தொடங்கிவைத்த டாக்டர் இராமதாஸ்! #StopHindiImposition தெறிக்கும் டிவிட்டர் தளம்!

இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (Food Safety and Standards Authority of India- FSSAI) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.  உன்னதமான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இப்போது இந்தியை திணிக்கும் நோக்கத்திற்காக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களை உறையில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதற்காக உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.  இந்நிலையில், ஆவின் நிறுவனம் விற்பனை … Read more

வெளியானது பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர்!!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் எப்போதும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். இந்நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை … Read more

விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கு.. கீழே விழுந்ததில் பல் உடைந்ததாகவும், காவல் அதிகாரி பிடுங்கவில்லை எனவும் பேட்டி..!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக கூறப்படும் நிலையில், தனது பல் காவல்துறையினரால் பிடுங்கப்படவில்லை எனவும் கீழே விழுந்ததில் பல் உடைந்துவிட்டதாகவும் சூர்யா என்ற இளைஞர் தெரிவித்துள்ளார். பல் பிடுங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் விசாரணை நடத்த சேரன்மகாதேவி சார் ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி முக்கிய சாட்சியான சூர்யா, இன்று சார் ஆட்சியர் முன்னிலையில் ஆஜராகி ஒரு மணி நேரம் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் … Read more

திருச்சியில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை: ஆய்வறிக்கைக்கு ஒப்புதல்

திருச்சி: திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கான விரிவான பொது போக்குவரத்து திட்டம் (சி.எம்.பி) குறித்த ஆய்வறிக்கை மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அப்போது, இத்திட்டம் தொடர்பாக தனியார் நிறுவன அலுவலர் அழகப்பன் விளக்கமளித்து கூறியதாவது: திருச்சி மாநகருக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான பொதுப் … Read more

பொதுபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு: ஜாக்கிகள் வரவழைக்கப்பட்டு வீட்டை நகர்த்திய உரிமையாளர்

விருதுநகர்: பொது பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக கூறி ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டை இடிக்காமல் 14 அடிக்கு நகர்த்தி வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பனையூரை சேர்ந்தவர் லக்ஷ்மணன் இவரது மனைவி பஞ்சவர்ணம் 2001 முதல் 2006 வரை பிள்ளையார் நத்தம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தார். அப்போது ஏற்பட்ட தேர்தல் பகை தான் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் … Read more

நியாயமான கோரிக்கைங்க, விரைந்து நிறைவேற்றி கொடுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் விடுத்த உருக்கமான கோரிக்கை!

தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்களின் வாழ்வியல் போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் மிக மிக நியாயமானவையாகும். அவர்களது கோரிக்கை முழக்கங்களிலிருக்கும் தார்மீகத்தை உணர்ந்து, அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் … Read more

பழனி படிக்கட்டு போல கட்டுமஸ்தான உடலுக்கு ஊசி செலுத்திய மாஸ்டர் பலி..! அதிகப்படியான ஸ்டீராய்டால் விபரீதம்

ஆவடி அருகே நெமிலிச்சேரியில் ஆணழகன் போட்டிக்காக ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல் கட்டுமஸ்தாக இருக்க அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் இரண்டு கிட்னியும் செயலிழந்ததால்  நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு. உடலில் பழனி படிக்கட்டுக்கள் போல சிக்ஸ் பேக் வைக்கவும்… இரண்டு கைகளையும் உருண்டு திரண்ட ரெக்கையை போல மாற்றுவதற்காகவும்… ஜிம்மில் அதிதீவிர பயிற்சி மேற்கொண்டதால் … Read more

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2022-23-ல் ரூ.4,978 கோடி நஷ்டம் – மாதத்துக்கு ரூ.452 கோடி இழப்பு

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் 2022 – 2023-ம் நிதியாண்டில் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துறையின் கீழ் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினசரி 1.70 கோடி பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான … Read more

மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை

மாங்காடு: மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை அன்று பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் காணிக்கையாக ரூபாய் 31,66,363/-  (ரூபாய் முப்பத்து ஒன்று இலட்சத்து அறுபத்து ஆறாயிரத்து 3 முன்னூற்று அறுபத்து மூன்று மட்டும்) கிடைக்கப்பெற்றது. மேலும் பொன் இனங்கள் 320 கிராம் மற்றும் வெள்ளி இனங்கள் 450 கிராம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர். சீனிவாசன், திருக்கோயில் துணை … Read more