பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

சென்னை: பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்புதெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்குவழங்கப்பட வேண்டும் என்றகருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடும் பின்னர் அதையே 2016-ல் 50 சதவீதஇடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண் இனத்துக்கே பெருமை சேர்த்தார். அதேபோல் … Read more

மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் – தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை: தமிழக மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு, முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழகத்தின் 4 அனல்மின் நிலையங்கள், அவற்றுக்கு மின்சாதனப் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின்கீழ் (டான்ஜெட்கோ) எண்ணூர், அத்திப்பட்டு புதுநகர் (வடசென்னை), தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய 4 இடங்களில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யும் அனல்மின் நிலையங்கள் உள்ளன. கப்பல், லாரி, … Read more

புத்தொழில், புத்தாக்க கொள்கையை வெளியிட்டார் முதல்வர்: 8 நிறுவனங்களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதி ஆணை

சென்னை: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ், 8 நிறுவனங்களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதிக்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023’ உருவாக்கப்பட்டுள்ளது. புத்தொழில் சார்ந்த அறிவாற்றலை மேம்படுத்துதல், மாநிலத்தின் புத்தாக்க சூழல், முதலீட்டு சூழலை வலுப்படுத்துதல், சந்தை அணுகுதலுக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்முனைவு தளம் சார்ந்தசெயல்பாட்டாளர்களை … Read more

குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தக் கோரி தஞ்சாவூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஆண்டு தோறும் குறுவை, சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பேரிடர் … Read more

“33 சதவீத இடஒதுக்கீடு பெண்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தும்” – ஆளுநர் தமிழிசை கருத்து

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான திறன் அறி நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகைளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை இதில் வெளிப்படுத்தினர். பரதநாட்டியம், சிலம்பாட்டம், குரலிசை, வாத்திய இசை, கழிவுப் பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் செய்வது, அறிவியல் செய்முறைகள் போன்ற திறமைகளை நிகழ்த்திக் காட்டினர். ஆளுநர், மாணவர்களின் திறமைகளைக் கண்டு, மாணவர்களைப் பாராட்டிச் சிறப்பித்தார். ஆசிரியர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் … Read more

சிவகிரி பெரியபிராட்டி அம்மன் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவு

மதுரை: சிவகிரி பெரியபிராட்டி அம்மன் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி இந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர் சின்னசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பெரியபிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயிலின் அருகே உள்ள காலியிடத்தில் தான் … Read more

“பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன்…ஆனால்..” ட்வீட்டில் ட்விஸ்ட் வைத்த கமல்..!

Kamal Haasan On Women Reservation Bill: மக்களவையில் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் வரவேற்பு அளித்துள்ளார். 

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட அலகுகள் 4 உள்ளன. இவற்றின் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு … Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ராட்சத லாரிகளில் கொண்டுவரப்பட்ட உபகரணங்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கான உபகரணங்கள் ராட்சத லாரிகளில் கொண்டு செல்லப்பட்டதையொட்டி வி.எம். சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகள் நிர்மாணிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த அணு உலை கட்டுமானங்களுக்கான பொருட்கள் மிதவை கப்பல்கள், ராட்சத லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. அந்தவகையில் ராட்சத … Read more