டிஆர்பி ராஜாவுக்கு சவால் விடுகிறேன்.. ரெடியா என கேட்டு சொல்லுங்கள் – அண்ணாமலை

Annamalai vs TRP Raja: திமுக ஐடி விங் பிரதமர் மோடி வரும்போது கோபேக் மோடி என்று டிவிட்டரில் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்தால், நாங்கள் பதிலடியாக முதலமைச்சர் எங்கு சென்றாலும் கோபேக் ஸ்டாலின் என டிரெண்ட் செய்வோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   

“இவ்வளவு பெரிய சேதத்துக்கு ஆக்கிரமிப்புகளே காரணம்” – தமிழக வருவாய்த் துறை அமைச்சர் @ தென்மாவட்ட வெள்ளம்

அருப்புக்கோட்டை: கனமழையால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட காரணமே ஆக்கிரமிப்புகள்தான் என்றும், விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கப்படும் என்றும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7,000 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தம் கிராமத்தில் பயிர் சேதம் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று … Read more

புதிய வகை கொரோனா: தடுப்பூசி அவசியமில்லை, ஆனால் கவனம் தேவை

COVID Variant: புதிதாக பரவி வரும் கொரோனா மாறுப்பாட்டுக்கு தடுப்பூசி அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை குறித்த விளக்கத்தை கொடுத்துள்ளது. 

விசிக எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றம் @ கும்பகோணம் மகாமக குளக்கரை – நடந்தது என்ன?

கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்துக்கு கடந்த ஆக.5-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வந்தார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக அந்தக் கட்சியினர், கும்பகோணம் மகாமக குளக்கரைகளில் பிளக்ஸ் தட்டிகள் மற்றும் கொடிகளை கட்டியிருந்தனர். இதனை அறிந்த பாஜக மற்றும் இந்து அமைப்பினர், அங்குள்ள கொடிகளை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் சட்டம் – … Read more

பேரிடரே இல்லை என்றவர் அதை ஆய்வு செய்ய வருகிறார்… உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

Latest News In Tamil: பேரிடர் இல்லை என தெரிவித்த நிதி அமைச்சர் நாளை தூத்துக்குடியில் பேரிடர் பாதிப்புகளை பார்க்க வருகிறார் என்றும் ஆய்வு செய்து உரிய நிதியை தருவார் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.

“எண்ணூர் மீனவ குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்குக” – இபிஎஸ்

சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) நிறுவன வளாகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய், வெள்ளநீர் கழிவுகளுடன் கலந்து எண்ணூர் முகத்துவாரம் பகுதி வழியாக கடலில் கலந்தது. … Read more

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்கள் என 35 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார், மதுரை திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி விஜயகுமார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுன் சரக உதவி ஆணையர் கே.சுப்பையா, பழநி டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி … Read more

மக்களுக்கு பொங்கல் திருநாளில் நல்ல செய்தி… அதுவும் முதலமைச்சர் கைகளால்!

Kilambakkam Bus Terminus: தமிழ் புத்தாண்டான தை ஒன்றாம் தேதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டில் வரும் என்றும் முதலமைச்சர் கைகளால் திறந்து வைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு

சென்னை: பிரதமர் மோடி உத்தரவின்பேரில், நாளை தூத்துக்குடிக்கு வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். வங்கக்கடலில் மிக்ஜாம் புயல்காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7-ம் தேதி வந்து, வெள்ள சேதத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தேவையான உதவிகளை மத்திய … Read more