இந்நாள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

சென்னை: தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை, ஜன.2 முதல் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் நடைபெறவுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள சில நீதிபதிகள், 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் துறைகள் மாற்றப்பட்டு, சென்னையில் இருப்பவர்கள் மதுரைக்கும், மதுரையில் இருப்பவர்கள் சென்னைக்கும் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஜன.2-ம் தேதி முதல் சென்னை உயர் … Read more

தமிழகத்தில் டிச. 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் சில … Read more

தமிழக அரசு Vs மத்திய அரசு முதல் மீண்டும் வெடித்த ‘மல்யுத்த’ விவகாரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.22, 2023

“தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது”: தென்மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தேசிய பேரிடர் என்றும் அறிவிக்கும் சிஸ்டமே இல்லை. தேசிய பேரிடராக மத்திய அரசு இதுவரை அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது. வேறு எந்த மாநிலத்துக்கும் தேசிய பேரிடர் என்று அறிவித்தது இல்லை. உத்தராகண்ட் உள்ளிட்ட … Read more

தென்மாவட்ட வெள்ளத்துக்கு இதுவரை 35 பேர் உயிரிழப்பு; 1.83 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்

சென்னை: தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். இந்த 4 மாவட்டங்களில் 1 லட்சத்து 83 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தென் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்துவிட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து … Read more

“பேரிடரில் உடனடி தேவை ‘உதவி’… உபதேசம் அல்ல” – நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் பதில்

சென்னை: “நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து ரயிலிலே கூட்டி வந்திருக்க வேண்டியது தானே? ஏன் நடக்கவிட்டு கூட்டிவந்தீங்க என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் … Read more

“சிலரிடம் பெரியார் வழியில்தான் பேசவேண்டும்” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதில்

சென்னை: “சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டும்” என தன்னை விமர்சித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் தந்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது.. “யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல, சிலரிடம் கலைஞரைப் … Read more

கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் சேதமடையும் பேட்டரி வாகனங்கள் @ ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் ரூ.5.5 கோடி மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால் வீடுகளில் குப்பை சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகள் 4 சுகாதர மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நகர் நல அலுவலர், 4 சுகாதர ஆய்வாளர்கள், 6 மேற்பார்வையாளர்கள், 6 ஓட்டுநர்கள், 109 நிரந்தர தூய்மை பணியார்கள் என 130 பேர் சுகாதார பிரிவில் பணியாற்றி வந்தனர். நகராட்சி … Read more

“திராவிட மாடல் ஆட்சியில் நல்லிணக்கத்தை தடுக்க தவிக்கிறது ஒரு கூட்டம்” – கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியில் எல்லாப் பிரிவு மக்களும் அமைதியாக நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியாய்த் தவிக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தக் கூட்டத்தால் இந்த மண்ணில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட “அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா – 2023” நிகழ்வில் கலந்துகொண்டு அவர் … Read more

“தமிழக மக்களை அவமானப்படுத்திய நிர்மலா சீதாராமன்” – தங்கம் தென்னரசு @ வெள்ள நிவாரணம்

சென்னை: “2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில் மத்திய பாஜக அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்களுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு … Read more