ஜிபிஎஸ் வரைபடம் உதவியுடன் தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்களை தெரிவு செய்ய நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஜிபிஎஸ் வரைபடம் உதவியுடன் தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்களை தெரிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு: உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம் பேரூராட்சியில் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? முதல்வர் மு.க. ஸ்டாலின்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு, ஆலங்குளம் வட்டம், குத்தப்பாஞ்சன் … Read more

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை மீண்டும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பும் வெளியான நிலையில் அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி அமர்வு பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும், பொதுச் செயலாளர் தேர்தல் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சி.டி.நிர்மல்குமாருக்கு தடை!

செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக-விலிருந்து அதிமுக-விற்கு மாறிய சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கம்..!!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இந்த நிலையில், சென்னை – ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் இன்று நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசினர் தோட்ட ரெயில் நிலையத்திலிருந்து 1 மணிக்கு கடைசி ரெயில் இயக்கப்படும் எனவும் 5-15 நிமிடங்கள் … Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை; திமுக கவுன்சிலர் நீக்கம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி 5 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கம் அளித்தார். கடலூர், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு: இன்று நடைபெறும் இறுதி விசாரணை!

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இது தொடர்பாக சிவில் வழக்கு தொடரலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பும் வெளியான நிலையில் அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடிக்கு சாதகமாக வந்த தீர்ப்பு! இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி … Read more

மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் பெண் போராளிகள் வெளியில் தெரிகின்றனர் – திருச்சி சிவா!

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்ணினம் போற்றுவோம் என்ற தலைப்பில் திருச்சி சிவா பேசினார்.  

இன்று விலை உயர்ந்துள்ள தங்கம்!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு இன்று 400 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கமாகவே உள்ளது. அதிலும், பெரும்பாலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையே காணமுடிகிறது. சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கம் விலையானது ஏற்ற, இறக்கம் பெறுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஏற்றம் அடைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத்தங்கம், ஒரு கிராம் 50 ரூபாய் விலை உயர்ந்து, 5680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 22 … Read more

10.5% உள் ஒதுக்கீட்டிற்கான ஆணைய காலக்கெடு நீட்டிப்பு சமூக அநீதி: ராமதாஸ்

சென்னை: அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக மே 31ம் தேதிக்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்றி வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்க முதல்வர் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக … Read more

கள்ளக்குறிச்சி கலெக்டரின் ஷூவை.. கையில் தூக்கிச் சென்ற டவாலி.. வீடியோவால் பரபரப்பு – ஆக்சன் பாயுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தனது ஷூவை டவாலியை விட்டு தூக்கிச் செல்ல வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசாங்கத்தில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை தங்கள் சொந்த வேலைக்கோ அல்லது எடுபிடி பணிகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்பது சட்ட விதிமுறை. ஆனால், சில அதிகாரிகள் இந்த விதிமுறையை சட்டை … Read more