கனமழை, வெள்ள சேதங்கள் – தூத்துக்குடியில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று (டிச.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 தேதிகளில் அதி கனமழை கொட்டியது. இதனால் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அதுபோல தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஆழ்வார்திருநகரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஏரல், ஆறுமுகநேரி, ஆத்தூர், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய குழு ஆய்வு: தூத்துக்குடி மாவட்டம் … Read more

மிமிக்ரி சர்ச்சை | தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன … Read more

புளியங்கண்ணு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்குபேட்டர் அறை, ஜன்னல் கண்ணாடிகள் சேதம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை புளியங்கண்ணு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்குபேட்டர் அறையின் ஜன்னல் கண்ணாடிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவ்லாக் ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்கண்ணு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் தெங்கால், அவரக்கரை, மணியம்பட்டு மற்றும் புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மாதாந்திர பரிசோதனை, பிரசவம், மகப்பேறு பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் மற்றும் சர்க்கரை, … Read more

அரபிக்கடலில் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Weather Forecast: அரபிக் கடலில் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

தென்மாவட்டங்களில் வெள்ள மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் … Read more

திருச்செந்தூர் வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இலவச பேருந்து சேவை

Thiruchendur Free Bus: திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தமிழக அரசு  இலவச பேருந்து இயக்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   

திருச்செந்தூர் கோயிலில் சிக்கியுள்ளவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

அரியலூர்: தொடர் கனமழையின் காரணமாக திருச்செந்தூர் கோயிலில் சிக்கி உள்ள பக்தர்களை மீட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 95 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறினார். அரியலூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (டிச.20) செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக … Read more

திமுகவை டார்கெட் செய்து கொங்கு மண்டலத்தில் பரப்பப்படும் வதந்திகள், வீடியோக்கள்

DMK Faces Misinformation Attacks in Kongu Mandal: கொங்கு மண்டலத்தில் மதமாற்றம் அதிகமாக நடப்பதாகவும், திமுக ஆட்சியில் அதிகமாக கோயில்கள் இடிக்கப்படுவதுடன் சர்ச்சுகள், மசூதிகளுக்கு மட்டும் திமுக பாதுகாப்பு கொடுப்பதாகவும் வாட்ஸ்அப்களில் செய்திகள் பரப்ப்படுகின்றன.   

தூத்துக்குடி வெள்ளம்: கயத்தாறு, விளாத்திகுளம் பகுதிகளில் கடும் பாதிப்பு

கோவில்பட்டி: கயத்தாறில் இருந்து கழுகு மலை செல்லும் சாலையில் தெற்கு கோனார்கோட்டை புதூர் கிராமம் அருகே உள்ள ஓடை மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இங்குள்ள இளைஞர்கள் அவசர தேவைகளுக்கு செல்லும் மக்களை டிராக்டர் மூலம் ஓடையை கடந்து செல்ல உதவி வருகின்றனர். திருமங்கல குறிச்சி, செட்டிகுறிச்சி, வெள்ளாளங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் … Read more

நெல்லையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அமைச்சர் நன்றி!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் படகுகளுடன் ஈடுபட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மாநில நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து நன்றி தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவர்களை மீட்பதற்காக திருநெல்வேலி மாவட்டம் உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து 72 … Read more