தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செப்.20(இன்று) முதல் 23-ம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.24, 25 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் … Read more

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவு நபர்களை விரைந்து கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நியோமேக்ஸ் நிறுவனம் 20-க்கும் மேற்பட்ட போலி கம்பெனி பெயர்களில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணன், இயக்குனர் சிங்காரவேலன் உட்பட 17 பேரை கைது செய்துள்ளனர். … Read more

செங்கல்பட்டு என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் போலீஸ் என்கவுன்டரில் இருவர் கொல்லப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வினோத் என்ற சோட்டா வினோத், மற்றும் ரமேஷ் என்ற இரண்டு ரவுடிகள் காவல் துறையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க கோரி சோட்டா வினோத்தின் தாயார் ராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். … Read more

நீதிமன்ற அவமதிப்பில் கல்வி அலுவலருக்கு காலையில் விதிக்கப்பட்ட தண்டனை, மாலையில் நிறுத்தி வைப்பு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலருக்கு காலையில் தனி நீதிபதி வழங்கிய 4 வார சிறைத் தண்டனையை மாலையில் உயர் நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்தது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜான்சிராணி. பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்தார். இவரது பணி நியமனத்தை அங்கீகரித்து பதவி உயர்வு மற்றும் பணப்பலன் வழங்க உயர் நீதிமன்றம் 2019-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை 2020-ல் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடியானது. மேல்முறையீடு தள்ளுபடியான பிறகும் உயர் … Read more

"இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்" – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு காணொலி வாயிலாக நடந்தது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் நான் பங்கெடுத்து உரையாற்றுகிறேன். சமூக நீதி, மதசார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல் இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா என்பதால், இத்தகைய கருத்தியல்களை முன்னெடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் அகில இந்திய அளவில் … Read more

அக்.1 முதல் பழநி கோயிலுக்கு மொபைல் போன் கொண்டு செல்ல தடை

திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலுக்கு அக்-1 முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி பாதுகாப்பு மையத்தில் வைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோயில் வளாகத்திலும், கோயில் பின்னணியில் மொபைல் போனில் தங்களை படம்பிடித்து மகிழ்வர். இந்நிலையில் பழநி முருகன் கோயில் கருவறைக்குள் … Read more

“அண்ணா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளதா?” – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை: “அண்ணா குறித்த உண்மைக்குப் புறம்பான விமர்சனங்களை அண்ணாமலை தவிர்த்திருக்க வேண்டும்” என அதிமுக கூட்டத்தில் அக்கட்சியின் கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், பூத் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப் 19) நடந்தது. இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து பேசியது: “பேரறிஞர் அண்ணா ஏழைகளுக்காக திமுகவை தொடங்கினார். இன்று திமுக குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சி தொடர்பாக ட்விட்டரிலும், முகநூலிலும் … Read more

விவாகரத்து கோரும் ஓ.பி. ரவீந்திரநாத்… நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

OP Ravindranath Divorce Petition: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம்: நாமக்கல் இறைச்சிக் கடை உரிமையாளர் கைது

நாமக்கல்: சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் ஹோட்டலுக்கு கோழி இறைச்சி சப்ளை செய்த இறைச்சிக் கடை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சவர்மா எனப்படும் கோழி இறைச்சி சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி (14) என்பவர் நேற்று உயிரிழந்தார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அதே ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் … Read more