மேகேதாட்டு விவகாரம் | “தமிழின ஒதுக்கல் கொள்கையில் காங்கிரஸும் பாஜகவும் இரட்டையர்கள்” – வேல்முருகன்

சென்னை: தமிழகத்தின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேகேதாட்டு எனும் இடத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அளவீடும் பணியை கர்நாடக அரசு முடித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.05 அடியாகவும், நீர் இருப்பு 26.23 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்தில் திறந்து விட வேண்டிய 9.19 டிஎம்சி நீரும், ஜூலையில் திறந்து விட … Read more

ஒரு தலைக்காதல்.. தட்டிக்கேட்ட பெண் வீட்டாரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய "புள்ளிங்கோ"..

சென்னை: பெண்ணை ஒரு தலையாக காதலிப்பதாக கூறி அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ‘புள்ளிங்கோ’ இளைஞர் ஒருவர், அதை தட்டிக்கேட்ட அப்பெண்ணின் குடும்பத்தினரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அதுவும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிப்பது, அதற்கு அப்பெண் சம்மதிக்காவிட்டால் அவரை கொலை செய்வது என மோசமான மனநிலையில் இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். சுவாதி கொலையில் தொடங்கிய இந்த விபரீதம், … Read more

அதிமுக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இணைந்தால்… – ஜெயக்குமார் பளீச் பதில்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினக்கரன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.   

பச்சையப்பன் கல்லூரிகளின் 254 உதவிப் பேராசிரியர் நியமனங்களை ஆய்வு செய்ய  இரு நபர் குழு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் உள்ள 254 உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இருநபர் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆறு கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் நடந்தன. இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த தனி … Read more

அதிகரிக்கும் சிசேரியன்… பிரசவத்தில் கத்தியை தீட்டும் தனியார் மருத்துவமனைகள்… பரபரப்பு ரிப்போர்ட்!

குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தால் நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. சிசேரியன் செய்தால் அதனால் ஏற்படும் வலி காலத்திற்கு தொடரும். அதுமட்டுமின்றி பணத்தை வசூலிக்கவும் இப்படியான நிகழ்வுகள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் என்றாலே சிசேரியன் தான் பண்ணச் சொல்வார்கள் என்ற பேச்சு அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனை முன் சாலை மறியல் சிசேரியின் குழந்தை பிறப்பு சிசேரியனில் தாய், சேய் என இருவரும் நலமுடன் இருப்பார்கள் என்பது … Read more

ஈரோடு: தனியாக இருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய கிராம நிர்வாக அலுவலர்

ஈரோடு கோபிசெட்டி பாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   

“அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் அப்படிச் சொல்லவில்லை” – சீமான்

சென்னை: “சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை. அநீதிக்கு எதிரான புரட்சித் தீயை பற்ற வைக்கவே நான் வந்தேன் என்று இயேசு கூறினார். எங்கே அந்தத் தீ. இந்த நாட்டில் மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது. … Read more

காவிரியில் மேகதாது அணை… அந்த விஷயம் பக்காவா முடிஞ்சுது… தமிழகத்திற்கு பெருசா ஷாக் கொடுத்த கர்நாடகா!

மேகதாது அணை என்றாலே தமிழகத்தில் பரபரப்பு தொற்றி கொள்ளும். கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தின் டெல்டா பகுதி வறட்சியின் விளிம்பில் தள்ளப்படும். ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது. தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். இப்படித்தான் தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும், பல்வேறு தன்னார்வலர்களும் குமுறி வருகின்றனர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவது உறுதியா ?கர்நாடகா அரசு திட்டம் ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பல கோடி ரூபாய் அளவிற்கு … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2,325 கோடி மதிப்பீட்டில் 738.22 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வட சென்னை பகுதியின் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியின் கீழ் 769 கி.மீ. நீளத்துக்கு ரூ. 3,220 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில். … Read more