பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்: ஜாக்டோ – ஜியோ தீர்மானம்

சென்னை: பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் இன்று (07.01.2024) இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், ஆ.செல்வம், ச.மயில் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ தமிழ்நாடு அரசுக்கு … Read more

“தமிழக நிதி அமைச்சர் வரி குறித்த புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்” – அண்ணாமலை @ தருமபுரி

தருமபுரி: வரி குறித்து தமிழக நிதி அமைச்சர் புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என தருமபுரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 7) ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கினார். பின்னர் பாப்பாரப்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா நினைவு மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா ஆலயத்தில் பாரதமாதாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுப்ரமணிய அவரது நினைவிடத்தில் … Read more

“பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது” –  மதுரை எஸ்டிபிஐ மாநாட்டில் இபிஎஸ் திட்டவட்டம்

மதுரை: மதுரை – பாண்டிகோயில் அருகிலுள்ள திடலில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தொடங்கியது. மகாத்மா காந்தி என பெயரிட்டு இருந்த மாநாட்டுத் திடலில் கட்சி கொடியை மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஏற்றி, மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபீத் அகமது தொடக்க உரையாற்றினார். அகில இந்திய தலைவர் பைஸி, பொதுச் செயலர்கள் அகமது நவவி, உமர் பாரூக், … Read more

சென்னை, புறநகரில் காலை முதல் இடைவிடாமல் மழை: ஜனவரி மழைக்குக் காரணம் என்ன?

சென்னை: சென்னையில் இன்று (ஜன.7) காலை தொடங்கியே பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகலில் இருந்து ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்க்கிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. விடுமுறை நாள் என்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படாவிட்டாலும் நாளை மாலை வரை சென்னையில் கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மழை விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more

பருவநிலை மாறுபாடுகளுக்கு மரம்சார்ந்த விவசாயத்தின் மூலம் தீர்வு காணலாம்!

காவேரி கூக்குரல்: “பெரு வெள்ளம், அதீத வறட்சி போன்ற பருவநிலை மாறுபாடுகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தீர்வு காண முடியும்” என காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் கூறினார்.

சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு… காத்திருக்கும் சம்பவம் – மிக்ஜாம் தாக்கம் இருக்குமா?

Chennai Rain Forecast: சென்னை இன்று இரவு முதல் நாளை மாலை வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: 16  பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி ஆர்.தமிழ்சந்திரன் அப்பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஜெயஸ்ரீ சென்னை காவல்துறை நடவடிக்கைப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான மூர்த்தி திருநெல்வேலி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் … Read more

குமுளி மலைச் சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை – விதிமீறினால் ரூ.1,000 அபராதம்

குமுளி: சபரிமலை சீசனையொட்டி குமுளி மலைப் பாதையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. விலங்குகளை பாதுகாக்க வனச் சாலையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 கி.மீ. தூரமுள்ள குமுளி மலைச் சாலையில் விலங்குகள் குறுக்கிட வாய்ப்புள்ளதாக வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குரங்கு, மான், யானை, காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. தற்போது சபரிமலை சீசனையொட்டி இச்சாலை ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மலைச் சாலையில் வாகனங்கள் மேலே செல்ல … Read more

நீலகிரியில் சிக்கியது சிறுத்தை… உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம்!

Nilgiri Cheetah Issue: நீலகிரி மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி உள்பட இரண்டு பேரை கொன்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

தடையை விலக்கிய வக்பு வாரியம்… நில உரிமை பெற்ற கிராம மக்கள் @ சத்தியமங்கலம்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய பட்டா நிலத்தை, வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய நிலையில், ’இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, நிலத்தின் மீதான உரிமையை வக்பு வாரியம் விலக்கிக் கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அங்கணகவுண்டன்புதூர் கிராமத்தில், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு 71 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அப்போது தொடங்கி, இங்கு வீடுகட்டி வசித்து வந்த மக்கள், கொம ராபாளையம் ஊராட்சிக்கு … Read more