தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27-ம்தேதி வரை 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். … Read more

ஏரி நீரில் மூழ்கிய கிணறு @ செங்கல்பட்டு – சுடுகாடு இருப்பதால் சுகாதார சீர்கேடு

செங்கல்பட்டு: சுடுகாட்டுக்கு அருகே ஏரி நீரில் மூழ்கிய குடிதண்ணீர் கிணற்றால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக ஆலப்பாக்கம் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர், வ.உ.சி நகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு வ.உ.சி. நகர் ஏரியில் கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்த கனமழையால் வ.உ.சி. நகர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் குடிநீர் கிணறும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. … Read more

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்த துறைகள் ஒதுக்கீடு: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்முடி வகித்து வந்த உயர் கல்வி உள்ளிட்ட துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித் துறையை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த துறைகளை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி … Read more

தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் … Read more

“2-வது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல” – மத்திய அரசு நிதி குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திருநெல்வேலி: “தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.21) திருநெல்வேலியில் மழை வெள்ள பாதிப்புகளை … Read more

தென்மாவட்ட வெள்ளம் காரணமாக ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ ஒத்திவைப்பு: திருமாவளவன்

சென்னை: தென் மாவட்ட வெள்ளம் காரணமாக 29-ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த விசிக மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிச. 23-ம் தேதி அன்று திருச்சிராப்பள்ளியில் ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ நடைபெறுவதாக அறிவித்திருந்தோம். ஆனால், எதிர்பாராத வகையில் கடந்த டிச. 4-ம் தேதி அன்று சுழன்றடித்த கடும் புயல் மற்றும் கனமழையால், பெருக்கெடுத்தோடிய பெருவெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட … Read more

கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட … Read more

தென்மாவட்டங்களில் மழையால் பாதித்த மக்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.6,000 வரை நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலி: “அதிகனமழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6000 வழங்கப்படும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த … Read more

Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்ய முடியுமா?

Minister Ponmudi: சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.