80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.!

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்த இளைஞர்களான சீனிவாசன் வயது 20 மற்றும் விக்னேஷ் வயது 23 இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு … Read more

தாயை பிரிந்து தவித்த குட்டியானை: ஆஸ்கர் புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியிடம் ஒப்படைப்பு

தாயை பிரிந்து தவித்த குட்டியானை: ஆஸ்கர் புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியிடம் ஒப்படைப்பு Source link

மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நேற்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேரவையில் பேசினார். அதில், “மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்! இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மார்ச் 24) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் … Read more

தமிழ் அலுவல் மொழி தீர்மானம்; பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய கோரிக்கை

தமிழை அலுவல் மொழியாக மாற்ற சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நிறுவனர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். ராமதாஸ் அறிக்கை; சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்பது நீண்ட நாட்களுக்கு முந்தையது என்பதாலும், அதன்பின் சூழ்நிலை மாறியிருப்பதாலும் தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்கும் முயற்சி மீண்டும் தொடங்கப்பட வேண்டும். … Read more

மூணாறு அருகே அட்டகாசம் செய்யும் அரிசி கொம்பனை பிடிக்க ‘விக்ரம், சூர்யா’ வருகை-4 கும்கிகளுடன் 26ம் தேதி ஆபரேஷன் ரெடி

மூணாறு : மூணாறு அருகே அட்டகாசம் செய்யும் அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் பயன்படுத்தப்பட உள்ளன. யானையை பிடிப்பதற்காக 26ம் தேதி 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரிசி கொம்பன் காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகள், பொது மக்களின் போராட்டங்கள் வலுவடைந்ததை தொடர்ந்து யானையை பிடிக்க வனத்துறை தீர்மானித்துள்ளது. இதனிடையே அதிக தாக்குதல் குணம் … Read more

நாகப்பட்டினம்: ஆட்சியர் பங்குபெற்ற அரசு விழாவில் பள்ளி மாணவர்களை டீ வாங்க அனுப்பிய அவலம்!

நாகை அருகே வடக்கு பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசுமையான மற்றும் தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு, டீ வாங்க பள்ளி மாணவர்களை கடைக்கு அனுப்பியதால் சர்ச்சை எற்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க அறக்கட்டளை சார்பில் 10 வகையான நிபந்தனைகளுடன் பசுமையான – தூய்மையான பள்ளி தேர்வுக்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு … Read more

கோவை குளக்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கைது

கோவை குளக்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கைது Source link

சென்னை : உள்ளாடைக்குள் மறைத்து கடத்தல்… ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் … Read more

நீங்கள் வருமான வரி செலுத்துபவரா ? உங்களுக்கான சிறப்பு மொபைல் செயலி அறிமுகம்..!!

இந்திய வருமான வரித் துறை ‘AIS for Taxpayers’ எனும் மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) / வரி செலுத்துவோர் தகவல் விவரம் (டிஐஎஸ்) போன்ற விவரங்களை வரி செலுத்துவோர் இதில் பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலியில் வரி செலுத்துவோருக்கு விரிவான தகவல் வழங்கப்படுவதாக தெரிகிறது. வரி செலுத்துவோர் தங்கள் டிடிஎஸ்/டிசிஎஸ், வட்டி, டிவிடெண்ட், பங்கு பரிவர்த்தனைகள், … Read more