போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். iஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பொதுவாகவே, ஒவ்வோர் ஆண்டும் குடும்பத்தினருடனும், கிராமத்தினருடனும் இணைந்து பண்டிகைகளை கொண்டாடலாம் என்ற எண்ணத்தில், பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகளை முன்னிட்டு கூடுதலாக ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து, நகர்ப்புறத்திலிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு … Read more

போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் நீடிக்கிறது: 95% அரசுப் பேருந்துகள் இயங்கியதாக அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் நேற்று 95% அரசுப் பேருந்துகள் இயங்கியதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தர வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, டிடிஎஸ்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கின. நேற்று காலை முதலே சென்னையின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் … Read more

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல். தனது முடிவை முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ல் திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசின் தலைமை வழக்கறிஞராக அவர் நியமிக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம், தன் தந்தையும் புகழ்பெற்ற … Read more

பழனி கோவிலில் இனி இந்த விஷயங்கள் இருக்காது! புதிய விதிகள்!

இனி வரும் காலங்களில் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.    

துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழு அறிவிப்பாணைகளை திரும்பப் பெற்றார் ஆளுநர் ரவி

சென்னை: துணைவேந்தர்கள் நியமனத்துக்கான தேடுதல் குழு அறிவிப்பாணைகளை திரும்பப் பெற்றுக்கொண்ட தமிழக ஆளுநர், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும், யுஜிசி விதிகளுக்கு உட்பட்டும் புதிய தேடுதல் குழுவை தமிழக அரசு விரைவில் அமைக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்காக 3 பேர் … Read more

மதுரை கோட்டத்தில் 98% பேருந்துகள் இயக்கம்: மறியலில் ஈடுபட்ட 30 தொழிலாளர்கள் கைது

மதுரை: மதுரை, விருதுநகர், திண்டுக்கல் – தேனி மாவட்டங்கள் அடங்கிய மதுரை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட 30 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாத பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது … Read more

மதுரையில் துணை மேயர் வீடு, அலுவலகம் மீது தாக்குதல்; டூவீலர்களை சேதப்படுத்திய கும்பல்

மதுரை: மதுரையில் துணை மேயர் வீடு, அலுவலகத்தை தாக்கிய கும்பல் ஒன்று, வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த டூவீலர்களை அடித்து சேதப்படுத்தியது. மதுரை மாநகராட்சி துணை மேயராக இருப்பவர் நாகராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவரது வீடு ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் அருகிலுள்ளது. இன்று மாலை சுமார் 6.50 மணிக்கு வீட்டில் அவரும், அவரது மனைவியும் இருந்தனர். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். கதவை … Read more

குறைதீர் கூட்டத்தில் அளிக்கும் மனுக்களுக்கு பதிலும் இல்லை, தீர்வும் இல்லை: விவசாயிகள் புலம்பல் @ சிவகாசி

சிவகாசி: கோட்ட அளவில் நடத்தப்படும் குறைதீர் கூட்டங்களில் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு பதிலும் இல்லை, தீர்வும் கிடைப்பதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர்கள் வடிவேல், ராமசந்திரன், முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள கண்மாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்காக பிள்ளையார் குளம் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் … Read more

“உடல்நலத்தை மேம்படுத்தவே அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்” – தருமபுரி எம்.பி செந்தில்குமார் விமர்சனம்

தருமபுரி: மருத்துவர்கள் ஆலோசனையின் படி ரத்த அழுத்தத்தை குறைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது குறுகிய தூரத்துக்கு நடைபயணம் மேற்கொள்கிறார் என தருமபுரி எம்.பி தெரிவித்துள்ளார். தருமபுரி எஸ்.வி சாலையில் அன்னசாகரம் பிரிவு ரோடு பகுதியில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜன. 9) இரவு நடந்தது. இதில், தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் பங்கேற்று கோபுர … Read more