மாவட்ட செயலாளர்களுடன் 18-ல் ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இதில் கோவை மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போது கட்சி பெயர், கொடியை பயன்படுத்தக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் மேல்முறையீடும் செய்துள்ளார். இதற்கிடையில் மக்களவை தேர்தலும் … Read more

திராவிடத்துக்குள் ஆன்மீகம் தான் ஆன்மீகம் இருக்கிறது – அமைச்சர் எ.வ.வேலு

Minister EV Velu: திராவிட மாடல் ஆட்சியும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.  

ரூ.6,000 நிவாரண டோக்கன் விநியோக குளறுபடி: பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் சிக்கி தவிக்கும் ரேஷன் கடைக்காரர்கள்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 மாவட்டங்களில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், வருமானவரிசெலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணம் இல்லை என்றும்,இவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அரசுஅறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்றுகாலை முதல் டோக்கன்கள் … Read more

சென்னை வேளச்சேரியில் வெள்ள நிவாரணம் ரூ.6,000: முதல்வர் நாளை வழங்குகிறார்

சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை, சென்னை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதைஅடுத்து, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மத்திய குழுவினர் வந்து பார்வையிட்ட நிலையில், தற்காலிக நிவாரணமாக ரூ. 7,033 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 … Read more

கடலூரில் பாழான 60,000 ஏக்கர் மக்காச்சோள பயிருக்கு நிவாரணம் கிடைக்குமா?

கடலூர்: கடலுார் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லுார் வட்டாரத்துக்குட்பட்ட சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். பருவமழை தவறியதாலும், மழையின் அளவு குறைந்ததாலும் மக்காச்சோள கதிர்கள் வந்து, அதில் மணி பிடிக்காமல் போனது. அதையும் மீறி, சில இடங்களில் நன்றாக முளைத்த பயிர்கள் படைப்புழுவின் தாக்குதலால் முற்றிலுமாக அழிந்தன. வானம் பார்த்த பூமியான மானாவாரி விவசாய நிலங்களில், கடன் வாங்கி பயிரிட்ட சோளப் பயிர்கள் அழிந்து போனதால் இப்பகுதி விவசாயிகள் கடும் … Read more

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் பகுதியில் கருணாநிதி சிலை நிறுவும் திட்டம் இல்லை: அரசு விளக்கம்

சென்னை: “மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத் துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை” என்று தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் முன்பு செயல்பட்டு … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண மளிகை பொருட்களை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4-ம் தேதி முதல் இதுவரை 60,000 மக்களுக்கு உணவு, பால் மற்றும் 2ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகம் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் வழங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று 80,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணாநகர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் … Read more