ஆங்கிலத்துக்கு அதிக முக்​கியத்து​வம் கொடுக்கின்றனர் என்ற பொருளில்தான் அமித்ஷா பேசினார்: இபிஎஸ்

கேலி சித்​திரம் மூலம் அவதூறு பரப்​பும் திமுக​வுக்கு வரும் தேர்​தலில் மக்​கள் தக்க தண்​டனை வழங்​கு​வார்​கள் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கீழடி அகழாய்வு குறித்து முன்​னாள் அமைச்​சர் பாண்​டிய​ராஜன் தெளி​வாக விளக்​கம் அளித்​துள்​ளார். முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா மற்​றும் எனது தலை​மையி​லான அதி​முக அரசு, கீழடி அகழாய்​வுக்​காக மேற்​கொண்ட நடவடிக்​கைகளை முழு​மை​யாக தெரி​வித்​து​விட்​டோம். விரும்​பும் தெய்​வங்​களை வழிபடு​வது நமது உரிமை. அந்த அடிப்​படை​யில், … Read more

மேட்​டூருக்கு நீர்​வரத்து 22,469 கனஅடி​யாக அதி​கரிப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: கர்​நாடகத்​தில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்து வரு​வ​தால், அங்​குள்ள அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கபினி அணை முழு கொள்​ளளவை எட்​டிய நிலை​யில், உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 8,218 கனஅடி​யாக​வும், மாலை 16,341 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று காலை 18,220 கனஅடி​யாக​வும், மாலை 22,469 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. அணையி​லிருந்து காவிரி … Read more

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் நேற்று காலமானார். அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த இவருக்கு மனைவி கலைச்செல்வி, மகள் சுபநிதி உள்ளனர். 1980-ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த அமுல் கந்தசாமிக்கு கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். மேலும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவானார். தொடர்ந்து, இளைஞரணி … Read more

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்த க.பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. … Read more

“எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை

சென்னை: “பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் அதனுடைய சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், நிச்சயம் ஏமாற மாட்டார்கள்” என என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டின் நிதியுதவியும், கார்ப்பரேட்டுகளின் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது பாஜக ஆட்சியில் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக பொருளாதார கொள்கைகளை வடிவமைத்து அதன்மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து அவர்கள் பெரும் … Read more

கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: இந்து முன்னணிக்கு இடதுசாரிகள் கண்டனம்

திண்டுக்கலில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்) அமைப்புகளும், உறுப்பினர்களும் கடந்த 11-ம் தேதி முதல் பத்து நாட்களாக , பாஜக மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் … Read more

நாட்டுக்கோழி வளர்ப்பில் கோடீஸ்வரராக வேண்டுமா? திருநெல்வேலி மக்களுக்கு குட் நியூஸ்

Tirunelveli chicken farm scheme : திருநெல்வேலி மக்கள் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

முருக பக்தர்கள் மாநாடு: மதுரையில் குவியும் பக்தர்கள் – 1,500 போலீஸார் பாதுகாப்பு

மதுரை: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு … Read more

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அதிமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். டி.கே.அமுல் கந்தசாமி: … Read more

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு: இபிஎஸ் இரங்கல்

சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டாபாளையத்தைச் சேர்ந்தவர் டி.கே.அமுல் கந்தசாமி. இவர் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் அதிமுகவில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட … Read more