“மிக்ஜாம் நிவாரண நிதி… தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் உறுதி” – முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: “சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் ஆகிய பொது கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5,060 கோடியை வழங்கிடுமாறு பிரதமருக்கு ஏற்கெனவே நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதனை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக இன்று 450 கோடி ரூபாயை அளித்தமைக்கு, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் … Read more

கோவை நகை கடை கொள்ளையன் தர்மபுரி காட்டுப்பகுதியில் பதுங்கல் – காவல்துறை தகவல்

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் விஜய்,  தர்மபுரி மாவட்ட காட்டு பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது எனவும், 5 தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  

''புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் இல்லை'' – கோட்ட செயற்பொறியாளர் அறிக்கை

சென்னை: புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் உள்ளதாக வெளியான செய்தியை கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளர் மறுத்துள்ளார். ”மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் புழல் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. கலங்கள் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது” என்று கொசஸ்தலையாறு … Read more

புயல் பாதிப்பு… தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி அறிவிப்பு – எவ்வளவு தெரியுமா?

Chennai Floods: மிக்ஜாம் புயலாலும், அதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நிவாரண நிதியை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு கோரிய திருமாவளவன் மனு தள்ளுபடி

சென்னை: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் அரசு வழக்கறிஞர் பணியில் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் , மகளிருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் உட்பட … Read more

“தமிழக நலனை தாரைவார்த்த திமுக அரசு” – அன்புமணி சாடல் @ புதிய மருத்துவக் கல்லூரி விவகாரம்

சென்னை: “இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்: மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்

சென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த அக்டோபர் மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து சிறையில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த நவ.15-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் … Read more

3 நாட்களாக வெள்ளம் வடியாததால் வேளச்சேரி மக்கள் தவிப்பு: அமைச்சர் உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட ஆசிரியை – சமூக வலைதளங்களில் வைரல்

சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் 3 நாட்களாக தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் வேதனையில் தவித்து வரும் நிலையில், ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் உதயநிதியிடம் பள்ளி ஆசிரியை சராமாரியாக கேள்வி எழுப்பியதும், உடன் இருந்த அமைச்சர்கள் நடந்து கொண்டதும் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிக்ஜாம் புயலால் பெய்த அதி கனமழையால் வேளச்சேரி, அதனை சுற்றியுள்ள பகுதிகள் மழைநீரால் சூழ்ந்துள்ளது. வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கைவேலி, மடிப்பாக்கம் ராம்நகர், புழுதிவாக்கம் … Read more

சென்னையில் மழை நின்றாலும் தற்போது தொடங்கியுள்ள புதிய பிரச்சனை!

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கம் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது பனிப்பொழிவு பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது.