அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் தாயார் மறைவு: அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

விருதுநகர்: தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரனின் தாயார் இன்று (டிச.22) அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலரும் தமிழக வருவாய்துறை அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனின் தாயார் ஆர்.அமராவதி அம்மாள் (94) இன்று அதிகாலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக அம்மையாரின் உடல் விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள வருவாய்த்துறை … Read more

“பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்திடுக” – தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவை சந்தித்து … Read more

கடுப்பில் திமுக? இந்த முறையும் ஆளுநர் உரையில் பிரச்னையா? – தமிழக அரசியலில் சூழும் போர்மேகங்கள்

TN Governor Assembly Speech: கடந்தாண்டு சட்டப்பேரவை ஆளுநர் உரையின் போது பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், இந்தாண்டு ஆளுநர் எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்துகளை இதில் காணலாம். 

மிக்ஜாம் புயல் நிவாரணம் | ரூ.6,000 பெற ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் ரேஷன் கார்டு இல்லாத 4.90 லட்சம் பேர் நிவாரண தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் … Read more

பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம்…? நீதிபதியின் புதிய உத்தரவு என்ன…?

Ex Minister Ponmudi Case Update: பொன்முடியின் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 நாட்களாகியும் தண்ணீரில் தத்தளிக்கும் தூத்துக்குடி பகுதிகள் – கள நிலவரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது. இருப்பினும் பல இடங்களில் குடியிருப்புகளை சூழந்து இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் நிற்பதால் மக்கள் 5-வது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளித்தது. இடுப்பளவு முதல் கழுத்தளவு வரை தண்ணீர் தேங்கியதால் மக்கள் மிகக்கடுமையாக பாதிப்படைந்தனர். மழை வெள்ளம் … Read more

“நிதிஷ் குமார் கருத்தை ஸ்டாலின் எதிர்க்காதது ஏன்?” – ஹெச்.ராஜா கேள்வி

காரைக்குடி: “இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்த கருத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்யாதது ஏன்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இதுவரை எங்களது அமைச்சர்கள் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதில்லை என திமுகவினர் கூறி வந்தனர். பொன்முடிக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, இனிமேல் அவர்களால் மக்கள் முன்பாக முகம் காட்ட முடியாது. சனிப் பெயர்ச்சியால் திமுகவுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்று … Read more

மீண்டும் தொடங்கியது சென்னை – தூத்துக்குடி ரயில் சேவை! முழு விவரம்!

Chenani to thoothukudi Train: 5 நாட்களுக்குப் பின் முத்துநகர் விரைவு ரயில் இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  

அதே நாள்.. அதே வெள்ளம்.. அதே ஊர்கள்… | 100 ஆண்டுக்கு முன்பு தென் மாவட்டங்களை சூறையாடிய பெருமழை

சென்னை: கடந்த 17, 18-ம் தேதிகளில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மின் விநியோகம் பாதிக்கப்பட்டு 4 மாவட்டங்களும் இருளில் மூழ்கின. தொலைத்தொடர்பு முற்றிலும்முடங்கியது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல பகுதிகளும் தனித்தீவுகளாக மாறின. தற்போது வெள்ளம் வடிந்து தென் மாவட்டங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு … Read more

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27-ம்தேதி வரை 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். … Read more