தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? – முழு விவரம்!
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை: திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேம்பால வழக்கில் பெங்களூருவில் இருந்து நேராக நீதிபதி அசோக்குமார் வீட்டுக்கே காலை 11 மணிக்கு சென்று சரண்டர் ஆனார் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். பின்னர் சிறைக்குச் சென்று, விடுதலையும் ஆனார். அந்த வழக்கு என்ன ஆனது? 2011 முதல் 2021 வரை அதிமுகவினர் என்ன செய்தார்கள்? சிறை என்றவுடன் ஓடிப்போனவர் இல்லை ஸ்டாலின். சிறை என்றதும் ஓடோடி வந்தவர் அவர். கரூரில் உங்கள் … Read more
சென்னை: “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். இபிஎஸ் வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதை அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் … Read more
சென்னை: எஸ்ஐஆர் திருத்தப் பணிகள் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த வேண்டுமென திமுக சட்டத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதனுடன் எஸ்ஐஆர் திருத்தப் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதவி … Read more
திருப்பூர்: செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக கூறிய பிறகே, அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களை தான் முன்னெடுத்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், 6 பேர் … Read more
“மூன்று முறை ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிய ஜெயலலிதா, பழனிசாமியை ஏன் முதல்வராக்கவில்லை? பழனிசாமி கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் என்பது நாடறிந்த ஒன்று” என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் உருவாக்கவே ஒருங்கிணைப்பு கருத்துகளை வெளியிட்டேன். அதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். இன்று, யார் என்னிடத்தில் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இது கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது. திமுக எம்எல்ஏ வீட்டு … Read more
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆலய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவது இல்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயில் மேற்கு மதில்சுவர் அருகே கோயில் நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 3,150 சதுரஅடி பரப்பில், நவ.14-ம் தேதி முதல் 2026 ஜன.12-ம் தேதி வரை 60 நாட்களுக்கு தற்காலிக கடைகள் … Read more
சென்னை: எஸ்ஐஆர் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் மொத்தமாக கொடுத்து விநியோகிப்பதை தடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செலகத்தில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். அந்த வாக்காளர் பட்டியலில் இறந்து … Read more
சென்னை: எஸ்ஐஆர் ஆபத்து நிறைந்தது என தெரிந்திருந்தும் பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக அதை எதிர்க்க முடியாமல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. ரஷ்ய நவம்பர் புரட்சி தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியகம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் 108-வது நவம்பர் புரட்சி தின கொடியேற்ற நிகழ்ச்சி சென்னையில் இருகட்சிகளின் மாநிலக் குழு அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, … Read more
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘பன்முகத் திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டுச் செல்லும் தீராத கலைதாகமும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் கலைஞானி … Read more