேண்டுமெனக்கூறி குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கே.ஆர்.குகேஷ் தாக்கல் செய்திருந்த மனு: தமிழகம் முழுவதும் கனிமவளம் மற்றும் புவியியல் துறையிடமிருந்து முறையான அனுமதி மற்றும் உரிமம் பெற்று மணல், கல், கிராவல் குவாரிகளை நடத்தி வருகிறோம். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் … Read more

ஆங்கிலத்துக்கு அதிக முக்​கியத்து​வம் கொடுக்கின்றனர் என்ற பொருளில்தான் அமித்ஷா பேசினார்: இபிஎஸ்

கேலி சித்​திரம் மூலம் அவதூறு பரப்​பும் திமுக​வுக்கு வரும் தேர்​தலில் மக்​கள் தக்க தண்​டனை வழங்​கு​வார்​கள் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கீழடி அகழாய்வு குறித்து முன்​னாள் அமைச்​சர் பாண்​டிய​ராஜன் தெளி​வாக விளக்​கம் அளித்​துள்​ளார். முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா மற்​றும் எனது தலை​மையி​லான அதி​முக அரசு, கீழடி அகழாய்​வுக்​காக மேற்​கொண்ட நடவடிக்​கைகளை முழு​மை​யாக தெரி​வித்​து​விட்​டோம். விரும்​பும் தெய்​வங்​களை வழிபடு​வது நமது உரிமை. அந்த அடிப்​படை​யில், … Read more

மேட்​டூருக்கு நீர்​வரத்து 22,469 கனஅடி​யாக அதி​கரிப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: கர்​நாடகத்​தில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்து வரு​வ​தால், அங்​குள்ள அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கபினி அணை முழு கொள்​ளளவை எட்​டிய நிலை​யில், உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 8,218 கனஅடி​யாக​வும், மாலை 16,341 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று காலை 18,220 கனஅடி​யாக​வும், மாலை 22,469 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. அணையி​லிருந்து காவிரி … Read more

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் நேற்று காலமானார். அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த இவருக்கு மனைவி கலைச்செல்வி, மகள் சுபநிதி உள்ளனர். 1980-ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த அமுல் கந்தசாமிக்கு கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். மேலும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவானார். தொடர்ந்து, இளைஞரணி … Read more