“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” – முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம். வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்! … Read more

பெண் மென்பொறியாளரை கொலை செய்த திருநம்பி கைது…. ஒருதலை காதலால் அரங்கேறிய கொடூரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கை, கால்கள், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பிளேடால் அறுத்து பெண் மென்பொறியாளர் உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் திருநம்பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

மின்வாரிய பணியாளர்கள் அயராது பணி – நெல்லை, தென்காசியில் 100% மின் விநியோகம்

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 100 சதவீதம் மின்விநியோகம் சீராகியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் மின் கம்பங்கள் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தன. மேலும் ஆற்றங்கரையோர குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மின் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டிருந்தது. இதுபோல் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின் தடை செய்யப்பட்டிருந்தது. வெள்ளம் வடியத் தொடங்கியதில் இருந்து மின் விநியோகம் படிப்படியாக சீராகி வந்தது. … Read more

கிருத்திகையையொட்டி பழனி முருகன் கோவிலில் அலைமோதும் கூட்டம் – 5 மணி நேரம் காத்திருப்பு

கிருத்திகையையொட்டி பழனியில் பக்தர்கள் கூட்டம் குவிந்ததால் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கின்றனர். படிப்பாதையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   

நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி திருவொற்றியூர், எண்ணூரில் மீனவர்கள் சாலை மறியல்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த அதி கனமழையின்போது, எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு கலந்தது. இதனால், மீனவர்களின் படகுகள், வலைகள்சேதம் அடைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவியை அறிவித்துள்ளது. 12 மீனவ கிராமங்கள் பாதிப்பு: இந்நிலையில், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த தண்ணீர் ஓடைகுப்பம், திருவொற்றியூர் குப்பம்,கே.வி.கே. குப்பம், பெரிய காசிகோயில் குப்பம், திருச்சிணாங்குப்பம், நல்ல தண்ணீர் ஓடை குப்பம்உள்ளிட்ட 12 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நிவாரண உதவிகளை உயர்த்தி … Read more

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மிக்ஜாம் புயல், கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய்கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை, பாதிக்கப்பட்ட வர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதிகன மழை, வெள்ளப் பெருக்கின்போது, மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய் கழிவால் எண்ணூர் முகத்துவார பகுதிகளில் எண்ணெய் படலம் ஏற்பட்டது. இதனால்,அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டன. … Read more

தேசிய விவசாயிகள் தினம் | உழவர்களுக்கு உறுதுணையாக அரசு நிற்கும்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தேசிய விவசாயிகள் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உழவர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு நின்று காக்கும் என தெரிவித்துள்ளார். தேசிய விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் டிச.23-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தெலங்கானா ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள், விவசாயிகளுக்கு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தேசிய விவசாயிகள் தினத்தில் ஆத்ம நிர்பார் (சுயசார்பு இந்தியா) பாரதத்தை உருவாக்க தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கும் நமது விவசாயிகள் … Read more

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு; விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடிக்கு வட்டியில்லா கடன் வழங்க முடிவு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்படவுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் … Read more