தமிழகத்தில் உள்ள யானைகள் எண்ணிக்கை எவ்வளவு? அறிக்கை 2023ஐ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

காடுகளை உருவாக்குவதில் யானைகளின் மிகவும் முக்கியமானது. ஒரு யானை தனது வாழ்நாளில் கிட்டதட்ட ஒரு முழு காட்டையே உருவாக்கி விடுகிறது. இவை உருவாக்கி செல்லும் வழித்தடங்கள் தான் மற்ற விலங்குகளுக்கு பாதையாக அமைகிறது. ஏன் மனிதர்களுக்கும் அப்படித்தான் எனலாம். காடுகளை அழிப்பது, மனிதர்கள் – விலங்குகள் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் இடம்பெயர தொடங்கி கடைசியில் மனிதர்கள் வாழும் இடத்திற்குள்ளேயே நுழைந்து விடுகிறது. கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை இதனால் ஏற்படும் … Read more

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸை ஸ்டாலின் நிர்பந்திக்காதது ஏன்? – இபிஎஸ் கேள்வி

சென்னை: “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக பாசனத்துக்கு கர்நாடக காங்கிரஸ் உடனடியாக காவிரியில் வழங்க வேண்டிய பங்கு நீரை வழங்கினால்தான், பெங்களூருவில் நடைபெறும் கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்று முதல்வர் ஸ்டாலின் நிர்பந்தப்படுத்தி இருந்தால், காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்திருக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகள் கஷ்டத்துக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து, கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலை … Read more

"மு.க. ஸ்டாலினுக்கு இனி தூக்கமே இருக்காது".. ஆட்டமே இனிதான் இருக்கு.. ஜெயக்குமார் மிரட்டல் பேச்சு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்திருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார், இனி முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது சகாக்களுக்கும் தூக்கமே இருக்காது என்றும், இனிதான் ஆட்டமே ஆரம்பித்திருக்கிறது எனவும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை நீதிமன்ற அனுமதிக்கு பிறகு அமலாக்கத்துறை நேற்று காவலில் எடுத்துச் சென்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்தறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது வீடுகள் … Read more

பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்க இலங்கை துணை தூதரகம் செல்ல அனுமதி: முருகனுக்காக நளினி மனு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை சென்றுவர அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த 2022 ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற முருகன் … Read more

வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்சினையா? வரும் 21ஆம் தேதி வரை டைம்… மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய குடிமகனாக அங்கீகரிக்கவும், பொதுத்தேர்தலில் வாக்களிக்கவும் மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது வாக்காளர் அடையாள அட்டை. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்காக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் அடையாள அட்டை தற்போது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. எனவே இதற்காக விண்ணப்பிக்கும் போது உரிய ஆவணங்கள் உடன் புகைப்படமும் … Read more

மேட்டூர் அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து – 3 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

மேட்டூர்: மேட்டூர் அருகே வேலூர் குடிநீர் நீரேற்று நிலையம் அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் அணைத்தனர். மேட்டூர் தொட்டில்பட்டி அருகே வேலூர் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இதன் அருகே பி.என்.பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி குப்பை, சிறு, குறு தொழிற்பேட்டை கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக மாறியுள்ளது. இந்த குப்பை கிடங்கில் … Read more

முதல் பத்திரிகையே மீனாட்சிக்குதான்… 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள்… சுடச்சுட அறுசுவை விருந்து… களைக்கட்டும் அதிமுக மாநாடு!

அதிமுக எழுச்சி மாநாடு வரும் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநடு இதுவாகும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக ஆளுங்கட்சிக்கும் எதிர் அணியினருக்கும் தங்களின் பலத்தையும் செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த அதிமுக … Read more

அரூர் அருகே டோல்கேட் அமைக்க எதிர்ப்பு – அதிமுக எம்எல்ஏக்கள் முற்றுகையால் பணி நிறுத்தம்

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர்- சேலம் வழியில் ரூ. 320 கோடி மதிப்பீட்டில் ஊத்தங்கரை முதல் ஏ.பள்ளிபட்டி வரையில் நான்கு வழிச் சாலை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக முடிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரூர் அடுத்துள்ள எருமியாம்பட்டி மற்றும் எச். புதுப்பட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் டோல்கேட் (சுங்கச்சாவடி) அமைக்கும் பணி ரூ.11 கோடி மதிப்பீட்டில் கடந்த 7 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது டோல்கேட் அமைய உள்ள இடத்தில் சிமெண்ட் தரைத்தளம் … Read more

"செந்தில் பாலாஜி உப்பு தின்னது இருக்கட்டும்.. மனோ தங்கராஜ் சாப்பிட்டது தெரியுமா?" எச். ராஜா சூசகம்

சென்னை: செந்தில் பாலாஜி குறித்து கேள்விக்கு உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்த நிலையில், அதை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு நடந்த மருத்துவமனை படலங்களுக்கு பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்ற அனுமதியின் … Read more

100 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவப் பெண்கள் பயன்பெறும் 'பெண்கள் இணைப்பு திட்டம்'- எம்எஸ்எஸ்ஆர்எஃப் தொடக்கம்

சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், 100 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவப் பெண்கள் பயன்பெறும் ‘பெண்கள் இணைப்பு திட்டத்தை’, அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். எம்எஸ்எஸ்ஆர்எஃப் அமைப்பின் சார்பில் ‘உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்காக வலிமைமிகு சிறு தானியங்கள்’ என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 6 தொடங்கி இன்று (ஆகஸ்ட் 8) வரை நடைபெற்றது. இதில், 100 கடலோர கிராமங்களைச் சேர்ந்த … Read more