“33 சதவீத இடஒதுக்கீடு பெண்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தும்” – ஆளுநர் தமிழிசை கருத்து

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான திறன் அறி நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகைளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை இதில் வெளிப்படுத்தினர். பரதநாட்டியம், சிலம்பாட்டம், குரலிசை, வாத்திய இசை, கழிவுப் பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் செய்வது, அறிவியல் செய்முறைகள் போன்ற திறமைகளை நிகழ்த்திக் காட்டினர். ஆளுநர், மாணவர்களின் திறமைகளைக் கண்டு, மாணவர்களைப் பாராட்டிச் சிறப்பித்தார். ஆசிரியர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் … Read more

சிவகிரி பெரியபிராட்டி அம்மன் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவு

மதுரை: சிவகிரி பெரியபிராட்டி அம்மன் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி இந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர் சின்னசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பெரியபிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயிலின் அருகே உள்ள காலியிடத்தில் தான் … Read more

“பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன்…ஆனால்..” ட்வீட்டில் ட்விஸ்ட் வைத்த கமல்..!

Kamal Haasan On Women Reservation Bill: மக்களவையில் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் வரவேற்பு அளித்துள்ளார். 

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட அலகுகள் 4 உள்ளன. இவற்றின் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு … Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ராட்சத லாரிகளில் கொண்டுவரப்பட்ட உபகரணங்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கான உபகரணங்கள் ராட்சத லாரிகளில் கொண்டு செல்லப்பட்டதையொட்டி வி.எம். சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகள் நிர்மாணிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த அணு உலை கட்டுமானங்களுக்கான பொருட்கள் மிதவை கப்பல்கள், ராட்சத லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. அந்தவகையில் ராட்சத … Read more

காவிரி விவகாரத்தில் தமிழக கோரிக்கையை கர்நாடகம் எக்காலத்திலும் ஏற்றது இல்லை: துரைமுருகன்

சென்னை: “காவிரி விவகாரத்தில் இதுவரையில், தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகம் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொண்டது இல்லை. நாம் பெற்றிருக்கிற உரிமை முழுவதும் உச்ச நீதிமன்றத்தில் பெற்ற உரிமைகள்தான். அதேபோல வரும்காலத்திலும் பெறுவோம்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “காவிரி நீர் விவகாரத்தில், தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் சார்பில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்தோம். … Read more

கேரள லாட்டரியில் முதல் பரிசை தட்டிச்சென்ற தமிழர்..! எத்தனை கோடி பரிசு தொகை தெரியுமா..?

Kerala Lottery Onam Bumper Winner: கேரளா லாட்டரி திருவோணம் பம்பர் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் பரிசை தமிழர் தட்டிச்சென்றுள்ளார்.   

மதுரையில் அரசு மருத்துவமனை, கூர்நோக்கு இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

மதுரை: மதுரையில் அரசு கூர்நோக்கு இல்லம் மற்றும் அரசு மருத்துவமனை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். மதுரையில் பல்வேறு நிகழச்சிகளில் பங்கேற்க இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். அவர், நேற்று நள்ளிரவில் மதுரை காமராசர் சாலையில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லம் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உடை மற்றும் அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார். … Read more

“ஒன்பதரை ஆண்டுகளில் மோடி என்னத்தை கிழித்து உள்ளார்?” உதயநிதி ஸ்டாலின் காரசார பேச்சு!

மதுரையில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஒன்பதை ஆண்டுகளில் மோடி என்னத்தை கிழித்துள்ளார் என தெரியவில்லை என்று பேசினார்.   

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை வாதங்களை ஏற்று, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் … Read more