சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் கீழே விழுந்த பெருமாள் சிலையால் பரபரப்பு @ பென்னாகரம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த ஊர்வலத்தின்போது பெருமாள் சிலை கவிழ்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் அடுத்த அளேபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சாமி கோயில் உள்ளது. மிகப் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில், வைகுண்ட ஏகாதசி தினமான இன்று (டிச.23) அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதர் … Read more

தென் மாவட்டங்களில் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கட்டணமின்றி நகல்களைப் பெற அரசு ஏற்பாடு

சென்னை: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்க தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சில முக்கிய விவரங்களை தெரிவித்துள்ளது. தமிழக உயர் கல்வித் துறை இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே, … Read more

திண்டுக்கல்லில் மலைக்குன்றுக்கு நடுவே செல்லும் ரயில்: பாறைகள் விழுகிறதா என கண்காணிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே மலைக்குன்றுகளுக்கு நடுவே ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுவதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் வழியாக வாராந்திர ரயில் உட்பட 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். திண்டுக்கல் அருகே கொடைரோடு அடுத்துள்ள அம்பாத்துரை அருகே மலைக்குன்றுக்கு நடுவே ரயில் பாதை அமைந்துள்ளது. அவ்வப்போது, பாறைகள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழும். அதனை, ரயில்வே ஊழியர்கள் … Read more

அவசர சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் கால்நடைகள்: சிறப்பு மருத்துவர் குழுவை அமைக்குமா ஈரோடு மாவட்ட நிர்வாகம்?

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் மற்றும் சினைக்காலங்களில் அவசர மருத்துவ உதவி கிடைக்காததால் கால்நடைகள் உயிரிழந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஈரோடு மாவட்டத்தின் இரு கண்களாக ஜவுளித்தொழிலும், விவசாயமும் உள்ளன. விவசாயிகளின் வாழ்வோடு கலந்த கால்நடை வளர்ப்பும், ஈரோட்டின் பிரதான தொழிலாக உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம், புன்செய் புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் மாட்டுச்சந்தையில் குவியும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மற்றும் ஈரோடு ஆவினுக்கு வரும் பால் அளவு போன்றவை கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவத்தை … Read more

“உலகத் தரத்துக்கு ஒப்பானது” – விமர்சனங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: “வானிலை ஆய்வு மையம் உலகத் தரத்துக்கு ஒப்பானது. வர்தா, கஜா, நிவர்‌, மாண்டோஸ்‌ மற்றும்‌ மிக்ஜாம்‌ புயல்கள்‌ குறித்து வானிலை மையத்தின்‌ எச்சரிக்கைகள்‌ காரணமாக பெருமளவு உயிர்‌ சேதம்‌ தவிர்க்கப்பட்டது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக் குறிப்பு: சமீபமாக, சென்னை வானிலை மையம்‌ நவீனமாக இல்லாமல்‌ இருப்பதாக தவறான விமர்சனங்கள்‌ ஊடகங்களில்‌ வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில்‌ பயன்பாட்டில்‌ இருக்கும்‌ அதிவேக … Read more

“மரியாதைக்குரிய அப்பா…” – நிர்மலா சீதாராமன் அறிவுரைக்கு உதயநிதி பதில்

சென்னை: “அப்பன் என்று கூறியது கெட்ட வார்த்தையா? நிதியமைச்சரின் மரியாதைக்குரிய, வணக்கத்துக்குரிய அப்பா என வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவுரைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அடக்கமாக இருக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?” என்ற … Read more

தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார்-வைகோ

தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   

சாயல்குடி நகருக்குள் திடீரென புகுந்த காட்டாற்று வெள்ளம் – முகாமில் பொதுமக்கள் தங்க வைப்பு

ராமநாதபுரம்: தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வந்த காட்டாற்று வௌ்ளம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் திடீரென புகுந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். கிழக்கு கடற்கரை சாலையிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. கடந்த வாரம் அதிகனமழை பெய்ததையொட்டி தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வந்தடைந்த மழைநீர் கமுதி அருகே கோவிலாங்குளம் மற்றும் உசிலங்குளம் கண்மாய்கள் நிரம்பி சாயல்குடி கண்மாயை வந்தடைந்தது. மேலும் … Read more

தென் மாவட்டத்தில் அரசு என்ன செய்கிறது…? முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கம்!

Tamil Nadu Latest News: தென் மாவட்ட மக்கள் இன்னும் அவதியுற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) அங்கு அரசு நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“மழை நிவாரணப் பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தருமபுரி: தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். தருமபுரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று (டிச., 23) தருமபுரி ரோட்டரி அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பங்கேற்றார். முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: “வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகளை கடந்த மூன்று மாதங்களாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி … Read more