தமிழக செய்திகள்
“மோடி சொன்ன 5 T, பாஜக ஆட்சியில் 5 C” – ‘இந்தியாவுக்காகப் பேசுவோம்’ 2-ம் அத்தியாயத்தில் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை எல்லாவற்றிலும், 7.5 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசு முறைகேடு செய்திருப்பதாக சிஏஐ குறிப்பிட்டுள்ளது என்று தமிழக முத்லவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவுக்காகப் பேசுவோம் அத்தியாயம் 2-ல் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், 2024 தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது: வணக்கம்! இந்தியாவுக்காகப் பேசுவோம் (Speaking for India) பாட்காஸ்ட்டின் முதல் அத்தியாயத்துக்குப் பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் … Read more
டெல்லியில் பியூஷ் கோயலுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு: அண்ணாமலை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது
சென்னை: அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அண்ணாமலை விவகாரம் மற்றும் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கடந்த வாரம் டெல்லி சென்று அமித் ஷாவை நேரில் சந்தித்தார். அதன் பிறகு தமிழகத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து விமர்சிக்க, அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் … Read more
துருக்கியில் இருந்து 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் கொண்டுவர ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் சென்னை கொண்டுவர ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனோஜ், தனது 2 வயது பெண் குழந்தை சந்தியாவுடன், கடந்த செப்.7-ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நடுவானில் குழந்தை சந்தியாவுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் … Read more
நீலகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 27-ம் தேதி சில இடங்களிலும், 28-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, … Read more
போக்சோ வழக்கில் இழப்பீடு தாமதம்: உள்துறை முதன்மைச் செயலருக்கு ரூ.10,000 அபராதம்
மதுரை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்காததால் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தவளைகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள். எனது 7 வயது மகளுக்கு 2020-ல் வேலுச்சாமி என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் போக்சோ … Read more
நெல்லை – சென்னை ‘வந்தே பாரத்’ ரயில்: கோவில்பட்டியில் நிற்க வைகோ வலியுறுத்தல்
கோவில்பட்டி: நெல்லை – சென்னைக்கு இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய ரயில்வே மந்திரியிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார். நெல்லை-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ என்ற துரித ரயில் நாளை (செப்.,24) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்று சென்னையை சென்றடைகிறது. இந்த ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ஆவணம் செய்யுமாறு மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி … Read more
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி
மதுரை: ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் கார்வேந்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள பள்ளர் , பண்ணாடி, வாதிரியான், காலடி, குடும்பன், கடையன் மற்றும் தேவேந்திரகுலத்தான் ஆகிய ஜாதியினரை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா … Read more