“மத்திய அரசின் 9 ஆண்டு கால கடன் சுமைக்கு என்ன பதில்?” – அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சரமாரி கேள்வி

சென்னை: “தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால கடன் சுமை ரூ.100 லட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இதற்கான விளக்கத்தை தருவாரா? தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் அற்ப விளம்பரத்துக்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே … Read more

அடிச்சு தூக்கப்போகும் மழை… 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட், 12 மாவட்டங்களில் கனமழை!

Tamil Nadu Weather Forecast: தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

“இணைப்பு வசதியின்றி திணறும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும்” – அன்புமணி

சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான். கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் … Read more

“அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல்” – ஏஆர் ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தார். 1992இல் அறிமுகமானதிலிருந்து 30 ஆண்டுகளாக ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருக்கிறார் ரஹ்மான். கடைசியாக 2003ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்கு நேரடித் தமிழ்ப் படங்களுக்கு … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொங்கல் பரிசு விநியோகத்தை முன்னிட்டு உரிமைத்தொகை பெறும் 1.15 கோடி மகளிருக்கு இம்மாதம் 10-ம் தேதியே தொகை விடுவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பல ஆண்டுகளாக, நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் … Read more

Pongal 2024: பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை முதல் விநியோகம்

Alert To Ration Card Holders: ஜனவரி 7 முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கவிருப்பதாகவும், ரேஷன் கடைகளில் நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா, புத்தாண்டையொட்டி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, நிகழாண்டில் இன்று (ஜன.6) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்குப் பின்னர் போட்டிகள் தொடங்கியது. … Read more