சென்னையில் பரபரப்பு… சேவல் சண்டையை தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல்…!!

சென்னை அடுத்த அயனாவரம் பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  அயனாவரம் கே2 காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது இறந்தவரின் உறவினர்கள் சாலையை மறித்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. இதனை காவலர் திருநாவுக்கரசு என்பவர் வீடியோ எடுத்த பொழுது சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் காவலரை தாக்கியுள்ளனர். அதனை தடுக்க முயன்ற பெண் உதவி ஆய்வாளர் மீனா என்பவரும் … Read more

பழைய இரும்புக்கடையில் விற்கப்பட்ட அரசு சைக்கிள்கள்.. மாணவர்களிடம் ரூ.2,000க்கு வாங்கி ரூ.3,000க்கு விற்பனை..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள், விருத்தாச்சலம் எம்.ஆர்.கே சாலையிலுள்ள பழைய இரும்பு கடையில் மூவாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அவற்றை வாங்க பொதுமக்கள் பேரம் பேசிவந்த நிலையில், செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கவனித்த கடை ஊழியர்கள், சைக்கிள்களை அருகிலுள்ள குடோனில் பதுக்கி வைத்தனர். பள்ளி மாணவர்களிடம் ஒரு சைக்கிளை 2,000 ரூபாய்க்கு வாங்கி, அதனை 3000 ரூபாய்க்கு விற்பதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்களில், நீண்ட தூர பயணத்தால் பள்ளிகளில் ஏற்படும் இடைநிற்றலைத் தடுக்க தமிழ்நாடு … Read more

நவீன டிராம் | சென்னைக்கு வருகிறது ‘லைட் மெட்ரோ’ – விரைவில் சாத்தியக் கூறுகள் ஆய்வு

சென்னை: சென்னைப் பெருநகருக்கான புதிய போக்குவரத்துத் திட்டத்தை தயாரிக்கும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் விரைவில் தொடங்க உள்ளது. இதில் “லைட் மெட்ரோ” திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 5904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டம் (Comprehensive Mobility Plan) தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. மத்திய … Read more

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் வீடு புகுந்து மகள்களை கடத்திய பெற்றோர்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே காதல் திருணம் செய்த புதுப்பெண்ணை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்றது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் பிரவீன்குமார் (22). பி.இ பட்டதாரி இவர், எருமப்பட்டி அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் மகள் கவுசல்யா (22) என்பவரை, கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, திருச்செங்கோடு அனைத்து … Read more

காற்றாலை மூலம் இத்தனை கோடி மிச்சப்படுத்தலாம்.. உற்பத்தியாளர்கள் தகவல்

காற்றாலை மூலம் இத்தனை கோடி மிச்சப்படுத்தலாம்.. உற்பத்தியாளர்கள் தகவல் Source link

காஞ்சிபுரம் : காதலி பேச மறுத்ததால் பென்ஸ் காருக்கு தீவைத்து எரித்த காதலன்.! குழப்பத்தில் போலீசார்.!

நேற்று இரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜகுளம் பகுதியில் குளக்கரை அருகே நின்ற பென்ஸ் சொகுசு காரில் ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் மோதலில் ஈடுபட்டனர்.  இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த காதலன் திடீரென காருக்கு தீவைத்தார். இதில் கார் முழுவதும் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனே அங்கு திரண்டு வந்தனர்.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் சம்பவம் குறித்து … Read more

தலைக்கவசம் இல்லைன்னா இனி இப்படியும் செய்வோம்.. போலீஸ் சொன்ன பாடம்..! மிரண்டு போன இளைஞர்கள்

கோவையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்துச்சென்ற போலீசார், அவர்களுக்கு 3 மணி நேரம் போக்குவரத்து விதிகள் குறித்து வகுப்பெடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.  கோவை மாநகரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிசெல்வோருக்கு அபராதத்துடன், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். கோவையில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் தலைக்கவசம் அணியாமல் வந்த … Read more

சிவகாசி, ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளில் தாய்-சேய் நல வாகனம் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சிவகாசி: சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தாய்-சேய் நல வாகனம் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி சுகாதார மாவட்டத்தில் உள்ள சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகள் உள்ளது. இதில் ராஜபாளையத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவிற்காக ரூ.7 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. சிவகாசி அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் … Read more

மருமகளுடன் தகராறு காரணமாக மாடியில் இருந்து பேரனுடன் குதித்த முதியவர் படுகாயம்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை என்.என்.நகர் 6வது தெருவை சேர்ந்தவர் லூகாஸ். இவருடைய மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு டென்னி ராஜ் (3), என்ற மகன் உள்ளார். லூகாசின் தந்தை அமுல்ராஜ் (60). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மருமகள் வேளாங்கண்ணிக்கும், அமுல்ராஜ்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த அமுல்ராஜ், பேரக்குழந்தை டென்னி ராஜை தூக்கிகொண்டு மொட்டை மாடிக்கு சென்று, அங்கிருந்து பேர குழந்தையுடன் கீழே குதித்துள்ளார். இதில், … Read more

கோவையில் அரசு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்த நபர் மரணம் : சிசிடிவி காட்சி வைரல்

கோவையில் அரசு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்த நபர் மரணம் : சிசிடிவி காட்சி வைரல் Source link