யூடர்ன் செய்த ஸ்டாலின் கார்… இறங்கி வந்து சர்ப்ரைஸ்… ஆடிபோன சிஆர் சரஸ்வதி!

சாலையில் நின்று வணக்கம் சொன்ன அமமுக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதிக்கு முதல்வர் ஸ்டாலின் சர்ப்ரைஸ் கொடுத்து திக்குமுக்காட செய்துள்ளார். ஸ்டாலின் ஆய்வுவடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.சென்னை அசோக் நகர்இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சென்னை அசோக் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அசோக் நகரில் … Read more

இந்திய ராணுவ மேஜர் ஜெனரலான முதல் தமிழ் பெண்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா. இவர் இந்திய ராணுவத்தின் மருத்துவ (Nursing) பிரிவில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். படிப்படியாக பல்வேறு பதவி உயர்வுகள் பெற்று, தற்போது மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழகத்தில் இப்பதவியை பெற்றுள்ள முதல் பெண் இவராவார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து … Read more

'சிறுபான்மையினரா? செருப்பால் அடிப்பேன்'… பத்திரிகையாளரிடம் சீறிய சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான , மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காட்டமாக விமர்சித்திருந்தார். சீமானின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேரும் பிரளயத்தை கிளப்பியது. பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் சீமானின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்தவர்கள் … Read more

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | மாணவர்களுடன் போட்டியை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் நேற்று (ஆக.3) தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா – சீனா அணிகளுக்கு இடையிலான போட்டியை மாணவர்களுடன் அமர்ந்து பார்த்திருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்தியா – சீனா இடையிலான போட்டியில் இந்தியா 7-2 … Read more

எடப்பாடியின் அருமை தெரியாத அண்ணாமலை: மீண்டும் அதிமுக – பாஜக இடையே டிஸ்யூம்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ள போதும், டெல்லியில் நடைபெற்ற அதன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற போதும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. எப்போது முதல் இந்த நிலை என்று கேட்டால், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை எப்போது பதவியேற்றாரோ அப்போதிருந்து என்று அடித்துச் சொல்கிறார்கள் அதிமுகவினர். திமுகவை விமர்சிப்பது போல் கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் விமர்சிப்பதையும், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அவமதிப்பதையும் எப்படி கூட்டணிக் கட்சி என்று எடுத்துக் கொள்வது என விழி … Read more

கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: ஹரியாணா அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “வெறுப்புணர்வும் பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது.ஹரியாணாவில் கலவரக்காரர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, விரைவில் இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹரியாணா மாநிலத்தில் அண்மையில் நடந்த மத வன்முறையில் பாதிக்கப்பட்டு, பெரும் வேதனைக்கும் கடுந்துயருக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோருக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் மனமிரங்குகிறேன். அமைதி, அகிம்சை, நல்லிணக்கத்துடன் வாழ்தல் … Read more

ரூ.6,448 கோடியில் சென்னை டூ கன்னியாகுமரி தொழில்தடத் திட்டம்… தேதி குறிச்ச அமைச்சர் எ.வ.வேலு!

தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நெடுஞ்சாலைத் துறையின் அனைத்து அலகுகளின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் தொடங்கியுள்ளது. இன்றும் (ஆகஸ்ட் 3), நாளையும் (ஆகஸ்ட் 4) என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் 2ஆம் நாள் ஆய்வுக் கூட்டத்தில் சென்னை டூ கன்னியாகுமரி தொழில்தடத் திட்டம் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர். ​மத்திய அரசின் சாகர்மாலா திட்டம்இந்த திட்டம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் … Read more

லுக்-அவுட் நோட்டீஸூக்கு எதிராக சுப.உதயகுமார் வழக்கு: நெல்லை எஸ்பி முடிவெடுக்க உத்தரவு 

மதுரை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை திரும்ப பெறுவது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 வாரத்தில் உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளால் எனது … Read more

"சங்கி சீமான்".. இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் இல்லையா.. அடித்து நொறுக்கிய ராஜீவ் காந்தி!

சென்னை: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் இல்லை என்று கூறிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுகவின் ராஜீவ் காந்தி தனது பாணியில் அதிரடியாக பதிலளித்துள்ளார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக கடந்த 30-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, “இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள்” என பேசினார். திமுகவையும், காங்கிரஸையும் ஆதரிப்பதால் அவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என அவர் குறிப்பிட்டார். சீமானின் இந்த பேச்சு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு செயலருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு 

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு துறை செயலர் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட 2 வார சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் பழைய பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தோட்டப்பணியாளராக பணிபுரிந்து 2006-ல் ஓய்வு பெற்றார். தனது பணியை 1979-ல் இருந்து வரன்முறைப்படுத்தி, அதற்குரிய பணப்பலன்களை வழங்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை பரிசீலிக்க 2012-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more