அண்ணாமலை நடை பயணமா செய்கிறார்? கடுமையாக சாடிய கேஎஸ் அழகிரி!

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை இன்று 8வது நாளாக நடை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை 8வது நாளான இன்று மதுரை மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடை பயணத்தின் போது திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சாதனைகளையும் விளக்கி வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு … Read more

27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மதுரை கோவை திருச்சி திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்படுகிறார். > குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வன்னியபெருமாள் நியமிக்கப்படுகிறார். > … Read more

அதிமுக தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேச இதுதான் காரணம்… பகீர் கிளப்பும் காயத்ரி ரகுராம்!

தமிழக பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம், தொடர்ந்து அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள வார்த்தை மோதலை வைத்தும் விளாசியிருக்கிறார் காயத்ரி ரகுராம். அண்ணாமலை மனைவியை வம்புக்கிழுத்த காயத்திரி ரகுராம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையெல்லாம் தங்களுக்கு ஜஸ்ட் லைக் தட் என்று கூறியிருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, செல்லூர் ராஜூ ஒரு அரசியல் விஞ்ஞானி ஒரு அரசியல் … Read more

தஞ்சை | வாகன தணிக்கையின்போது விபத்தில் பலியான தலைமைக் காவலர்: முதல்வர் ரூ.25 லட்சம் நிவராணம் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூரில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் காவல் நிலைய தலைமைக் காவலர், பழனிவேல் (38) வியாழக்கிழமை (ஆக.3) மாலை, உதவி ஆய்வாளர் தலைமையில், குருங்களூர் வெண்ணாற்றுப் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது கும்பகோணத்திலிருந்து … Read more

அமுதா ஐஏஎஸ் போட்ட ஆர்டர்… தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்!

தமிழகத்தில் நிர்வாக ரீதியில் பணிகள் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இடமாற்றம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் கடந்த ஜூன் மாதம் பதவியேற்றதும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக காவல்துறை டிஜிபி ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் இதேபோல் ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 4) தமிழக உள்துறை … Read more

கைம்பெண் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டுவிடுமா? நீதிபதிகள் வேதனை

கைம்பெண் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கை இன்னும் மாநிலத்தில் நிலவுவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  

தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் எஸ்.எஸ்.மீரானுக்கு துபாயில் இந்திய துணைத் தூதரகம் விருது

துபாய்: அமீரக திமுக பொறுப்பாளரும், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானின் சமூக சேவையை பாராட்டி துபாயில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற விழாவில் இந்திய தூதர் (பொறுப்பு) ராம்குமார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் விவகார செயலாளர் அப்துல்லா லஷ்காரி ஆகியோர் இந்த விருதை வழங்கினர். பணி நிமித்தமாக … Read more

'தொட்டான் கெட்டான்' அண்ணாமலைக்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடை பயணம் சென்ற அண்ணாமலையிடம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாமலையெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பதில் அளித்த அண்ணாமலை, யார் பேச்சுக்கு பதில் கூற வேண்டும் என்று ஒரு தரம் உள்ளது … Read more

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறதா? – அன்புமணி விளக்கம்

மதுரை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. 2026-ல் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கும்” என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நெய்வேலி நிறுவன முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். … Read more

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? மக்களே நோட் பண்ணிக்கோங்க!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஒரு வார காலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் இன்றைய தினத்துக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. புதுகோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் வியாழக் கிழமை … Read more