சேலம் அருகே பரிதாபம்.! மின்னல் தாக்கி விவசாயி பலி.!

சேலம் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் பறித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் நேற்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் கருமந்துறை பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி குழந்தையன் (40), அப்பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் வெள்ளரிக்காய் பறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே குழந்தையன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். … Read more

இறுதி தேர்வை முன்கூட்டி நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

தமிழகத்தில் தற்போது, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த 13-ம் பிளஸ் 2 பொதுதேர்வு தொடங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் எழுதவில்லை. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று (மார்ச். 16) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏதனால் இவ்வளவு ஆப்சென்ட், கடந்த முறை இது போன்ற நிலை வந்தபோது என்ன … Read more

கன்னியாகுமரி பாதிரியார் மீது கல்லூரி மாணவி பாலியல் புகார்..!

கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் மீது கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்த பெனடிக்ட் ஆன்றோ என்பவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இந்த நிலையில் அவர் மீது பேச்சிப்பாறையைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில், பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் … Read more

மாமல்லபுரம் – குமரி கிழக்கு கடற்கரை சாலை ரூ.24,435 கோடியில் 4 வழிப்பாதையாக விரிவாக்கம்: மத்திய அமைச்சர் பதில்

சென்னை: மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ரூ.24,435 கோடியில் 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப் படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருவான்மியூர் முதல்கன்னியாகுமரி வரை கடற்கரையை ஒட்டி கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இதில் திருவான்மியூர் முதல்மாமல்லபுரம் வரையிலான பகுதி தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையின் 697 கிமீ பகுதி தேசிய நெடுஞ்சாலை அணையத்தின் கீழ் வருகிறது. … Read more

”ஆயுதங்களுடன் போட்டோ வீடியோ வெளியிட்டால்..” – கோவை மாநகர காவல்துறை விடுத்த எச்சரிக்கை!

ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவேற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகர காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்… ”கோவை மாநகரில் வலைதள உபயோகிப்பாளர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பொறுப்பற்ற வகையிலும், சட்டம் பற்றிய புரிந்துணர்வு இல்லாமலும், சுய விளம்பரங்களுக்காகவும், கைகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு தோரணையாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்கிறார்கள். சிலர் ஆயுதங்களை … Read more

 Tamil news today live: தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்: பாலை வீதியில் ஊற்றி போராட்டம்

 Tamil news today live: தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்: பாலை வீதியில் ஊற்றி போராட்டம் Source link

திருவண்ணாமலை: இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து.! தாய்-மகன் உட்பட 3 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தாய்-மகன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெரியகல்லப்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் துறை. இவரது மனைவி சித்ரா(48). இவர்களது மகன் விக்னேஷ் (25). இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷ், இருசக்கர வாகனத்தில் தாய் சித்ரா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த உறவினரான இந்திராணி(55) ஆகியோரை அழைத்துக் கொண்டு வெறையூரில் இருந்து பெரியகல்லப்பாடி நோக்கி சென்று … Read more

இனி தி.மு.க.வின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது : அதிரடி அறிவிப்பு..!!

தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். இதனை மீறி வைக்கும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தி.மு.க. தலைவர் கடந்த 13-9-2019 அன்று அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை வெளிவந்த … Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அறிவுரை

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மத்தியசுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமாருக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டில் மார்ச்முதல் வாரத்தில் 2,082 எனபதிவான மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதற்கடுத்த வாரத்தில் 3,264-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை … Read more