விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் குறித்து விசாரணை: ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின்பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரம் என்ற மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்க செல்வதற்கு முன்பு ஷபீருல்லா என்ற தனது … Read more

ஸ்ரீதர் வேம்புக்கு நடந்தது என்ன? மனைவி சொல்வது பொய்… உலுக்கிய தற்கொலை எண்ணம்!

Zoho நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அமெரிக்காவில் வசித்து வரும் அவரது மனைவி பிரமிளா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான செய்தி சர்வதேச அளவில் புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழில் வெளியானது. மேலும் வழக்கறிஞர் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு தனது ட்விட்டரில் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார். ஆட்டிசம் குறைபாடு அதில், ஆட்டிசம் எங்கள் வாழ்வை பெரிதும் புரட்டி போட்டது. என்னை தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு கொண்டு போனது. எனது … Read more

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் நாசம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 100 ஏக்கர் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள வெள்ளகெவி வனப்பகுதியில், நேற்று மாலை சிறிய அளவில் காட்டு தீ பரவியது. அதன்பின்னர் காற்றின் வேகம் அதிகரித்ததால், காட்டுத் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பரவி வருவதால் … Read more

"வருங்காலத்தில் துணை முதலமைச்சராக வந்து.." – உதயநிதியை புகழ்ந்த அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர்!

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேவையை இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர், உதயநிதி துணை முதல்வராக வரவேண்டும் என்று தான் விருப்பப்படுவதாக தெரிவித்தார். ‘மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை’ என்ற அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 26 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில், … Read more

தமிழக தலித் பெண் ஆக்டிவிஸ்ட் மீது இணைய தாக்குதல்: தி.மு.க- பா.ஜ.க மீது புகார்

தமிழக தலித் பெண் ஆக்டிவிஸ்ட் மீது இணைய தாக்குதல்: தி.மு.க- பா.ஜ.க மீது புகார் Source link

சோழர் பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்! அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்!

அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான அரியலூர்:சோழர் பாசனத் திட்டத்தை 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து, நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு வேளாண்மையை விரிவாக்குவதும், பாசனப் பரப்பை அதிகரிப்பதும் தான் தீர்வு என்பதால், அதற்கான திட்டங்களை … Read more

சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கான இறுதி ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு

சென்னையில் வெள்ள பாதிப்பை குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக்குழுவின் இறுதி அறிக்கையை, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, முனைவர் வெ.திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட, வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. மழைநீர் தேங்கா வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், அதன் … Read more

பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஸ் வேண்டுகோள்

சென்னை: முன்னாள் மாணவர்களை இணைந்து பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக பள்ளிக் கல்வி துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும்தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் சென்றுவிட்டனர். இன்றிருக்கும் மாணவர்கள் நாளை சென்று விடுவர். ஆனால் … Read more

யார் கத்துக்குட்டி..? அதிமுகவை கவனமாக பார்த்துக்கோங்க – அதிமுக – பாஜக கருத்து மோதல்!

தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேசிய கடம்பூர் ராஜுவுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி எதிர்வினையாற்றியுள்ளார். அவர் தனது ட்வீட்டில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில், அ.தி.மு.க.வின் கடம்பூர் ராஜு, பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியுள்ளதோடு மரியாதைக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் அவன், இவன் என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்று … Read more

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ50 லட்சம் வர்த்தகம்

வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில்  இன்று ரூ50 லட்சம் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. … Read more