திமுகவை டார்கெட் செய்து கொங்கு மண்டலத்தில் பரப்பப்படும் வதந்திகள், வீடியோக்கள்

DMK Faces Misinformation Attacks in Kongu Mandal: கொங்கு மண்டலத்தில் மதமாற்றம் அதிகமாக நடப்பதாகவும், திமுக ஆட்சியில் அதிகமாக கோயில்கள் இடிக்கப்படுவதுடன் சர்ச்சுகள், மசூதிகளுக்கு மட்டும் திமுக பாதுகாப்பு கொடுப்பதாகவும் வாட்ஸ்அப்களில் செய்திகள் பரப்ப்படுகின்றன.   

தூத்துக்குடி வெள்ளம்: கயத்தாறு, விளாத்திகுளம் பகுதிகளில் கடும் பாதிப்பு

கோவில்பட்டி: கயத்தாறில் இருந்து கழுகு மலை செல்லும் சாலையில் தெற்கு கோனார்கோட்டை புதூர் கிராமம் அருகே உள்ள ஓடை மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இங்குள்ள இளைஞர்கள் அவசர தேவைகளுக்கு செல்லும் மக்களை டிராக்டர் மூலம் ஓடையை கடந்து செல்ல உதவி வருகின்றனர். திருமங்கல குறிச்சி, செட்டிகுறிச்சி, வெள்ளாளங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் … Read more

நெல்லையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அமைச்சர் நன்றி!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் படகுகளுடன் ஈடுபட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மாநில நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து நன்றி தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவர்களை மீட்பதற்காக திருநெல்வேலி மாவட்டம் உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து 72 … Read more

வெள்ளத்தில் இளைஞர் அடித்துச் செல்லப்பட்டதாக அச்சம் @ பாளையங்கோட்டை

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சே. அருணாசலம் (19) என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அச்சம் நிலவுகிறது. பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனி அருகே திருமால் நகரை சேர்ந்த சேர்மன் மகன் அருணாசலம். கடந்த 2 நாட்களுக்கு முன் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது என்.ஜி.ஓ. காலனி பகுதியில் மழை வெள்ளத்தில் அவர் இழுத்து செல்லப்பட்டதாக அச்சம் நிலவுகிறது. அவரை காணவில்லை என்று பெருமாள்புரம் போலீஸில் அருணாசலத்தின் பெற்றோர் புகார் … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடுவதில் தாமதம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அர: சின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்? தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும்? தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டும்தோறும் வெளியிட்டு வருகிறது. … Read more

இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல சுழற்சி லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்றும் நிலவியது. இந்நிலையில், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் (டிச.20), … Read more

தமிழகத்துக்கு தேவையான குடிநீர் தாராளமாக உள்ளது: திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: தமிழகத்தைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் மொத்தமுள்ள 1.25 கோடி வீடுகளில் இதுவரை 97.46 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் அமலாகிவிட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான நீர் மற்றும் விவசாயத் தேவைக்கான நீர் தாராளமாக இருக்கிறது, என்று திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என் சோமு, … Read more

தூத்துக்குடி காட்டாற்று வெள்ளம்: ராமநாதபுரத்தில் சாலை துண்டிக்கப்பட்டு தீவு ஆன 10 கிராமங்கள்!

ராமநாதபுரம்: தூத்துக்குடி மாவட்ட காட்டாற்று வெள்ளத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தின் 10 கிராமங்கள் சாலைகள் துண்டிக்கப்பட்டு, தீவாக மாறி அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இத்தொகுதியின் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென்மேற்கு வங்கக் கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதியான … Read more

தென்மாவட்டங்களில் கனமழை | தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு

சென்னை: தென்மாவட்டங்களில் கனமழை பதிவான நிலையில் தூத்துக்குடியில் வியாழக்கிழமை அன்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இது குறித்து வெளியாகி உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும் மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் ஆட்சிப்பணி அலுவலர்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு … Read more