தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை … Read more

பொன்முடி வழக்கு: நீதிபதி அப்பழுக்கற்றவர் ஆனால்…. – தீர்ப்புக்கு பிறகு திமுக ரியாக்ஷன்

நீதிபதி சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றாலும் அதிமுக ஆட்சியின் போது அவர் சட்டத்துறை செயலாளராக பணியாற்றி, இந்த வழக்கில் சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டுள்ளார் என திமுக வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ தெரிவித்துள்ளார்.   

பொன்முடி மீதான விடுதலை ரத்து ஏன்? – திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை: “குறித்த நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யாததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி உயர் நீதிமன்றம் பொன்முடி மீதான விடுதலையை ரத்து செய்துள்ளது” என திமுக எம்.பி.,யும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை குறித்து திமுக எம்பியும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ பேட்டி அளித்தார். அதில், “கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதை உயர் நீதிமன்றம் மாற்றி எழுதியிருக்கிறது போன்ற காரணங்களால் 3 வருட சாதாரண சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் … Read more

பொன்முடி வழக்கில் தீர்ப்பு… காலியான திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் எப்போது?

பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்எல்ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாகியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஜெயலலிதா, பாலகிருஷ்ண ரெட்டி வரிசையில் 3-வது தலைவர்… – பதவியை இழந்தார் பொன்முடி?

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை பெற்ற தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ பதவியை இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருக்கோவிலூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் பொன்முடி மூன்றாண்டு சிறை தண்டனை விதிப்பால் எம்எல்ஏ தகுதியை இழப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு … Read more

யார் இந்த பொன்முடி? பகுதிநேர பேராசியர் டூ அமைச்சர்

Ponmudi Background: திமுக அமைச்சராக இருக்கும் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். படிப்படியாக உயர்ந்து திமுகவின் முகமாக இருந்த அவரின் அரசியல் வாழ்க்கையில் இப்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை இனி கனவாகிவிடுமா?- டிஎஸ்பிஎஸ்சி தேர்வு அட்டவணை மீது ராமதாஸ் அதிருப்தி

சென்னை: “தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது; சமூக நீதியையும் ஏற்படுத்த முடியாது. இதை உணர்ந்து கொண்டு தமிழக அரசுத் துறைகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசுத் துறைகளுக்கு 2024-ஆம் ஆண்டில் 18 வகையான பணிகளுக்கு சுமார் 3,772 பேர் போட்டித் தேர்வுகளின் … Read more

சொத்துக்குவிப்பு வழக்கு! பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி!

Minister Ponmudi Case: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.  

20 உடல்கள் மீட்பு, 40 இடங்களில் மீட்புப் பணி சிரமம், மக்கள் மறியல் – தூத்துக்குடி வெள்ள பாதிப்பு நிலவரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 9 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று காலையில் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மழை வெள்ளத்தில் மூழ்கி 16 பேரும், சுவர் இடிந்து விழுந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்துள்ளனர். 20 பேரின் உடல்களும் முதலில் தூத்துக்குடி அரசு … Read more