கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ராட்சத லாரிகளில் கொண்டுவரப்பட்ட உபகரணங்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கான உபகரணங்கள் ராட்சத லாரிகளில் கொண்டு செல்லப்பட்டதையொட்டி வி.எம். சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகள் நிர்மாணிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த அணு உலை கட்டுமானங்களுக்கான பொருட்கள் மிதவை கப்பல்கள், ராட்சத லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. அந்தவகையில் ராட்சத … Read more

காவிரி விவகாரத்தில் தமிழக கோரிக்கையை கர்நாடகம் எக்காலத்திலும் ஏற்றது இல்லை: துரைமுருகன்

சென்னை: “காவிரி விவகாரத்தில் இதுவரையில், தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகம் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொண்டது இல்லை. நாம் பெற்றிருக்கிற உரிமை முழுவதும் உச்ச நீதிமன்றத்தில் பெற்ற உரிமைகள்தான். அதேபோல வரும்காலத்திலும் பெறுவோம்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “காவிரி நீர் விவகாரத்தில், தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் சார்பில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்தோம். … Read more

கேரள லாட்டரியில் முதல் பரிசை தட்டிச்சென்ற தமிழர்..! எத்தனை கோடி பரிசு தொகை தெரியுமா..?

Kerala Lottery Onam Bumper Winner: கேரளா லாட்டரி திருவோணம் பம்பர் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் பரிசை தமிழர் தட்டிச்சென்றுள்ளார்.   

மதுரையில் அரசு மருத்துவமனை, கூர்நோக்கு இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

மதுரை: மதுரையில் அரசு கூர்நோக்கு இல்லம் மற்றும் அரசு மருத்துவமனை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். மதுரையில் பல்வேறு நிகழச்சிகளில் பங்கேற்க இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். அவர், நேற்று நள்ளிரவில் மதுரை காமராசர் சாலையில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லம் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உடை மற்றும் அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார். … Read more

“ஒன்பதரை ஆண்டுகளில் மோடி என்னத்தை கிழித்து உள்ளார்?” உதயநிதி ஸ்டாலின் காரசார பேச்சு!

மதுரையில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஒன்பதை ஆண்டுகளில் மோடி என்னத்தை கிழித்துள்ளார் என தெரியவில்லை என்று பேசினார்.   

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை வாதங்களை ஏற்று, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் … Read more

“எதுக்கு புரியாம பேசுற?” கடுப்பான கனிமொழி-நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன..?

டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று, எம்.பி கனிமொழியை பாஜகவினர் பேச விடாமல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

அக்.9-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: “வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தின், பேரவை மண்டபத்தில் சட்டமன்றம் கூட இருக்கிறது” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தில், பேரவை மண்டபத்தில் சட்டமன்றம் கூட இருக்கிறது. அன்றைய தினம், 2023-24-ம் ஆண்டுக்கான கூடுதல் … Read more

விவேக் முதல் விஜய் ஆண்டனி வரை..பேரிழப்பை சந்தித்த சினிமா பிரபலங்கள்..!

Tamil Celebrities who lost their Family: தமிழ் சினிமாவில், பிரபலங்கள் சிலர் தங்களது பிள்ளைகளையும் ரத்த சொந்தங்களையும் இழந்துள்ளனர். அவர்கள் யார்..? 

ஆளுநர் ரவியை நீக்கக் கோரும் 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் அளித்ததாக வைகோ தகவல்

புதுடெல்லி: தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை ஒப்படைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும், தமிழக அரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதால், அவரை தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் 57 எம்பி.க்கள் உள்ளிட்ட 50 லட்சம் … Read more