கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாட்டம்: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின்: ‘கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை. நீ செய்ய நினைக்கும் செயலை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்’என்பதுபோல, தனிமனிதர் உள்ளத்தை பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர். கிறிஸ்தவ மதத்தை பரப்பிட … Read more

டிச. 30-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை மண்டல வானிலைஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச. 25) முதல்வரும் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27, 28-ம்தேதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு … Read more

வானிலை மைய கருவிகள் உலகத்தரத்துக்கு ஒப்பானது; தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பயன்பாட்டில் இருக்கும் கருவிகள், உலகத் தரத்துக்கு ஒப்பானவை என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிக அளவு மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்துக் கூறவில்லை என்று தமிழக அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மீது … Read more

''தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிச.26-ல் ஆய்வு'': அண்ணாமலை

கோவை: “தென்தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 4-5 நாட்கள் கழித்து முதல்வர் சென்று பார்வையிடுகிறார். தமிழக அரசு நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசை வம்புக்கு இழுப்பதில்தான், முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றது. மத்திய அரசு சார்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யவிருக்கிறார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளமும், தென்தமிழகத்தில் … Read more

வந்தே பாரத் ரயிலை மொரப்பூரில் நிறுத்தக் கோரி ரயில்வே அமைச்சரிடம் திமுக எம்பி செந்தில்குமார் மனு

புதுடெல்லி: வந்தே பாரத் ரயிலை மொரப்பூரிலும் நிறுத்த மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அவரை டெல்லியில் சந்தித்து திமுக எம்பி செந்தில்குமார் மனு அளித்துள்ளார். இத்துடன் அவர், தருமபுரி-மொரப்பூர்-சென்னை செல்லும் ரயில்வே திட்டத்துக்கு மூக்கனூர் மற்றும் ஏ.ரெட்டிஹல்லி கிராமங்களில் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்காத வண்ணம் கையகப்படுத்தும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் தருமபுரி நாடாளுமன்ற மக்களவை எம்பியான டாக்டர்.டிஎன்வி.செந்தில் குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “தருமபுரி-மொரப்பூர்-சென்னை … Read more

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: தமிழக தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை!

சென்னை: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி, தூத்துக்குடி, சென்னை – சாந்தோம், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை, கொடைக்கானல், குமரி, காஞ்சிபுரம், புதுச்சேரி, உதகை உட்பட பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இந்த தேவாலயங்கள் அனைத்தும் வண்ண மயமாக காட்சி அளித்தது. இங்கு அமைக்கப்பட்டு உள்ள குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. … Read more

''பெரியார் சிலையை அவமதித்தால் கை இருக்காது'': வைகோ

மதுரை: “பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியாரின் 50 வது நினைவு தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: “சமூக நீதியின் வடிவமாக பெரியார் திகழ்கிறார். பெரியாரால் உலகெங்கும் சமூக நீதி தழைத்துள்ளது. அவரை இளைஞர்கள் அதிகளவில் … Read more

“தமிழகம் மீண்டெழ மத்திய அரசு உதவும் என பிரதமர் உறுதி” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பு என அடுத்தடுத்த இரண்டு இயற்கை பேரிடரில் இருந்து தமிழகம் மீண்டெழ மத்திய அரசு உதவும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். “மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடன் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் குறித்துக் கேட்டறிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்னை அழைத்திருந்தார். கடும் நிதி நெருக்கடிக்கிடையே … Read more

முதல்வர் ஸ்டாலினை அழைத்து பேசிய பிரதமர் மோடி… முழு பின்னணி இதோ!

PM Modi Called MK Stalin: மிக்ஜாம் புயலுக்கு அடுத்த தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக அழைத்து பேசியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.