எல்லாம் முடிஞ்சு போச்சு..! கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்!
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பெற்றதாக அதிமுக அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சியில் பெரும் சலசலப்பு நிலவு வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பெற்றதாக அதிமுக அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சியில் பெரும் சலசலப்பு நிலவு வருகிறது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை தவறிய நிலையில், கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக மழை அதிகரித்தது. … Read more
சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் அக். 9-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (அக். 4) முதல் வரும் 9-ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் … Read more
சென்னை: அண்மையில் முடிவுற்ற தொடர் விடுமுறை நாட்களில் கடுமையாக உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை செலுத்தி பயணித்த பொதுமக்கள், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண அரசு முயற்சிக்குமா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். விடுமுறை, விழா நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தடுக்க முடியாததாக மாறிவிட்டது. இதனால்சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் கல்வி, பணி நிமித்தமாக தங்கியிருப்போர் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியே சொந்த ஊர் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர். இதில் குடும்பமாக சொந்த … Read more
சென்னை: ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை … Read more
கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் 91 லட்சம் பேர் தொடர்ச்சியாக … Read more
சென்னை: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று திராவிடத்துக்கு புதிதாக ஒரு பொழிப்புரையை வழங்கி வரும் திராவிட ஆட்சியாளர்கள் எப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போகிறார்கள்? எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்வதல்ல சமூக நீதி; எல்லார்க்கும் எல்லாம் சரியான அளவில், சமமான அளவில் கிடைக்கச் செய்வதே உண்மையான சமூக நீதி என்பதை எப்போது உணரப்போகிறது ‘திராவிட மாடல்’ திமுக அரசு?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more
மதுரை: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 3 கர்ப்பிணிகள் மரணத்தில் தமிழக அரசு நீதி விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செப்டம்பர் முதல் வாரத்தில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட … Read more
கோவை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசினர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருந்தது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா குறித்தும் பேசியதால், பாஜக – அதிமுக கூட்டணியில் மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில், பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் … Read more