பிஜேபி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது! முன்னாள் அமைச்சர் கட்டளை!

பிஜேபி கட்சி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். 4 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், எண்ணூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். நாடு முழுவதும் அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் சார்ந்து கோடி … Read more

ஷவர்மா பிரியர்களே அலெர்ட்! பாதிக்கும் மேற்பட்ட கடைகளில் கெட்டுப்போன சிக்கன்!

Shawarma: காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஷவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரைடு நடத்தினர்.  

அண்ணா – தேவர் மோதல்: நடந்தது என்ன?

சனாதனத்தைப் பற்றிப் பேசிய திமுகவின் நிறுவனர் அண்ணாவே 1956-ல் மதுரை தமிழ்ச் சங்க நிகழ்ச்சி மேடையில் தெரிவித்த கருத்துக்காக பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரால் வெளிப்படையாக கண்டிக்கப்பட்டார், மன்னிப்பு கேட்ட பிறகே ஊர் திரும்ப முடிந்தது என்று அண்மையில் பாஜக-வின் தமிழக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். “இது ஆதாரமற்ற செய்தி, திராவிட இயக்கத்தை வளர்த்த முன்னோடியை வேண்டுமென்றே அவதூறாகப் பேசியிருக்கிறார் அண்ணாமலை, இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அதிமுக தலைவர்கள் சொன்னதோடு… கடுமையான வார்த்தைகளால் அண்ணாமலையை … Read more

தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செப்.20(இன்று) முதல் 23-ம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.24, 25 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் … Read more

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவு நபர்களை விரைந்து கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நியோமேக்ஸ் நிறுவனம் 20-க்கும் மேற்பட்ட போலி கம்பெனி பெயர்களில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணன், இயக்குனர் சிங்காரவேலன் உட்பட 17 பேரை கைது செய்துள்ளனர். … Read more

செங்கல்பட்டு என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் போலீஸ் என்கவுன்டரில் இருவர் கொல்லப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வினோத் என்ற சோட்டா வினோத், மற்றும் ரமேஷ் என்ற இரண்டு ரவுடிகள் காவல் துறையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க கோரி சோட்டா வினோத்தின் தாயார் ராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். … Read more

நீதிமன்ற அவமதிப்பில் கல்வி அலுவலருக்கு காலையில் விதிக்கப்பட்ட தண்டனை, மாலையில் நிறுத்தி வைப்பு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலருக்கு காலையில் தனி நீதிபதி வழங்கிய 4 வார சிறைத் தண்டனையை மாலையில் உயர் நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்தது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜான்சிராணி. பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்தார். இவரது பணி நியமனத்தை அங்கீகரித்து பதவி உயர்வு மற்றும் பணப்பலன் வழங்க உயர் நீதிமன்றம் 2019-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை 2020-ல் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடியானது. மேல்முறையீடு தள்ளுபடியான பிறகும் உயர் … Read more

"இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்" – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு காணொலி வாயிலாக நடந்தது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் நான் பங்கெடுத்து உரையாற்றுகிறேன். சமூக நீதி, மதசார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல் இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா என்பதால், இத்தகைய கருத்தியல்களை முன்னெடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் அகில இந்திய அளவில் … Read more