தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு களில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் 27, 28-ம் … Read more

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேச்சு

மதுரை: தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார். மதுரை கூடுதல் நீதிமன்ற அடிக்கல்  நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: தமிழ்நாட்டில் நீதித்துறை கட்டிடங்கள் மற்றும் அதற்கு தேவையான  உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் மேம்படுத்தி வருகிறது.  பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பணியாற்றுகின்றனர். நீதிமன்ற பணிகளை நேரலை … Read more

அண்ணாமலை ஃப்ளாஷ்பேக்: சினிமா பாடலில் தன் பெயரை ரஜினி எழுதச் சொன்னது அந்த ஒரே முறை தான்!

அண்ணாமலை ஃப்ளாஷ்பேக்: சினிமா பாடலில் தன் பெயரை ரஜினி எழுதச் சொன்னது அந்த ஒரே முறை தான்! Source link

கோவையில் மின் கம்பம் விழுந்து யானை உயிரிழப்பு..!!

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கிராமங்களும் விவசாய நிலங்களும் அதிகமாக காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் உணவைத் தேடி காட்டு யானைகள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக யானை-மனித மோதல்கள் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. அதோடு விவசாய பயிர் சேதமும் ஏற்படுகின்றன. மேலும் அப்படி வரும் யானைகளை வனத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து காட்டுக்குள் விரட்டும் நிகழ்வுகளும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட … Read more

ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு ஆபத்தானதாக என்.எல்.சி உள்ளது – அன்புமணி ராமதாஸ்

ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு ஆபத்தானதாக என்.எல்.சி உள்ளதாகவும், என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் கால நிலை அகதிகளாக இருப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலி இந்திராநகரில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், வணிகர் அமைப்புகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய அவர், என்.எல்.சியால் கடலூர் மாவட்டம் அழிந்து கொண்டே செல்வதாகவும், 60 ஆண்டு காலமாக என்.எல்.சி நிறுவனம் மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார். என்எல்சி சுரங்கத்தால் நிலத்தடி நீர் … Read more

ராகுல் காந்தி மீதான வழக்கு மோடியின் திட்டமிட்ட சதி – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் ராஜ்பவன் தொகுதியில் நேற்று கையோடு கை கோர்ப்போம் நடைபயணம் மேற்கொண்டனர். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன் தலைமை தாங்கினர். இதில் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மிஷன் வீதியில் புறப்பட்ட நடைபயணம் கடற்கரை சாலை அருகே நிறைவுபெற்றது. பின்னர் நாராயணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது: “குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் … Read more

மதுரை ஏர்போர்ட்டில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவை

அவனியாபுரம்:  மதுரை விமான நிலையத்தில், விரிவாக்க பணிகள் குறித்து நிலைய இயக்குநர் கணேசன் நேற்று கூறியதாவது: மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி ரூ.110 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 2024 ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும். இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் வரும் ஏப்.1 முதல் 24 மணி நேர சேவை துவக்கப்படவுள்ளது என்றார்.

மோடியை விமர்சித்த பழைய ட்வீட்டை கையில் எடுத்த காங்கிரஸ்; டெலிட் செய்ய மாட்டேன் என குஷ்பு உறுதி

மோடியை விமர்சித்த பழைய ட்வீட்டை கையில் எடுத்த காங்கிரஸ்; டெலிட் செய்ய மாட்டேன் என குஷ்பு உறுதி Source link

அதற்குள் அடுத்த பலி! தமிழகத்தில் தொடரும் சோகம்! சிக்கிய தற்கொலை கடிதம்!

திருச்சி அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் என்பவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் 47 பேர் பலியாகிய நிலையில், தற்போது 48வதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையின் படி, அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் … Read more

விவேகானந்தரின் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகளில் பாடங்களாக வைக்க வேண்டும்: பொன்னம்பல அடிகளார் பேச்சு

சென்னை: ராமகிருஷ்ண மடத்தால் 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கொல்கத்தா ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன், பேலூர் மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூற்றாண்டு நிறைவு விழாவில், குருதேவர்மற்றும் தூய அன்னையின் தீர்த்த … Read more