“கிராம மக்களை ஆலோசித்து திட்டங்கள் வகுக்கவேண்டும்” – கர்நாடக முன்னாள் முதன்மைச் செயலர் கருத்து

மதுரை: “கிராம மக்களை கலந்தாலோசித்து தீட்டப்படும் திட்டங்களால் மட்டுமே நிரந்தர வளர்ச்சி சாத்தியமாகும்” என கர்நாடக முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.மீனாட்சிசுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று தானம் அறக்கட்டளையின் தானம் கல்வி நிலையம் சார்பில் ‘முன்னேறும் வளர்ச்சிக்கான புதியதோர் சமூக நெறியை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் 5 நாள் கருத்தரங்கம் தொடங்கியது. இதற்கு தானம் அறக்கட்டளை தலைவர் பி.டி.பங்கேரா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் மா.ப.வாசிமலை முன்னிலை வகித்தார். தானம் கல்வி நிலைய இயக்குநர் கி.குருநாதன் … Read more

சிறு, குறு தொழில் துறை மின்சார நிலைக் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை ஏற்று, மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்டண முறைகளை மாற்றி அமைத்திடுவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், … Read more

தமிழ் மொழிக்கு சற்று இணையானது சமஸ்கிருதம் மட்டும் தான் – ஆளுநர் ரவி பேச்சு

Governor RN Ravi: ஐரோப்பிய மொழிகளால் தமிழுடன் வரவே முடியாது. இந்திய மொழிகளில் கூட சமஸ்கிருதம் மட்டும் தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடியது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

“உறுப்பு தானம் வழங்குவோருக்கு ஆகச் சிறந்த மரியாதை” – தமிழக அரசுக்கு அன்புமணி பாராட்டு

சென்னை: “உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது” என தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் விபத்துகளில் சிக்கி அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது பாராட்டப்பட … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ வெற்று முழக்கமே தவிர, நடைமுறையில் சாத்தியம் இல்லை: வைகோ கருத்து

மதுரை: “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மோடியால் தான் சாத்தியம் என அமித்ஷா கூறி இருப்பது குறித்த கேள்விக்கு அவர், “ஒன்பது ஆண்டு காலமாக என்ன செய்தார்கள், … Read more

ஆசையாய் காதலித்து திருமணம்! மனைவியை கொன்ற கணவர்! அப்புறம் தான் ட்விஸ்டே!

ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலியை கணவனே கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் கசந்தது எதனால்? இந்த கொலைக்கு என்ன தான் காரணம்?   

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற … Read more

ஆவின் ஆரஞ்சு பால் மாதாந்திர அட்டை பெற கட்டுப்பாடு: புதிய விதிகளால் 33 ஆயிரம் அட்டைதாரர்கள் நீக்கம்

சென்னை: விவசாயிகளுக்கு பால் உற்பத்தி இணை தொழிலாக உள்ளது. பருவமழை பொய்த்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் அரணாக பால் உற்பத்தி இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற மற்றும் சிறு, குறு விவசாயிகள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 4.5 சதவீதம் ஆகும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை கிராம அளவில் கொள்முதல் செய்ய 9,673 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக … Read more

“மோடி சொன்ன 5 T, பாஜக ஆட்சியில் 5 C” – ‘இந்தியாவுக்காகப் பேசுவோம்’ 2-ம் அத்தியாயத்தில் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை எல்லாவற்றிலும், 7.5 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசு முறைகேடு செய்திருப்பதாக சிஏஐ குறிப்பிட்டுள்ளது என்று தமிழக முத்லவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவுக்காகப் பேசுவோம் அத்தியாயம் 2-ல் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், 2024 தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது: வணக்கம்! இந்தியாவுக்காகப் பேசுவோம் (Speaking for India) பாட்காஸ்ட்டின் முதல் அத்தியாயத்துக்குப் பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் … Read more