மரங்களை வெட்டி, எடுத்துச் செல்ல ஆன்லைனில் அனுமதி கோரும் முறையை கொண்டுவர வேண்டும்: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் வலியுறுத்தல்

சென்னை: மரங்களை வெட்டி, கொண்டு செல்ல, ஆன்லைனில் அனுமதி கோரும் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்க தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி’ என்ற களப்பயிற்சி கோவை, திருவண்ணாமலை, தென்காசி, தருமபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 7-ம் தேதி காலை 10 … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6, 7-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், … Read more

சென்னை மக்கள் கவனத்திற்கு… முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – என்ன காரணம்?

Chennai Traffic Changes: சென்னையில் நாளை காலை மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய டிஜிபி உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு ஆலோசித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீஸாரை … Read more

மாங்கனி திருவிழா படத்துக்கு பதிலாக வேறு படம் – ‘புதுச்சேரி அரசு தயாரித்த காலண்டரிலும் புறக்கணிப்பு’

காரைக்கால்: புதுச்சேரி அரசால் காரைக்கால் பிராந்தியம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான காலண்டரில்கூட இது வெளிப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 4 பிராந்தியங்களில் புதுச்சேரிக்கு அடுத்த நிலையில் பரப்பளவிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் 5 சட்டப்பேரவை தொகுதிகளுடன் பெரிய பிராந்தியமாக காரைக்கால் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து காரைக்கால் வளர்ச்சியை புறக்கணித்து வருவதுடன், அலட்சியப் படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். … Read more

86 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.25 அடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 71.25 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்யததாலும், கர்நாடக அரசு மாதந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், நீர்வரத்து குறைந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி நிறுத்தப்பட்டது. … Read more

“யோகா பயிற்சி உலகம் முழுவதும் செய்வதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும்” – ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கியது. கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு யோகா திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது: யோகா கலையை பற்றி உலகம் அறிவதற்கு முன்பே புதுச்சேரியில் 29 ஆண்டு காலமாக யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எனது பாராட்டை தெரிவிக்கிறேன். யோகா என்பது மனதும், உடம்பும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது. உடல்நலமும், … Read more

பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு: கேலோ இந்தியா விழாவில் பங்கேற்க அழைப்பு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடக்கவிருப்பதை அடுத்து, இதில் பிரதமருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி இன்று நேரில் சந்தித்துள்ளார். கிரிக்கெட், ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகளில் திறமையானவர்களைக் கண்டறிந்து பயிற்சியளித்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்யும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் … Read more