“உலகத் தரத்துக்கு ஒப்பானது” – விமர்சனங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: “வானிலை ஆய்வு மையம் உலகத் தரத்துக்கு ஒப்பானது. வர்தா, கஜா, நிவர்‌, மாண்டோஸ்‌ மற்றும்‌ மிக்ஜாம்‌ புயல்கள்‌ குறித்து வானிலை மையத்தின்‌ எச்சரிக்கைகள்‌ காரணமாக பெருமளவு உயிர்‌ சேதம்‌ தவிர்க்கப்பட்டது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக் குறிப்பு: சமீபமாக, சென்னை வானிலை மையம்‌ நவீனமாக இல்லாமல்‌ இருப்பதாக தவறான விமர்சனங்கள்‌ ஊடகங்களில்‌ வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில்‌ பயன்பாட்டில்‌ இருக்கும்‌ அதிவேக … Read more

“மரியாதைக்குரிய அப்பா…” – நிர்மலா சீதாராமன் அறிவுரைக்கு உதயநிதி பதில்

சென்னை: “அப்பன் என்று கூறியது கெட்ட வார்த்தையா? நிதியமைச்சரின் மரியாதைக்குரிய, வணக்கத்துக்குரிய அப்பா என வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவுரைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அடக்கமாக இருக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?” என்ற … Read more

தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார்-வைகோ

தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   

சாயல்குடி நகருக்குள் திடீரென புகுந்த காட்டாற்று வெள்ளம் – முகாமில் பொதுமக்கள் தங்க வைப்பு

ராமநாதபுரம்: தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வந்த காட்டாற்று வௌ்ளம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் திடீரென புகுந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். கிழக்கு கடற்கரை சாலையிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. கடந்த வாரம் அதிகனமழை பெய்ததையொட்டி தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வந்தடைந்த மழைநீர் கமுதி அருகே கோவிலாங்குளம் மற்றும் உசிலங்குளம் கண்மாய்கள் நிரம்பி சாயல்குடி கண்மாயை வந்தடைந்தது. மேலும் … Read more

தென் மாவட்டத்தில் அரசு என்ன செய்கிறது…? முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கம்!

Tamil Nadu Latest News: தென் மாவட்ட மக்கள் இன்னும் அவதியுற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) அங்கு அரசு நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“மழை நிவாரணப் பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தருமபுரி: தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். தருமபுரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று (டிச., 23) தருமபுரி ரோட்டரி அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பங்கேற்றார். முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: “வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகளை கடந்த மூன்று மாதங்களாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி … Read more

'நிர்மலா சீதாராமன் சொன்னது தவறானது…' ஒரே போடாக போட்ட தமிழக அமைச்சர்!

Tamil Nadu Latest News: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்து வருகிறார் என அமைச்சர் முத்துசாமி பேசி உள்ளார். 

தமிழத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் (இன்று) 23.12.2023 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், … Read more

'நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா…' நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி!

Tamil Nadu Latest News: பாஜகவின் ஒன்பதரை வருட ஆட்சியே ஒரு பேரிடர் என்பதால் தான் தற்போது வரை இந்த வெள்ள பாதிப்பை பேரிடர் என்று ஏற்க மறுக்கிறார்களோ என மத்திய அரசை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடி உள்ளார்.

வெள்ளம் வடிய வடிய வெளிவரும் பாதிப்புகள் – நிர்கதியில் தூத்துக்குடி மக்கள், முடங்கிய தொழில் துறை!

வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகே ஒரு பாலமே முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வசவப்பபுரம் முதல் தூத்துக்குடி துறைமுகம் வரை சாலையில் பல இடங்களில் கடுமையான … Read more