பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு: கேலோ இந்தியா விழாவில் பங்கேற்க அழைப்பு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடக்கவிருப்பதை அடுத்து, இதில் பிரதமருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி இன்று நேரில் சந்தித்துள்ளார். கிரிக்கெட், ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகளில் திறமையானவர்களைக் கண்டறிந்து பயிற்சியளித்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்யும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் … Read more

வாரி சுருட்டிச் சென்ற வெள்ளம்: பொங்கல் பானை தயாரிக்கும் மகளிர் குழுவினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி @ தூத்துக்குடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை புரட்டி போட்ட மழை வெள்ளம், கலைநயம் மிக்க பொங்கல் பானை தயாரிக்கும் மகளிர் குழுவினரையும் விட்டு வைக்கவில்லை. ஏரல் அருகே வாழவல்லானில் பல வண்ணங்களில் பொங்கல் பானை தயாரிக்கும் மகளிர் குழுவினரின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த மழை வெள்ளம். அதில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் இந்த மகளிர் குழுவினர். மகளிர் குழுவினர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள வாழவல்லானில் ‘பொதிகை மகளிர் குழு’ செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினர் ‘மதிப்புக்கூட்டிய … Read more

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்: இபிஎஸ்

சென்னை: “வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. உடனடியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் இல்லங்களில் பொங்கல் திருநாளை ஓரளவு மகிழ்ச்சியுடனாவது கொண்டாட அரசு வழிவகை செய்திட வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும். தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை, … Read more

‘மத்திய அரசு இதுவரை வெள்ள நிவாரணத் தொகை தரவில்லை’ – அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் சந்திக்க முடிவு

சென்னை: “தமிழக அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கோரியுள்ளனர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான … Read more

“மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியைக் கூட திருடாதவர்” – அண்ணாமலை

சேலம்: “மோடி பிரதமராக வருவதற்கு ஆதரவளிப்பதில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், வரப்போகும் தேர்தலில் பாஜகவுக்கு 39 தொகுதிகளிலும் வெற்றியைத் தர வேண்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது. ஆனால், மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியை கூட திருடாதவர்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரையை மேற்கொண்டு … Read more

எடப்பாடி பழனிசாமியை சாய்க்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்திருக்கும் கடைசி ஆயுதம்..!

panneerselvam: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓபிஎஸ் எடுத்திருக்கும் இந்த முயற்சி, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

சர்வர் பிரச்சினையால் சர்வ நாசம்: பத்திர பதிவு, அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதிய சேவை பாதிப்பு

தாம்பரம்: கருவூலத் துறை இணையதளம் சரிவர இயங்காததால் முத்திரைத்தாள் முகவர்கள், கருவூலத்துறை அலுவலகங்களில் பணிபுரிவோர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். தமிழக அரசின் பதிவுத்துறை இணையதளத்தை டி.சி.எஸ். நிறுவனம் பராமரிப்பது போன்று, தமிழ்நாடு கணக்கு மற்றும், கருவூலத் துறை இணையதளத்தை விப்ரோ நிறுவனம் பராமரித்து வருகிறது. சரியான முறையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்படாததால், தொடங்கியதில் இருந்தே கருவூலத் துறை ஊழியர்கள் பெரும் சிரமத்துடனே இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில … Read more

200 போதை மாத்திரை 8 ஊசிகள்.. கல்லூரி மாணவர்களுக்கு குறி! இளைஞர் கைது

சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிமிருந்து 200 போதை மாத்திரை 8 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.  

பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம் வழங்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அதிமுக அரசில் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி வழங்கப்பட்டு வந்தது. எனது தலைமையிலான அரசில், கரோனா நோய்த் தொற்றின்போது தமிழக … Read more