பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுப் புகார் – ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு வீடு ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முறைகேடு கண்டறியப்பட்டது எங்கு? உயர்நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன? இதுகுறித்து பார்க்கலாம்…. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் சேக்ஸ்பியர். 15 வருடங்களாக சிங்கபூரில் டெக்னீசியன் வேலை பார்க்கும் இவர், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது, வீடு கட்டும் திட்டத்தில் தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மக்கள் பலர் கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஆர்‌.டி.ஐ மூலம் அனுமதி பெற்று பஞ்சாயத்து கணக்குகளை ஆய்வு செய்தார் சேக்ஸ்பியர். இதில் … Read more

‘பாபா’ திரைப்படத்தின் புதிய டிரைலர் பார்த்திருக்கீங்களா..!!

கடந்த 2002-ல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த படம் பாபா. இந்த படத்தில் நாயகியாக மனிஷா கொய்ரலா நடித்திருப்பார். சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்து இருந்தார். இந்த படத்தில் ரஜினி காட்டும் பாபா முத்திரை அவரின் தனி அடையாளமாகவே மாறியது. தற்போது பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங் செய்துள்ளனர். அதோடு பாபா படத்துக்கு … Read more

வனத்துறை நிலத்தை பினாமிகள் மூலம் அதிகாரி அபகரித்ததாக வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அரசு உயர் அதிகாரி ஒருவர் பினாமிகள் மூலமாக அபகரித்த விவகாரம் குறித்து கூடுதல் செயலாளர் தலைமையில் விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூலாத்தூர் கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை, தமிழக முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியாக உள்ள அம்பலவாணன் என்பவருக்கு பினாமிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி பூலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை … Read more

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தது காங்கிரஸ் – கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் அரசியலுக்காக நடத்தப்படுவதில்லை என, தமிழக கட்சித் தலைவர் தெரிவித்து உள்ளார். சென்னையில் இன்று, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: தமிழ் வளர்ச்சிக்கு பாஜக முக்கியத்துவம் தருகிறது என அவர்கள் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அமித் ஷாவின் கல்விக் கொள்கையில் முக்கிய தேர்வுகளை ஹிந்தியில் தான் கேள்வி இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். அது தவறு. எனவே அவர்கள் ஒரு மாநில மொழி … Read more

நாகை ரேசன் கடைகளில் 5 கிலோ எடை கேஸ் சிலிண்டர் விற்பனை

நாகை: நாகையில் ரேஷன் கடைகள் மூலம் 5 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.  கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் நாகைமாலி, முகமது ஷாநவாஸ், நகரமன்றத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுசங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்றார். விழாவில் 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விற்பனையை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:கூட்டுறவுதுறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள், சிறு … Read more

கடன் தொல்லை.. கணவன் – மனைவி விஷம் குடித்து தற்கொலை..!

விருதுநகரில், கடன் தொல்லை காரணமாக கணவன் – மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் எஸ்.வி.பி.என்.எஸ் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா(41). இவருடைய மனைவி அருணா மகேசுவரி(37). இந்தத் தம்பதிக்கு அர்ச்சனா ஸ்ரீ(17), மேகாஸ்ரீ (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். கார்த்திக் ராஜா அதே பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வந்தார். கடந்த சில வாரங்களாக கார்த்திக் ராஜா கடன் பிரச்சினை காரணமாக விரக்தியுடன் … Read more

நடிகை காயத்ரி ரகுராம் வகித்த பதவியில் இசையமைப்பாளர் தீனா நியமனம்

சென்னை: தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இசை அமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தப் பதவியை காயத்ரி ரகுராம் வகித்திருந்தார். பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ விவகாரத்தில் காயத்ரி ரகுராம் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார். இதையடுத்து வர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக … Read more

மீண்டும் இங்கே வந்துடுங்க..! கோவை செல்வராஜுக்கு ஓபிஎஸ் டீம் தூது!

அணிக்கு மீண்டும் வரும்படி, கோவை செல்வராஜுக்கு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி அழைப்பு விடுத்து உள்ளார். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில், ஓ.பன்னீர்செல்வம் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை, எடப்பாடி … Read more

மேல ஆசாரிபள்ளத்தில் மேயர் ஆய்வு

நாகர்கோவில்: நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் பகுதியில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று காலை  ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் சாலைகள், வடிகால்களில் மேற்கொள்ள  வேண்டிய சீரமைப்பு பணிகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதி மாணவர்கள் மின் விளக்கு அமைத்து தர கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.   இந்த ஆய்வின் போது துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவஹர்,  மாநகர திமுக தலைவர் ஆனந்த், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல்,  … Read more