தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? – முழு விவரம்!

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொய்யான தகவல்களைக் கூறி முதல்வர் ஸ்டாலினை விமர்சிப்பதா? – அன்புமணி, ஆதவ் அர்ஜுனாவுக்கு காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

சென்னை: திமுக வர்த்தக அணி செய​லா​ளர் காசி​முத்து மாணிக்​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேம்​பால வழக்​கில் பெங்​களூரு​வில் இருந்து நேராக நீதிபதி அசோக்​கு​மார் வீட்​டுக்கே காலை 11 மணிக்கு சென்று சரண்​டர் ஆனார் தற்போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். பின்​னர் சிறைக்​குச் சென்​று, விடு​தலை​யும் ஆனார். அந்த வழக்கு என்ன ஆனது? 2011 முதல் 2021 வரை அதி​முக​வினர் என்ன செய்​தார்​கள்? சிறை என்​றவுடன் ஓடிப்​போனவர் இல்லை ஸ்டா​லின். சிறை என்​றதும் ஓடோடி வந்​தவர் அவர். கரூரில் உங்​கள் … Read more

‘பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது’ – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். இபிஎஸ் வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதை அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் … Read more

எஸ்ஐஆர் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம்

சென்னை: எஸ்​ஐஆர் திருத்​தப் பணி​கள் குறித்த பொது​மக்​களின் சந்​தேகங்​களை தீர்ப்​ப​தற்கு தேர்​தல் ஆணை​யத்தை வலி​யுறுத்த வேண்​டுமென திமுக சட்​டத்​துறைக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை (எஸ்​ஐஆர்) தேர்​தல் ஆணை​யம் அமல்​படுத்​தி​யுள்​ளது. இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்​டணி கட்​சிகளு​டன் இணைந்து போராட்​டம், உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு என பல்​வேறு செயல்​பாடு​களை முன்​னெடுத்து வரு​கிறது. அதனுடன் எஸ்​ஐஆர் திருத்​தப் பணி​களுக்கு வழி​காட்​டு​தல்​கள் வழங்க திமுக தலைமை அலு​வல​கத்​தில் சிறப்பு உதவி … Read more

செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன் கருத்து

திருப்பூர்: செங்​கோட்​டையன் விவ​காரத்​தி​லும் திமுக பின்​னணி​யில் இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​பூர் மாவட்​டம் காங்​க​யம் அருகே தொட்​டி​பாளை​யம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக கூறிய பிறகே, அதி​முகவை ஒருங்கிணைப்​பது தொடர்​பாக பல்​வேறு விஷ​யங்​களை தான் முன்​னெடுத்​த​தாக செங்​கோட்​டையன் கூறியுள்ளார். மேலும், 6 பேர் … Read more

கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் பழனிசாமி! – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

“மூன்று முறை ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிய ஜெயலலிதா, பழனிசாமியை ஏன் முதல்வராக்கவில்லை? பழனிசாமி கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் என்பது நாடறிந்த ஒன்று” என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் உருவாக்கவே ஒருங்கிணைப்பு கருத்துகளை வெளியிட்டேன். அதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். இன்று, யார் என்னிடத்தில் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இது கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது. திமுக எம்எல்ஏ வீட்டு … Read more

திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது அறநிலையத் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை முழுக்க முழுக்க திமுக​வினர் பணம் சம்​பா​திக்க மட்​டுமே பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆலய மேம்​பாட்​டுக்​குப் பயன்​படுத்​தப்​படு​வது இல்லை என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயில் மேற்கு மதில்​சுவர் அருகே கோயில் நிர்​வாகத்​தால் அடை​யாளப்​படுத்​தப்​பட்ட 3,150 சதுரஅடி பரப்​பில், நவ.14-ம் தேதி முதல் 2026 ஜன.12-ம் தேதி வரை 60 நாட்​களுக்கு தற்​காலிக கடைகள் … Read more

பெட்டிக் கடைகளில் விநியோகிக்கப்படும் எஸ்ஐஆர் படிவங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் 

சென்னை: எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​குச்​ சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு வீடாக வழங்​காமல் பெட்​டிக் கடைகளில் மொத்​த​மாக கொடுத்து விநி​யோகிப்​பதை தடுக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக எம்​.பி. இன்​பதுரை புகார் மனு அளித்​துள்​ளார். இதுதொடர்பாக தலை​மைச் செல​கத்​தில் நேற்று தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியல் நேர்​மை​யாக இருந்​தால்​தான் தேர்​தலும் நேர்​மை​யாக நடக்​கும். அந்த வாக்​காளர் பட்​டியலில் இறந்து … Read more

பாஜகவுடன் கூட்டணியால் எஸ்ஐஆர் முறையை எதிர்க்க மறுக்கும் அதிமுக: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சனம் 

சென்னை: எஸ்​ஐஆர் ஆபத்து நிறைந்​தது என தெரிந்​திருந்​தும் பாஜக​வுட​னான கூட்​ட​ணி​யால் அதி​முக அதை எதிர்க்க முடி​யாமல் இருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் விமர்சித்​துள்​ளன. ரஷ்ய நவம்​பர் புரட்சி தின கொண்டாட்டத்தையொட்டி இந்​தியகம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் சார்​பில் 108-வது நவம்பர் புரட்சி தின கொடியேற்ற நிகழ்ச்சி சென்னையில் இருகட்சிகளின் மாநிலக் குழு அலு​வல​கங்​களி​லும் நேற்று நடை​பெற்​றது. பாலன் இல்​லத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செயலா​ளர் மு.வீர​பாண்​டியன் கொடியேற்​றி​னார். பின்​னர் செய்​தி​யாளர்களிடம் அவர் கூறும்போது, … Read more

மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள்: வீட்டுக்குச் சென்று முதல்வர் வாழ்த்து

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘பன்முகத் திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டுச் செல்லும் தீராத கலைதாகமும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் கலைஞானி … Read more