அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு உயர்வு

சென்னை: அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம், தணிக்கை) சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு (அப்பார்ட்மெண்ட்) உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து கட்டிட நிறைவு சான்றுபெறப்படுகிறது. கட்டுமான நிறுவனங்களால் அடிநிலம் (யுடிஎஸ்) மற்றும் கட்டிடமும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கிரய ஆவணத்தில் அடிநிலம் மட்டுமே காட்டப்படுகிறது. இனிமேல், கட்டிடநிறைவு சான்று பெறப்பட்ட அப்பார்ட்மெண்ட் வீடுகளை அடிநிலத்துடன் கட்டிடமும் சேர்ந்து விற்பனைஆவணமாக பதிவு செய்ய … Read more

"உப்பு தின்னா தண்ணி குடிச்சுதான் ஆகணும்".. செந்தில் பாலாஜி கைது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறிய பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி கைது விவகாரம் திமுக ஆட்சிக்கே ஒருவிதத்தில் பின்னடைவை ஏற்படுத்தியதாகவே கருதப்படுகிறது. பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தமிழகத்தையும் … Read more

கோவை தம்பதியின் 3 வயது குழந்தைக்கு ‘சாதி, மதம் இல்லை’ என சான்று 

கோவை: கோவையில் தங்கள் குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என ஒரு தம்பதியினர் வருவாய்த் துறையிடமிருந்து சான்று பெற்றுள்ளனர். கோவை பீளமேடு காந்திமாநகரைச் சேர்ந்தவர்கள் பீனா பிரீத்தி – பிரலோப் தம்பதியினர். இவர்களது மகள் பி.பீ.ஹாதியா (3). ஹாதியாவுக்கு சாதி, மதம் இல்லையென சான்று பெற விரும்பிய தம்பதியர், கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இன்று (ஆக.8) சான்று பெற்றுள்ளனர். இது தொடர்பாக பீனா பிரீத்தி கூறியதாவது: “எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை மட்டும் இருந்தால் … Read more

செந்தில் பாலாஜி வீட்டில் சிக்கியவை என்ன? அமைச்சரை சமஉ ஆக சுருக்கிய அமலாக்கத்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மே 13ஆம் தேதி சோதனை நடத்தியது. அப்போதே அவரிடம் விசாரணை நடத்தி மே 14 அதிகாலை கைது செய்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. … Read more

வருமான வரி அலுவலர்களை திமுகவினர் தாக்கிய வழக்கு ஆக.7-க்கு ஒத்திவைப்பு

கரூர்: வருமான வரித்துறை அலுவலர்கள் தாக்கிய வழக்கில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுகவினர் 15 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. தீர்ப்பை ஆக. 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். கரூர் செங்குந்தபுரம் குறுக்குத்தெருவில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த மே 26ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்ட திமுகவினர் அதிகாரிகளை தடுத்து தாக்கி, அவர்களது கார் … Read more

இஸ்லாமியர்கள் குறித்த சீமானின் கருத்து ஆபத்தானது.. சங் பரிவாரங்களுக்கு துணை போகிறார்.. திருமாவளன் அட்டாக்

சென்னை: இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் இல்லை என்று பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சீமானின் பேச்சு எவ்வாறு சங் பரிவாரங்களின் கருத்துகளோடு ஒத்துப்போகிறது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சமீபகால பேச்சுகள் பெரிய அளவில் சர்ச்சையாகி வருகின்றன. மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறினார். … Read more

மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிவு – நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிந்தது

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிந்த நிலையில், நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது. மேட்டூர் அணை நீர்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவை கொண்டது. அணை கட்டப்பட்டபோது, காவிரி கரையில் இருந்த மக்கள் மேடான பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது, விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேஸ்வரர் கோயில், பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றை அப்படியே விட்டு சென்றனர். அணை நீர்மட்டம் குறையும் போது, காவிரி … Read more

"டெல்லிக்கு உடனே வாங்க".. அண்ணாமலைக்கு பாஜக தலைமை திடீர் அழைப்பு.. அப்போ பாதயாத்திரை..?

மதுரை: தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாதயாத்திரை நடைபெற்று வரும் நிலையில், அவரை உடனடியாக டெல்லிக்கு வருமாறு அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார். இதன்பேரில் பாத யாத்திரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார். இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு … Read more

33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்ட எஸ்பிக்களாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். > சேலம் எஸ்பி சிவக்குமார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். > திருச்சி எஸ்பியாக வருண் குமார் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார். > சேலம் எஸ்பியாக அருண் கபிலன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார். > பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த பொன்.கார்த்திக் குமார் அடையாறு … Read more

தொடரும் அமுதா ஐஏஎஸ் அதிரடி.. "நேற்று 27.. இன்னைக்கு 33".. மொத்தமா மாறிய ஐபிஎஸ் அதிகாரிகள்!

சென்னை: தமிழகத்தில் இது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் படலம் போலிருக்கிறது. நேற்று தான் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில், இன்றைக்கு 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் – ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு நிலைநிறுத்த இந்த அதிரடி மாற்றங்கள் நடந்திருப்பதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருச்சி, சேலம், மதுரை என தமிழகம் முழுவதும் பரவலாக … Read more