கொடைக்கானல் அருகே கோணலாறு அணை உடைப்பு: கிராம மக்கள் சீரமைத்தனர்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கவுஞ்சி கிராமத்தின் நீர் ஆதாரத்திற்கும், பாசன வசதிக்காகவும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோணலாறு அணை. 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அணை அப்பகுதி மக்களால் கட்டப்பட்டது. இந்த அணையில் கடந்த 10 ஆண்டுகளாக மறுகால் பாயும் இடத்தில் நீர்க்கசிவு இருந்து வந்தது. இக்கசிவுநீர் ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரியிடம் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. … Read more

கழிவுகள் கொட்டும் நோக்கத்தோடு வரும் லாரிகள் மீது நடவடிக்கை -தென்காசி எஸ்பி எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்திற்கு கழிவுகள் கொட்டும் நோக்கத்தோடு வரும் லாரி முதலாளிகள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவில் இருந்து கழிவுகள்,குப்பைகள் மற்றும் ஸ்கிராப்புகளை ஏற்றிவரும் வாகனங்கள் மூட்டை மூட்டையாக கிராமபுறப் பகுதிகளின் சாலை ஓரங்களிலும் நீர் நிலைகளிலும் கொட்டிச்செல்வதாக தொடர் புகார்கள் எழுந்துவந்த நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட காவல்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தனது … Read more

ஆபாச அவதூறு: மன்னிப்பு கேட்ட தி.மு.க பேச்சாளர்; முன் ஜாமின் வழங்கிய கோர்ட்

ஆபாச அவதூறு: மன்னிப்பு கேட்ட தி.மு.க பேச்சாளர்; முன் ஜாமின் வழங்கிய கோர்ட் Source link

வந்தது வாட்ஸ் ஆப் புது அப்டேட்..!!

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ள வாட்ஸ் ஆப் சார்பில் அவ்வப்போது அப்டேட்கள் கொடுப்பது வழக்கும். இதன்படி, நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசிதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது. பீட்டா வெர்ஷனில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Source link

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் உள் புகார் குழு அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க தேவைப்படும் பள்ளிகளில் உள் புகார் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஏ.வெரோணிகா மேரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு.. நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ (பாலியல்) வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவிகளை அதே பள்ளியில் பணிபுரியும் … Read more

டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணி வழக்கில் நாளை தீர்ப்பு!

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

வத்திராயிருப்பு பகுதியில் கனமழை: தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு, ராமச்சந்திரபுரம், ரெங்கப்பநாயக்கர்பட்டி மற்றும் கிருஷ்ணன்கோயில் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது. இதனால் ரெங்கப்பநாயக்கர்பட்டி பகுதியில் செல்லும் தரைப்பாலத்திலும், ராமச்சந்திரபுரம்-கீழகோபாலபுரம் செல்லும் பகுதியில் உள்ள தரைப்பாலத்திலும் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. மேலும் ராமச்சந்திரபுரம் ஊராட்சி திருவள்ளுவர் காலனிக்கு மழைநீர் புகுந்தது. தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் … Read more

இளைஞர்களே அடுத்த ‘சமுதாயம்’ என்றால், எங்கள் உதயநிதியே அடுத்த ‘தமிழ்நாடு’ – அன்பில் மகேஷ்

இளைஞர்களே அடுத்த ‘சமுதாயம்’ என்று சொல்லும் போது, எங்கள் இளைஞரணி செயலாளரே அடுத்த ‘தமிழ்நாடு’ என்று எடுத்துக் கூறுவேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 308 மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், … Read more

திருப்பூர் ரயில் நிலைய தகவல் மையத்தில் இந்தி பெயர்ப் பலகை: எதிர்ப்பால் உடனடியாக அகற்றம்

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் தகவல் மையத்தின் பெயர்ப் பலகை இந்தியில் எழுதப்பட்டிருப்பதை தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அவசர அவசரமாக அகற்றப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள தகவல் மையம் பகுதியில், ‘சகயோக்’ என எழுதப்பட்டிருந்தது. இந்தியிலும், ஆங்கிலம் மற்றும் தமிழில் அதே வார்த்தை எழுதி வைக்கப்பட, பயணிகள் குழப்பம் அடைந்தனர். தமிழகத்தை சேர்ந்த பலர் அர்த்தம் தெரியாமல் திண்டாடினர். திருப்பூர் ரயில் நிலையத்துக்கு, பனியன் நிறுவனங்களில் … Read more

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பறந்த சம்மன் – நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவைச் சேர்ந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா , வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த சோதனைகளின் அடிப்படையில் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ் … Read more