கோவையில் சாலைப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்: வடகிழக்குப் பருவமழைக்கு முன்பு முடிக்க உத்தரவு

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்துப் பணிகளும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.24) கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு, துளசி நகரில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், 5வது வார்டு , … Read more

குவைத்தில் உயிரிழந்த கணவரின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்: மனைவி வலியுறுத்தல்

கும்பகோணம்: குவைத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த கணவரின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என மாத்தூரைச் சேர்ந்த இவரது மனைவி வலியுறுத்தியுள்ளார். திருவிடைமருதூர் வட்டம், மாத்தூர், அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் முருகேசன்(50). எலக்டிரிஷியனான இவருக்கு சத்யா(40) என்ற மனைவியும், ஹரிஸ்(8), துர்கா(6) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இங்கு போதிய வருமானம் இல்லாததால், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி குவைத் நாட்டுக்கு வேலைக்காகச் சென்றார். ஆனால் அங்கு உரிய … Read more

பழநியை மிரட்டும் காட்டு யானைகள்..! – பயிர்களைக் காக்க போராடும் விவசாயிகள்

பழநி: பழநியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். பழநி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கிராமங்களில் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம், தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் இருப்பதால் யானை, காட்டு மாடு, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் அதிகம் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பழநி அருகேயுள்ள … Read more

”வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை தமிழகத்தில் டெபாசிட் வாங்கவிடக்கூடாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

திருப்பூர்: வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை, தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது என மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார். மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் தொட்டியபாளையத்தில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியானது திமுகவின் மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை நிகழ்வில் கட்சியினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற திமுக தலைவரும், … Read more

மதுரை | மனிதர்களே இறங்காமல் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் ‘ரோபாட்டிக்’ இயந்திரம்

மதுரை: மனிதர்களே இறங்காமல் மாநகராட்சி பாதாள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு சென்னை ஐஐடி (Indian Institute of Technology IIT) நிறுவனம் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட ரோபாட்டிக் வாகனம் மதுரை வந்துள்ளது. இந்த வாகனம், இன்று முதல் வார்டுகளில் பாதாள சாக்கடையை தூர்வாரும் பணியை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய மாநகராட்சியாக மதுரை இருக்கிறது. 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மதுரை மாநகரத்தில் கடந்த காலத்தில் … Read more

விருதுநகர் | பாஜக விழாவான வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகரில் இன்று நடந்த வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி பாஜக விழாபோல் நடைபெற்றது. நாடு முழுவதும் 9 இடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வந்தார். தமிழகத்தில் திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் மோடி இயக்கி வைத்தார். திருநெல்வேலியில் புறப்பட்டு இன்று பிற்பகல் 2.20 மணி அளவில் விருதுநகர் ரயில் நிலையம் வந்தடைந்தது. வந்தே பாரத் ரயிலுக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்காக … Read more

திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

திருநெல்வேலி: திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல் .முருகன், திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், திருநெல்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், … Read more

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை: ஜெயக்குமார்

சென்னை: “நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இப்போது எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. கூட்டணியைப் பொறுத்தவரையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கடந்த 18ம் தேதி எடுத்த முடிவில் மாற்றுக் கருத்து இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் … Read more

மின்கட்டண பிரச்சினை தொடர்ந்தால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும்: அன்புமணி

சென்னை: “மின்சாரக் கட்டண உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன இதேநிலை தொடர்ந்தால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடைவதுடன், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமாதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஓராண்டில் அடுத்தடுத்து இரு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. தொழில் மற்றும் வணிகப் பிரிவினருக்கான மின்சாரக் கட்டணம் … Read more