மிக்ஜாங் புயல் பாதித்த சென்னை மக்களுக்கு உணவளிக்கும் மோடி கிச்சன்! களமிறங்கிய பாஜக

Modi Kitchen In Chennai Rain: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ‘மோடிகிச்சன்’ மூலம் உணவு, அத்தியாவசிய பொருட்கள் பாஜகசார்பில் விநியோகம் செய்யப்படுகிறது

புயல் மீட்பு, நிவாரணத்துக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மீட்டி நிவாரணப் பணிகளுக்கு எ.வ.வேலு, முத்துசாமி,மூர்த்தி உட்பட 7 அமைச்சர்களை கூடுதலாக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து … Read more

மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்: மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

சென்னை: மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மிகவும் மோசமாக பாதிக்கப்பட் டுள்ளன. இதையொட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும். அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் … Read more

“ஓர் எல்லை வரை தான் கட்டுப்படுத்த முடியும்” – மிக்ஜாம் புயல் குறித்து கமல்ஹாசன்

சென்னை: “இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்” என மிக்ஜாம் புயல் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். … Read more

மிக்ஜாம் புயல் | நடிகர்கள் சூர்யா, கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் … Read more

மிக்ஜாம் புயல் | புறநகர் ரயில் சேவை ரத்து; எழும்பூர், சென்ட்ரலில் இருந்து செல்லும் 25 ரயில்கள் ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பதிவாகி உள்ள நிலையில் இன்று (டிச.5, செவ்வாய்க்கிழமை) சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 25 தொலைதூர ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையை பொறுத்தவரையில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை செல்லும் … Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர், எம்எல்ஏக்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தொலைபேசி அழைப்பு மூலமாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், களத்தில் பணியாற்றும் அமைச்சர், சட்டமன்ற … Read more

மிக்ஜாம் புயல்: சென்னையில் 47 ஆண்டுகள் பார்க்காத மழை – தீவாக மாறிய அபார்ட்மென்ஸ்

மிக்ஜாம் புயல் அப்டேட்; சென்னையில் கொட்டும் 47 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்யும் வரலாறு காணாத மழை காரணமாக அப்பார்ட்மென்ட் வீடுகள் எல்லாம் தனி தீவுகளாக மாறியிருக்கின்றன.  

மிக்ஜாம் புயல் | வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுச்சுவர் சேதம்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 30 மரங்கள் விழுந்துள்ளன. … Read more