“மின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தமிழக அரசு குளறுபடி” – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: மூன்று பெரிய மின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தமிழக அரசு குளறுபடி செய்து வருகிறது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டினார். பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருச்சியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி திட்டங்களை அளித்தார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஹெச்இஎல்(பெல்) நிறுவனத்தின் தொழில் ஒப்பந்தங்களை தமிழக சிறு, குறு தொழில் … Read more

ஐயப்ப பக்தர்களின் வருகையால் குமுளியில் சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

கூடலூர்: குமுளியில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சிப்ஸ் விற்பனை 24 மணி நேரமும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தின் தமிழக – கேரள எல்லையில் குமுளி அமைந்துள்ளது. தமிழக கேரள சுற்றுலாப் பயணிகள் இந்த வழித்தடத்தில் அதிகம் கடந்து சென்று வருகின்றனர். மேலும் சபரிமலையின் பிரதான சாலையாகவும் இது உள்ளது. இதனால் குமுளியில் சுற்றுலா சார்ந்த வர்த்தகமும், நேந்திரம் சிப்ஸ், ஏலக்காய், மிளகு, தேங்காய் எண்ணெய், காபி, தேயிலை, சாக்லேட் உள்ளிட்ட விற்பனையும் அதிகளவில் … Read more

“விருதுநகர் மாவட்டம் கல்வியில் முன்னிலை” – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என மாவட்டம் முழுவதும் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு … Read more

மதுரை | ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணி தொடக்கம்

மதுரை: அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான மருத்துவப்பரிசோதனை செய்து காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணிகள் தொடங்கியது. தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும். பொங்கல் பண்டிகை அன்று 15-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், மறுநாள் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், 17-ம் தேதி … Read more

கட்சிகளுக்கு இணையாக ‘மாஸ்’ காட்டிய விஜய் மக்கள் இயக்கம் @ வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா

சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற விடுதலை போராட்ட வீரர் வேலுநாச்சியார் பிறந்தநாள் விழாவில் திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சியினருக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘மாஸ்’ காட்டினர். நடிகர் விஜய் இதுவரை தான் அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எனினும், அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலை நோக்கியே உள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியில் சில இடங்களை கைப்பற்றினர். சில மாதங்களுக்கு முன், … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரியும், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த … Read more

“மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெல்வது நிச்சயம்” – ஓபிஎஸ் நம்பிக்கை

சென்னை: “பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது அரசியல் எதுவும் பேசவில்லை. மக்களவைத் தேர்தல் என்பது இந்திய பிரதமரை தேர்வு செய்கிற தேர்தல். அந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவார்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அமமுகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் … Read more

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கு.க.செல்வம் கடந்த சில நாட்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜன.3) அவர் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் நேரில் சென்று அஞ்சலி … Read more

வழிகாட்டும் ஆந்திர மாநிலம் – முதியோர் ஓய்வூதியத்தை  ரூ.3,000 ஆக உயர்த்த அன்புமணி கோரிக்கை

சென்னை: “முதியோர், கைம்பெண் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக்க வேண்டும்; பயனாளிகளை 1.05 கோடியாக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆந்திர மாநிலத்தில் முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தபட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையும் 66.34 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்திருக்கிறார். ஆந்திர மாநில … Read more