சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியபோது நிகழ்ந்த சோகம் – குன்னூர் பேருந்து விபத்து நடந்தது எப்படி?

குன்னூர்: தென்காசியில் இருந்து உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் திரும்பும் போது குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமுற்று குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி கடையம் பகுதியில் இருந்து 54 பேர் உதகைக்கு பேருந்தில் சுற்றுலா வந்தனர். சுற்றுலா முடிந்து குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று … Read more

மதுரையில் டிசம்பர் மாதம் எஸ்டிபிஐ கட்சியின் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’

மதுரை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரும் டிசம்பர் மாதம் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களில் ஒன்று மதச்சார்பின்மை. ஆனால், தற்போதைய பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்பு சாசனத்திலிருந்து மதச்சார்பின்மை, சோசலிசம் வார்த்தைகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு செய்துவருகின்றது. நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், … Read more

குன்னூரில் விபத்து… 8 பேர் பலி – பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பேருந்தில் தொடரும் மீட்பு பணி

Nilgris Bus Accident: உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது, குன்னுார் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.40 லட்சத்தில் இருதய எக்கோ பரிசோதனைக் கருவி

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.40 லட்சத்தில் நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய சமுதாய பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சத்தில் நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கலந்துகொண்டு நவீன எக்கோ பரிசோதனை அறையை ரிப்பன் வெட்டித் … Read more

''தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர விரும்புகிறோம்'' – இராம ஸ்ரீனிவாசன் சிறப்புப் பேட்டி

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்… கூட்டணி பிளவுக்கான காரணம் குறித்து பேசவேண்டாம் என்று கட்சித் தலைமை எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது… சூடான விமர்சனங்களை தவிர்க்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தி இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது… பிரச்சினையை சரி செய்ய தேசிய தலைமை பேசிக்கொண்டிருக்கிறது…” என்கிறார் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணல் இது. … Read more

“நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்” – கே.பி.முனுசாமி கொந்தளிப்பு

கிருஷ்ணகிரி: “நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கொந்தளிப்புடன் தெரிவித்தார். இது குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி குறித்த அதிமுகவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றி விட்டோம். அதிமுக, பாஜக கூட்டணி இடையே ஏற்பட்ட முறிவுக்கு, அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்கிற … Read more

“தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்… பேச்சு நடத்த முன்வராத அரசு” – அன்புமணி கண்டனம்

சென்னை: “பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அனுப்பி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற … Read more

அப்போ கருமுட்டை திருட்டு.. இப்போ மாணவி மரணம்..! மருத்துவமனை வாசலில் போராடும் பெற்றோர்!

ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்காத காரணத்தால் தங்களது 17 வயது மகள் உயிரிழந்ததாக கூறி  மருத்துவமனையின் முன்பு பெற்றோர் தர்ணா போராட்டம் நடத்தினர். என்ன நடந்தது என்பதை காணலாம்.  

'என்றென்றும் அதிமுககாரன்' – எஸ்.பி.வேலுமணியின் சமூக வலைதளப் பதிவு: சர்ச்சைகளுக்கு பதிலடி!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தளத்தில் ‘என்றென்றும் அதிமுககாரன்..’ என்று பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அந்தக் கேப்ஷனுடன் அவர் ஒரு பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அது அதிமுக கொடியுடன் அவர் சைக்கிள் பேரணி சென்ற புகைப்படமாகும். தனது ஆரம்பகாலத்தை நினைவுகூர்ந்து இன்றும், என்றும் தான் அதிமுககாரன் என்று அவர் வலியுறுத்தும் வகையில் அந்தப் படம் அமைந்துள்ளது. திடீர் பதிவின் பின்னணி என்ன? அதிமுகவில் எஸ்.பி.வேலுமணியால் பிளவு ஏற்படலாம், அவர் மகாராஷ்டிராவின் தற்போதைய … Read more

அக்.1 முதல் பொதுக்குழு, கிராம கூட்டங்கள்: பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு

சென்னை: வரும் அக். 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ஒன்றிய, கிராம கூட்டங்கள் உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பாமக நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மக்களவைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் … Read more