எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றம்: சுற்றுச்சூழல் துறை செயலாளர்

சென்னை: எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். கழிவுகளை அகற்றும் பணி நிறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக தலைநகர் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், எண்ணூர் கடல் முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் படர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தப் … Read more

ராமநாதபுரத்தில் மழைநீரில் மூழ்கிய 7,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் – விரைவில் கணக்கெடுப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளதாகவும், நீர் வடிந்ததும் பாதிக்கப்பட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என வேளாண்மைத்துறை அதிகாரி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் மிளகாய், மல்லி, வெங்காயம் மற்றும் நெல், சிறுதானிய பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்படும் நெல்பயிரே அறுவடைக்கு 10 முதல் 20 நாட்கள் உள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளன. … Read more

“எச்சரிக்கை விடுத்திருந்தால் உடுத்த துணியாவது மிஞ்சியிருக்கும்” – தாமிரபரணி கரையோர மக்கள் கண்ணீர் @ நெல்லை வெள்ளம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கவில்லை. இதனால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக பாதிக்கப்பட்ட கண்ணீர் விடுகிறார்கள். அதேநேரம், மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப தேவையான பல்வேறு நடவடிக்கைகளும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணியில் கரைபுரண்ட வெள்ளம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் கடந்த 3 நாட்களுக்குமுன் பெருமளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்ததால் கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்புகள் … Read more

பெண்ணிற்கு மறுக்கப்பட்ட ஆம்புலன்ஸ்! மனைவியை பிளாஸ்டிக் பேரலில் கொண்டு சென்ற கணவர்..

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிக்கு சொந்த ஊர் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் மறுக்கப்பட்டுள்ளது.   

கனமழை, வெள்ள சேதங்கள் – தூத்துக்குடியில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று (டிச.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 தேதிகளில் அதி கனமழை கொட்டியது. இதனால் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அதுபோல தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஆழ்வார்திருநகரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஏரல், ஆறுமுகநேரி, ஆத்தூர், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய குழு ஆய்வு: தூத்துக்குடி மாவட்டம் … Read more

மிமிக்ரி சர்ச்சை | தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன … Read more

புளியங்கண்ணு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்குபேட்டர் அறை, ஜன்னல் கண்ணாடிகள் சேதம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை புளியங்கண்ணு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்குபேட்டர் அறையின் ஜன்னல் கண்ணாடிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவ்லாக் ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்கண்ணு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் தெங்கால், அவரக்கரை, மணியம்பட்டு மற்றும் புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மாதாந்திர பரிசோதனை, பிரசவம், மகப்பேறு பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் மற்றும் சர்க்கரை, … Read more

அரபிக்கடலில் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Weather Forecast: அரபிக் கடலில் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

தென்மாவட்டங்களில் வெள்ள மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் … Read more

திருச்செந்தூர் வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இலவச பேருந்து சேவை

Thiruchendur Free Bus: திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தமிழக அரசு  இலவச பேருந்து இயக்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.