Pongal 2024: பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை முதல் விநியோகம்

Alert To Ration Card Holders: ஜனவரி 7 முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கவிருப்பதாகவும், ரேஷன் கடைகளில் நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா, புத்தாண்டையொட்டி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, நிகழாண்டில் இன்று (ஜன.6) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்குப் பின்னர் போட்டிகள் தொடங்கியது. … Read more

தமிழக அரசின் குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ஓய்வூதியர்களுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். Source link

சென்னையில் நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நாளை தொடங்கும் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மேம்படுத்த, அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்று, புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகிறது. இதைக் கருத்தில் கொண்டே, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாடு, வெளிமாநிலப் … Read more

ஜனவரியில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் (ஜன. 6),நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வியாழக்கிழமை (நேற்று) பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. … Read more

நெருங்கும் தேர்தல்… உள்ளூர் பிரச்சினையை கையிலெடுக்கும் அதிமுக… – சிவகங்கையில் போராட்டம் அறிவித்த இபிஎஸ்

சிவகங்கை: மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக தலைமை உள்ளூர் பிரச்சினைக்கு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சிவகங்கை நகராட்சியில் தூய்மைப் பிரச்சினைக்கு ஜன.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியான அதிமுக முக்கிய பிரச்சினைகளுக்கு மட்டும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வந்தது. ஆனால் பாஜகவோ உள்ளூர் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இதனால், பெரிய அளவில் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என அதிமுக மீது … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு: மதுரையில் நீதித் துறை நடுவர் பரபரப்பு சாட்சியம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பரபரப்பு சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 19.6.2020-ல் கரோனா காலத்தில் ஊரடங்கு நிபந்தனையை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தs சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் … Read more