அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு: தமிழக அரசின் புதிய நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் தொடர்பாக புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தலைமையில் பதிவுத்துறை தலைவரை உள்ளடக்கிய அலுவலர் குழுவானது, கர்நாடகா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறை குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், அதன் தொடர்ச்சியாக கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வு கூட்டங்கள் அரசாணை (நிலை) எண். 131, வணிகவரி மற்றும் பதிவுத்துறை … Read more

“தென்காசியில் வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைப்பதை நிறுத்துங்கள்” – சீமான்

சென்னை: “தென்காசி நகரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் வகையில் பாட்டாக்குறிச்சி வனப்பகுதியில் திமுக அரசு அமைத்து வரும் விளையாட்டு வளாகப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இது முழுக்க முழுக்க தென்காசியின் பல்லுயிர் பெருக்கச்சூழலையும், இயற்கை அழகையும் அழித்தொழிக்கும் திமுக அரசின் முயற்சியே ஆகும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி கிராமம் அருகில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகளை அழித்து, தமிழக … Read more

கேரளாவில் கரோனா | தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த அரசு அறிவுறுத்தல்

சென்னை: “கேரளாவில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய அளவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: … Read more

விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த அருண் குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற எனது பற்களை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உடைத்தார். என்னைப் போல் பலரின் பற்களை அவர் உடைத்துள்ளார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அம்பை காவல் நிலையத்தில் … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக மழையும், சனிக்கிழமை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. … Read more

“அவன வெட்டுங்க” ரகசிய காதலனை வெட்டிவீச சொன்ன காதலி! பொன்னேரியில் நடந்த கொடூரம்!

பொன்னேரியில் ரகசிய காதலனை சினிமா பாணியில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளார் ரகசிய காதலி ஒருவர். இப்படி கொலை செய்யும் அளவுக்கு வன்மம் வளர்ந்தது ஏன்? கொலைக்கு பின்னணி என்ன என்பதை காணலாம்.  

‘ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக வழங்க தடை இல்லை’ – உயர் நீதிமன்றம் சொல்வது என்ன?  

சென்னை: ‘மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை’ என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘இடைக்கால உத்தரவு பிறப்பித்து, அதனை தாமதப்படுத்த முடியாது’ என கூறி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதன்மூலம், ரூ.6,000 நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க … Read more

கொடநாடு கொலை வழக்கு… 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' – இபிஎஸ் ஆஜராக உத்தரவு

Edappadi Palanisamy: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை: துரைமுருகன் தகவல்

வேலூர்: பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவு நீர்மட்டத்தை உயர்த்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு , நடப்பாண்டுக்கான கரும்பு அரவை பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கூறும்போது, ‘‘சென்னையைச் … Read more