கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: இந்து முன்னணிக்கு இடதுசாரிகள் கண்டனம்

திண்டுக்கலில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்) அமைப்புகளும், உறுப்பினர்களும் கடந்த 11-ம் தேதி முதல் பத்து நாட்களாக , பாஜக மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் … Read more

நாட்டுக்கோழி வளர்ப்பில் கோடீஸ்வரராக வேண்டுமா? திருநெல்வேலி மக்களுக்கு குட் நியூஸ்

Tirunelveli chicken farm scheme : திருநெல்வேலி மக்கள் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

முருக பக்தர்கள் மாநாடு: மதுரையில் குவியும் பக்தர்கள் – 1,500 போலீஸார் பாதுகாப்பு

மதுரை: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு … Read more

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அதிமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். டி.கே.அமுல் கந்தசாமி: … Read more

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு: இபிஎஸ் இரங்கல்

சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டாபாளையத்தைச் சேர்ந்தவர் டி.கே.அமுல் கந்தசாமி. இவர் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் அதிமுகவில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட … Read more

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது: ஆளுநர் ரவி

மதுரை: “மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜூன் 22) நடைபெறுகிறது. அதனையொட்டி மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் பூஜைகள் … Read more

பெண்களுக்கான சூப்பர் திட்டம், 50 சதவீதம் மானியம் உண்டு – தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு

Tamil Nadu Government Scheme : பெண்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் ஒரு சூப்பர் திட்டம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தகுதியான பெண்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

மதுரை மாதிரி அறுபடை வீடுகளில் ஆதீனம், ஹெச்.ராஜா தரிசனம்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் மாதிரி கோயில்களில் மதுரை ஆதீனம், புதுச்சேரி அமைச்சர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் நேற்று தரிசனம் செய்தனர். பின்னர், ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறுபடை வீடுகள் கண்காட்சியை பார்வையிட நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்து விரோத தீயசக்திகள் குரைக்கின்றன. இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மக்களை போகச் சொல்லியிருக்க வேண்டும். … Read more

முருக பக்தர்கள் மாநாடு: இபிஎஸ் அதிரடி கருத்து… உடனே நயினார் சொன்னதை பாருங்க!

Tamil Nadu News: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த பதிலை இங்கு காணலாம்.

பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் முடிந்தது: பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த இடமில்லை

பேசின் பாலம் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. அங்கு பராமரிப்பு ஒப்பந்தம்முடிந்ததால், பயணிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு விரைவில் தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை சென்ட்ரலை அடுத்து அமைந்துள்ள முக்கியமான நிலையம் பேசின்பாலம் ரயில் நிலையம். இந்த நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என இரு வழித்தடங்களாக ரயில்கள் பிரிந்து செல்லும். இங்குள்ள ரயில் நிலையத்தில் தினசரி 10,000-க்கும் மேற்பட்டோர் பயணம் … Read more