மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ளுங்கள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்

சென்னை: எந்த மாநிலத்துக்கு சென்று பணியாற்றினாலும், அம்மாநில மொழியை கற்று கொண்டால் மக்களுடன் நன்கு பழக உதவியாக இருக்கும் என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ஆளுநர் கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கைகளால், வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. என்னுடைய … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: தேதி குறிச்ச CMDA… குட்பை சொல்லும் கோயம்பேடு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க? என வடிவேலு பாணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சென்னைவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலை குறித்தால் சென்னை பெருநகருக்குள் வாகனப் போக்குவரத்து பெரிதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளுக்கு பிரத்யேக டைம்லைனே போடலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அந்த அளவிற்கு மிகவும் … Read more

குடும்ப தகராறில் 2 குழந்தை கொலை தாய் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த செந்தாரப்பள்ளியைச் சேர்ந்தவர் கவுரி(26). இவரது கணவர் கெட்டூரை சேர்ந்த பேக்கரி மாஸ்டர் முத்துராஜ். இவர்களது மகன் ஜீவன்(4), மகள் பாவனாஸ்ரீ (2). முத்துராஜ் சரிவர வேலைக்கு செல்லாததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி தகராறு முற்றியதில் கவுரி குழந்தைகளுடன்  தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நேற்று முன்தினம் இரவு, 2 குழந்தைகளுக்கும் எலிபேஸ்ட் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இருவரும் நேற்று … Read more

சுய லாபத்துக்காக ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்துள்ளனர் – உதயநிதி

சுய லாபத்துக்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், உதயநிதி ஸ்டாலின் துணை பொதுச் … Read more

இளைஞர்களே ரெடியா.. விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி 28ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி அன்று அருப்புக்கோட்டையில் … Read more

பழனி தண்டாயுதபாணி கோவிலில் எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது தெரியுமா ?

16 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 27-ம் தேதி பழனி தண்டாயுதபாணி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க ஆன்லைன் மூலம் முதலில் முன்பதிவு செய்யும் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜனவரி 18-ம் தேதி துவங்கி, ஜனவரி 20-ம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கும்பாபிஷேக விழாவில் எந்த நாளில் என்னென்ன வைபவம் … Read more

கல்குவாரிக்கு எதிராக போராடியவர் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டாரா? மக்கள் மறியலால் பரபரப்பு..!

நெல்லை மாவட்டம் ஊரல்வாய்மொழியில் கல்குவாரி லாரி மோதி விவசாயி பலியான நிலையில் கல்குவாரியை கண்டித்து மறியல் போரட்டம் நடத்தியவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். கல்குவாரிக்கு எதிராக போராடியவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுக்காவில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. கடந்த வருடம் ஒரு கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலியானதால் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்குவாரிகள் அனைத்தும் மீண்டும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டி உறுதி – கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் ஓபிஎஸ்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஓரிருநாளில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். அதேபோல, அதிமுக கூட்டணியில் பழனிசாமி தரப்புபோட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவைக் கோரும் பணிகளை மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துவிட்டது. … Read more

27ம் தேதி கும்பாபிஷேகம் பழநி பஸ் நிலையத்திலிருந்து கோயிலுக்கு இலவச பஸ்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பழநி: கும்பாபிஷேகத்தையொட்டி பழநி பஸ் நிலையத்திலிருந்து கோயிலுக்கு இலவச பஸ் இயக்குவதென முடிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று பழநியாண்டவர் மகளிர் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார். இதில் மாவட்ட கலெக்டர் விசாகன், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். … Read more