புதுச்சேரி ஆளுநர் மாளிகை சாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தடுப்புகள் திடீர் அகற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சாலையில் மக்கள் செல்வதற்கு தடையாக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் இன்று திடீரென்று அகற்றப்பட்டன. இதை அறிந்த பலரும் பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சாலையில் பயணித்தனர். கடந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின்போது, பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் கடந்த 2017 ஜூலையில் நடந்தது. அப்போது காங்கிரஸார் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி உருவபொம்மை எரித்தனர். … Read more

கருக்கா வினோத்துக்கு 3 நாள் போலீஸ் காவல் – ‘ஆளுநரை மாத்தணும்’ என முழங்கியதால் பரபரப்பு

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வர முடியாதபடி, அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வினோத், நீதிமன்ற … Read more

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை மதுரை மாநகராட்சி கைகழுவி விட்டதா? – கிடப்பில் திட்டங்கள்

மதுரை: மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரியார் பஸ் நிலையம் வணிக வளாகம், மல்டிலெவல் பார்க்கிங், வைகை கரை சாலை போன்ற பல்வேறு திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், புதிய சாலைகளை அமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் ‘ஸ்மார்ட் சிட்டி’ கைகழுவி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் ரூ.991 கோடியில் நிறைவேற்றப்பட்டன. பெரியார் பஸ் நிலையம் மற்றும் … Read more

மதுரை பிளஸ் 2 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: மதுரையில் பிளஸ் 2 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. ஏப். 5-ல் விடைத்தாள் திருத்தப்பட்ட போது மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் விடைத்தாள்கள் ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்கப்பட்ட போது அந்த இரு மாணவர்களும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றது தெரியவந்தது. முழு மதிப்பெண் பெற்ற அந்த … Read more

கலாஷேத்ரா விவகாரம் | ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணை குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் … Read more

புழல் சிறையில் தான் தீபாவளியா… டிடிஎப் வாசனுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

TTF Vasan Remand Extended: பிரபல யூ-ட்யூபர் டிடிஎப் வாசனுக்கு நான்காவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தமிழக அமைச்சர்களின் ஊழலைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?” – கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: தமிழக அரசு மீது அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருவதாக குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தமிழக அமைச்சர்களின் ஊழலைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் நாள்தோறும் ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடுகிற வகையில் செயல்பட்டு வருவது எல்லையற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களை … Read more

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், அக்கட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா உத்தரவிட்டார். இந்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என தமிழக காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தரப்பு வழக்கறிஞர், அமர் பிரசாத் ரெட்டி … Read more

இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதை தடுக்க நடவடிக்கை

சென்னை: இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரியத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக துறை சார் உயரதிகாரிகள் கூறியதாவது: வருவாய் இழப்பைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சில அறிவுறுத்தல்களை மின் வாரியத் தலைவர் வழங்கியுள்ளார். அதன்படி, அனைத்து குடிசை இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். குடிசைக்காக மின் இணைப்பு பெற்று வீடு கட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரை 1 ஏ விலைப் பட்டியின் கீழ் … Read more

தெற்கு ரயில்வேயில் ஓடும் வந்தே பாரத் ரயில்கள் 35 முதல் 49 வயதினர் அதிக அளவில் பயணம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் ஓடும் வந்தே பாரத் ரயில்களில் 35 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பயணிகள் அதிக அளவில் பயணிப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. வந்தே பாரத் ரயில்களை வணிகம்,வேலைக்கு செல்பவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் அதிகம் விரும்புகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவற்றில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் … Read more