தமிழக செய்திகள்
எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: மிக்ஜாம் புயல், கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய்கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை, பாதிக்கப்பட்ட வர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதிகன மழை, வெள்ளப் பெருக்கின்போது, மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய் கழிவால் எண்ணூர் முகத்துவார பகுதிகளில் எண்ணெய் படலம் ஏற்பட்டது. இதனால்,அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டன. … Read more
தேசிய விவசாயிகள் தினம் | உழவர்களுக்கு உறுதுணையாக அரசு நிற்கும்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தேசிய விவசாயிகள் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உழவர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு நின்று காக்கும் என தெரிவித்துள்ளார். தேசிய விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் டிச.23-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தெலங்கானா ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள், விவசாயிகளுக்கு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தேசிய விவசாயிகள் தினத்தில் ஆத்ம நிர்பார் (சுயசார்பு இந்தியா) பாரதத்தை உருவாக்க தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கும் நமது விவசாயிகள் … Read more
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு; விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடிக்கு வட்டியில்லா கடன் வழங்க முடிவு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
சென்னை: தமிழகத்தில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்படவுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் … Read more
சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் கீழே விழுந்த பெருமாள் சிலையால் பரபரப்பு @ பென்னாகரம்
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த ஊர்வலத்தின்போது பெருமாள் சிலை கவிழ்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் அடுத்த அளேபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சாமி கோயில் உள்ளது. மிகப் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில், வைகுண்ட ஏகாதசி தினமான இன்று (டிச.23) அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதர் … Read more
தென் மாவட்டங்களில் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கட்டணமின்றி நகல்களைப் பெற அரசு ஏற்பாடு
சென்னை: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்க தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சில முக்கிய விவரங்களை தெரிவித்துள்ளது. தமிழக உயர் கல்வித் துறை இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே, … Read more
திண்டுக்கல்லில் மலைக்குன்றுக்கு நடுவே செல்லும் ரயில்: பாறைகள் விழுகிறதா என கண்காணிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே மலைக்குன்றுகளுக்கு நடுவே ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுவதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் வழியாக வாராந்திர ரயில் உட்பட 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். திண்டுக்கல் அருகே கொடைரோடு அடுத்துள்ள அம்பாத்துரை அருகே மலைக்குன்றுக்கு நடுவே ரயில் பாதை அமைந்துள்ளது. அவ்வப்போது, பாறைகள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழும். அதனை, ரயில்வே ஊழியர்கள் … Read more
அவசர சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் கால்நடைகள்: சிறப்பு மருத்துவர் குழுவை அமைக்குமா ஈரோடு மாவட்ட நிர்வாகம்?
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் மற்றும் சினைக்காலங்களில் அவசர மருத்துவ உதவி கிடைக்காததால் கால்நடைகள் உயிரிழந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஈரோடு மாவட்டத்தின் இரு கண்களாக ஜவுளித்தொழிலும், விவசாயமும் உள்ளன. விவசாயிகளின் வாழ்வோடு கலந்த கால்நடை வளர்ப்பும், ஈரோட்டின் பிரதான தொழிலாக உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம், புன்செய் புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் மாட்டுச்சந்தையில் குவியும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மற்றும் ஈரோடு ஆவினுக்கு வரும் பால் அளவு போன்றவை கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவத்தை … Read more
“உலகத் தரத்துக்கு ஒப்பானது” – விமர்சனங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னை: “வானிலை ஆய்வு மையம் உலகத் தரத்துக்கு ஒப்பானது. வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக் குறிப்பு: சமீபமாக, சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக … Read more