பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம்…? நீதிபதியின் புதிய உத்தரவு என்ன…?

Ex Minister Ponmudi Case Update: பொன்முடியின் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 நாட்களாகியும் தண்ணீரில் தத்தளிக்கும் தூத்துக்குடி பகுதிகள் – கள நிலவரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது. இருப்பினும் பல இடங்களில் குடியிருப்புகளை சூழந்து இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் நிற்பதால் மக்கள் 5-வது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளித்தது. இடுப்பளவு முதல் கழுத்தளவு வரை தண்ணீர் தேங்கியதால் மக்கள் மிகக்கடுமையாக பாதிப்படைந்தனர். மழை வெள்ளம் … Read more

“நிதிஷ் குமார் கருத்தை ஸ்டாலின் எதிர்க்காதது ஏன்?” – ஹெச்.ராஜா கேள்வி

காரைக்குடி: “இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்த கருத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்யாதது ஏன்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இதுவரை எங்களது அமைச்சர்கள் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதில்லை என திமுகவினர் கூறி வந்தனர். பொன்முடிக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, இனிமேல் அவர்களால் மக்கள் முன்பாக முகம் காட்ட முடியாது. சனிப் பெயர்ச்சியால் திமுகவுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்று … Read more

மீண்டும் தொடங்கியது சென்னை – தூத்துக்குடி ரயில் சேவை! முழு விவரம்!

Chenani to thoothukudi Train: 5 நாட்களுக்குப் பின் முத்துநகர் விரைவு ரயில் இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  

அதே நாள்.. அதே வெள்ளம்.. அதே ஊர்கள்… | 100 ஆண்டுக்கு முன்பு தென் மாவட்டங்களை சூறையாடிய பெருமழை

சென்னை: கடந்த 17, 18-ம் தேதிகளில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மின் விநியோகம் பாதிக்கப்பட்டு 4 மாவட்டங்களும் இருளில் மூழ்கின. தொலைத்தொடர்பு முற்றிலும்முடங்கியது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல பகுதிகளும் தனித்தீவுகளாக மாறின. தற்போது வெள்ளம் வடிந்து தென் மாவட்டங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு … Read more

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27-ம்தேதி வரை 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். … Read more

ஏரி நீரில் மூழ்கிய கிணறு @ செங்கல்பட்டு – சுடுகாடு இருப்பதால் சுகாதார சீர்கேடு

செங்கல்பட்டு: சுடுகாட்டுக்கு அருகே ஏரி நீரில் மூழ்கிய குடிதண்ணீர் கிணற்றால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக ஆலப்பாக்கம் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர், வ.உ.சி நகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு வ.உ.சி. நகர் ஏரியில் கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்த கனமழையால் வ.உ.சி. நகர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் குடிநீர் கிணறும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. … Read more

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்த துறைகள் ஒதுக்கீடு: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்முடி வகித்து வந்த உயர் கல்வி உள்ளிட்ட துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித் துறையை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த துறைகளை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி … Read more

தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் … Read more