நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது – அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி

நீட் தேர்வை யார் ஆட்சிக்கு வந்தாலும் ரத்து செய்ய முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அனைத்து பெண்களுக்கும் திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   

காவிரி நதிநீர் விவகாரம் | கர்நாடகாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடக மாநிலத்துடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக மாநில அரசு மறுத்துவருகிறது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்து விடுமாறு … Read more

வாடகை கார் ஓட்டுநர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி: தனியார் வங்கி அனுப்பியதால் அதிர்ச்சி

சென்னை: தனியார் வங்கியிலிருந்து வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி அனுப்பப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). வாடகை கார் ஓட்டுநரான இவர், தனது நண்பர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக அறை எடுத்து தங்கி, பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9-ம்தேதி 3 மணிக்கு அவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், அவரது வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் … Read more

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் – மேல்முறையீடு செய்ய மண்டல அளவில் முகாம்கள்

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம்தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு செய்யப்படாத 56.50 லட்சம் பெண்களுக்கு,விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களுடன் கடந்த18-ம் தேதி முதல் குறுஞ்செய்திஅனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடும்ப உறுப்பினர் வருமான வரி செலுத்துவதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பம் கள ஆய்வில் இருப்பதாகவும் பலருக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. தகுதி இருந்தும் … Read more

நியோ மேக்ஸ் வழக்கில் நீதிபதி ஆணையம் அமைக்க அரசு எதிர்ப்பு; முதலீட்டாளர் பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: நியோ – மேக்ஸ் மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியோ-மேக்ஸ் முதலீட்டாளர்கள் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்தது. இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து … Read more

மதுரை | ரயில் முன் பாய்ந்து 2 குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலை – போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை அருகே தனது இரு குழந்தைகளுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், அவர் திருப்பாலையைச் … Read more

“நீட் தேர்வை ரத்து செய்ய மக்கள் இயக்கம்” – அமைச்சர் உதயநிதி உறுதி

மதுரை: திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்குப் பின் நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் இயக்கமாக செயல்படுவோம் என அமைச்சர் உதயநிதி பேசினார். மதுரை தெற்கு மாவட்ட திமுகவினருக்கு பொற்கிழி வழங்குதல், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான முத்தப்பன்பட்டியில் நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் உதயநிதி, ரகுபதி, பெரியகருப்பன், பி.மூர்த்தி உள்ளிட்ட பலரும் முத்தையாவின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் திமுக மூத்த … Read more

கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை முதல் அனுமதி: பேரிஜம் ஏரி செல்ல தடை நீட்டிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை (செப்.22) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எனவும், பேரிஜம் ஏரி செல்ல தடை நீட்டிப்பு எனவும் வனத்துறை அறிவித்துள்ளது. கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பேரிஜம் ஏரிப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிந்தன. அதனால் பாதுகாப்பு கருதி … Read more

மகளிர் உரிமை தொகை: வங்கி கணக்கில் பணம் வரவில்லையா? வீடு தேடி வருகிறது மணி ஆர்டர்..!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில வங்கி கணக்கில் பணம் வராதவர்களுக்கு மணி ஆர்டர் மூலம் வீடு தேடி பணம் வந்து சேரும் என அரசு அறிவித்துள்ளது.   

“காவிரி டெல்டா விவசாயிகளைக் காக்க தமிழக அரசு இனி என்ன செய்யப் போகிறது?” – ராமதாஸ் கேள்வி

சென்னை: ”காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில், காவிரி படுகை உழவர்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?” என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு மலைபோல நம்பிக் கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவால் அந்த நம்பிக்கை சிதைந்து விட்டது. காவிரி மேலாண்மை … Read more