சொத்து குவிப்பு வழக்கு | அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து; டிச.21-ல் தண்டனை விவரம்: ஐகோர்ட்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர் 21-ம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி … Read more

கருவில் இருந்தே துரத்திய பகை..! 19 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த மகன்!

தந்தையை கொன்றவரின் மகனை 19 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக படுகொலை செய்த இளைஞரின் செயல் மதுரையையே அலறவிட்டுள்ளது.    

ஸ்ரீவைகுண்டம் | ரயிலில் சிக்கியுள்ள பயணிகள் இன்று மாலைக்குள் மீட்பு – ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகள் இன்று (டிச.19) மாலைக்குள் பத்திரமாக மீட்கப்படுவார்கள், அவர்களை அழைத்துச் செல்ல 13 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. மழை வெள்ளம் கரை காரணமாக … Read more

அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து… சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிப்பு எப்போது?

Tamil Nadu Latest Updates: அமைச்சர் பொன்முடியை சொத்துகுவிப்பு வழக்கில் விடுவித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை செய்யாமல் ஆதங்கப்பட்டு பலன் இல்லை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

சென்னை: மதுரை யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.பகவத்சிங் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்கக்கோரி 2006-ம் ஆண்டே தமிழக அரசு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரைத்துள்ளது. அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழியாக அறிவிக்கப்படவேண்டுமென்பதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் … Read more

மதுரை உட்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை.  

ஒரே குடும்பமாக வீறுநடை போடும் இந்தியா: திருச்செங்கோட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

நாமக்கல்: ஒரே குடும்பமாக இந்தியா வீறுநடை போட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசியதாவது: 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தின விழாவை நாம் எதிர்பார்த்து உள்ள வேளையில், முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடு என்பதை நோக்கி இந்தியா செல்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் … Read more

இன்னும் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தூத்துக்குடி காயல்பட்டினத்தில் 95 செ.மீ. பதிவு: தென் மாவட்டங்களில் 39 இடத்தில் அதி கனமழை

சென்னை: தென் மாவட்டங்களில் 39 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிச. 18-ம் தேதி (நேற்று) … Read more

ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய பயணிகள்… இரவில் உணவு விநியோகம் – மீட்பு எப்போது?

Tirunelveli Rain Damage: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் உள்ள பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.