தமிழக அரசை ஏமாற்றினேனா? தன் மீதான புகாருக்கு அண்ணாமலை பதிலடி!

குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தை செலவிடுங்கள் என்று தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு

சென்னை: நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வேற்​காடு, வீரராகவ புரத்​தில் செயல்​பட்டு வரும் அரசு ஆரம்​பச் சுகா​தார நிலை​யத்​துக்கு ஒவ்​வொரு வாரம் செவ்​வாய்க்​கிழமை​களில் 300-க்​கும் மேற்​பட்ட கர்ப்பிணி பெண்​களும், மற்ற நாட்​களில் 200-க்​கும் மேற்​பட்​டோரும் மருத்​துவ சிகிச்​சைக்​காக வந்து செல்​கின்​றனர். இந்த மருத்​து​வ​மனை ஆவடி – பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் அமைந்​திருப்​ப​தால், திரு​வேற்​காடு நகராட்சி மக்​கள் மட்​டுமின்றி சுற்று​வட்​டாரத்​தில் உள்ள மேல்​பாக்​கம், கண்​ணப்​பாளை​யம் உள்​ளிட்ட பகுதி மக்​களும் எளி​தாக வந்து மருத்​து​வம் பெற … Read more

எல்லோருக்கும் முதியோர் உதவித்தொகை – அமைச்சர் கொடுத்த குட் நியூஸ்

Senior citizen Pension : 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி(39). இவர், தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் செப்.9-ம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்- சத்தியகலா தம்பதியரின் மகன் ஹேம்சரண்(10), பெரும்புகலூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கவியரசன்(11) ஆகியோரும் அங்கு குளிக்க வந்துள்ளனர். இந்நிலையில், ஆற்றின் கீழ் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்த கவியரசன் திடீரென கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்தார். அப்போது, … Read more

உங்கள் முக்கிய ஆவணங்கள் சேதமாகிவிட்டதா? திரும்ப பெறுவது எப்படி?

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ், சொத்து பத்திரங்கள் போன்றவை தண்ணீரில் நனைந்துவிட்டால் அதனை எப்படி மீட்டெடுப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்

ஓசூர்: ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடந்த நான்கரை ஆண்டுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை சார்பில், முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு … Read more

16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

விழுப்புரம்: பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தன் (காந்தியின் மகன்) நியமிக்கப்படுவதாக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் அறிவித்தார். இதற்கு, மேடையிலேயே கட்சித் தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு … Read more

“அதிமுக என்ன செய்ய வேண்டும் என்பதை அமித் ஷா முடிவு செய்வாரா?” – ஆ.ராசா எம்.பி விமர்சனம்

சென்னை: “அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அமித் ஷாதான் முடிவு செய்வாரா? அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன்?” என் திமுக எம்.பி ஆ.ராசா கேள்விகளை எழுப்பி விமர்சித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், ஒன்றிய அரசால் நடத்தபடுகின்ற கூட்டாட்சி தத்துவத்தின் படுகொலைக்கு எதிரான எதிராகவும், எல்லா … Read more

கடலூர், விழுப்புரம் உட்பட 4 மாவட்டங்களில்.. நாளை கனமழை! சென்னையில் எப்படி?

Heavy Rain Alert: தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 12) கடலூர், விழுப்புரம் உட்பட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என போராடி வருகிறோம்: சீமான்

பரமக்குடி: ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்து அதிகாரத்துக்காக போராடி வருகிறோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரமக்குடியில் தெரிவித்தார். ராமநாதபுரம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ் சமூகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றால் தமிழினம் தாழ்கிறது என்பது எங்களது நோக்கம். தாழ்த்தப்பட்டவர் என்ற … Read more