அடுத்த 48 மணிநேரமும் மழை தான்… தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – முழு விவரம்

Weather Latest News: தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் மழை தொடங்கியது. இந்தப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடைவிடாது மழை … Read more

சென்னையில் இவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 நிவாரணம் – காரணம் இதுதான்!

Chennai Relief Funds: சென்னை எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயுடன், 12 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்தார்.

“அவதூறு பேசி அரசியல் செய்வோரை புறந்தள்ளி இளைஞரணி மாநாட்டில் சந்திப்போம்” – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசு திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த அறை” என்று கூறியுள்ளார். அக்கடிதத்தின் விவரம் வருமாறு: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். வரலாறு காணாத கனமழையை மிக்ஜாம் புயலின் எதிரொலியாக அல்ல.. அல்ல.. … Read more

ரேசன் கடையில் இன்று முதல் ரூ. 6 ஆயிரம்… வாங்க எந்த நேரத்தில் போகலாம்?

Michaung Cyclone Relief Funds: சென்னை வேளச்சேரியில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.17) தொடங்கி வைத்தார்.

மாதவிடாய் கால விடுப்பு குறித்த ஸ்மிருதி இரானி கருத்துக்கு மாதர் தேசிய சம்மேளனம் கண்டனம்

சென்னை: மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மத்திய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் சுழற்சி என்பது குறைபாடல்ல. அது இயல்பானதே. எனவே பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது” என்று கூறினார். இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்திய மாதர் தேசிய சம்மேளனமும் … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி மனம் மாற வேண்டும்: முதல்வர் ஸ்டாலி்ன் எதிர்பார்ப்பு

சென்னை: ஆளுநர் மனம்மாறி தமிழகத்தின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழு, சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து, அவர்களது ஆலோசனைப்படி திட்டங்களை தீட்டி வருகிறோம். … Read more

தமிழகத்தில் 'கரோனா' பரிசோதனை அதிகரிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழகம் முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16,516 முகாம்களில் 7.83 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில், 8-வது வாரமாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றும் முகாம்கள் நடைபெற்றன. சென்னை அடையாறு மண்டலம், வேளச்சேரி 100 அடிசாலை, சசி நகரில் நடைபெற்ற முகாமை … Read more