குட்டி மாவட்டமான குமரியில் ஒரு டஜன் மாநில நிர்வாகிகள்: அவ்ளோ பேரையும் தி.மு.க மேடையில் ஏற்ற முடியுமா?

குட்டி மாவட்டமான குமரியில் ஒரு டஜன் மாநில நிர்வாகிகள்: அவ்ளோ பேரையும் தி.மு.க மேடையில் ஏற்ற முடியுமா? Source link

தமிழகத்தில் 5ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் … Read more

வீடியோவை தடை செய்ய ஐகோர்ட் உத்தரவு..!

தனது அறையில் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ளும் நீதிபதி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என, டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி கோர்ட் நீதிபதி ஒருவர் தனது அறையில் சக பெண் ஊழியருடன் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த காட்சிகளை தடுக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மனுதாரரின் … Read more

மணக்குள விநாயகர் கோயிலில் யானை லட்சுமி நின்ற இடத்தில் பூக்கள் வைத்து பக்தர்கள் மரியாதை

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோயில் இன்று பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. யானை லட்சுமி கோயில் முன்பு நின்ற இடத்தில் பக்தர்கள் பூக்கள் வைத்து அன்பை வெளிப்படுத்தினர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்று உயிர் இழந்தது. உடல் கூறு ஆய்வு இரண்டு மணி நேரம் நடந்தது. அப்போது யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதையடுத்து யானை லட்சுமி உடல் குழியில் இறக்கப்பட்டு அதில் 50 மூட்டைகள் உப்பு, விபூதி … Read more

பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவையுங்கள்: அன்புமணி கோரிக்கை!

அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளை முன்னிட்டு டிசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறும் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் … Read more

பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத் யூரியா அறிமுகம்

தூத்துக்குடி: பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் பாரத் யூரியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வேளாண் உற்பத்திக்கு பயன்படும் உரங்களை பாரத் யூரியா என பெயர் மாற்றம் செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தயாரிக்கும் யூரியா உரம், பாரத் யூரியா என பெயர் மாற்றப்பட்டது.

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்! நகரமன்ற தலைவரை போட்டுக் கொடுத்த திமுக கவுன்சிலர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சத்தியசீலன். இவர் வீடு கட்ட அனுமதிக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சம்பந்தப்பட்ட திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த திமுக கவுன்சிலர் சத்தியசீலன் ஆறு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்றும் அப்பொழுது நகரமன்ற தலைவராக உள்ள திமுகவை சேர்ந்த பரிமளா என்னை அழைத்து ஒப்பந்ததாரர் … Read more

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

சென்னை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் தந்தை காலையில் வேலைக்கு சென்று விட்டார். மதியம் தேர்வு என்பதால் மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் மாலையில் வேலை முடிந்து மாணவியின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். வீடு உள்பக்கமாக பூட்டி … Read more

டிபிஐ வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் இனி ‘பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்’ என்று அழைக்கப்படும். சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர் பேராசிரியர் அன்பழகன். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரூ.7,500 கோடியில் ‘பேராசிரியர்அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ … Read more