#JustIn : கடலூர்.. வெள்ள பாதிப்பு பகுதிகள் கண்டுபிடிப்பு.. ஒன்றரை லட்சம் மக்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடு.! 

தற்போது தென்மேற்கு பருவ மழை முடிந்து, வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையினால் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் தமிழக அரசு வெள்ள தடுப்பு பணிகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றது.  இத்தகைய சூழலில் கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் பேசியபோது, “மழையினால் அதிகப்படியாக பாதிக்கக்கூடிய 228 பகுதிகள் கடலூர் … Read more

5 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% ஊக்கத் தொகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை வரும் 15ம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்துவரி தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 2022-2023ம் நிதியாண்டின், முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை 30.09.2022க்குள் செலுத்த வேண்டும். அதன்படி, 2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியில் ரூ.696.97 கோடி சொத்து உரிமையாளர்களிடமிருந்து, வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் … Read more

கடந்த 3 நாட்களாக நள்ளிரவில் பெய்த கனமழை மதுரையில் 1,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

மதுரை: கடந்த 3 நாட்களாக நள்ளிரவில் பெய்த கனமழையால், மதுரை மாட்டுத்தாவணி அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக இரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் கனமழை பெய்தது. தொடர்ந்து அதிகாலை வரை நீடித்தது. கனமழையால், மதுரை மாட்டுத்தாவணி அருகில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் எதிரில் … Read more

டீ குடிக்க சென்ற மீன் வியாபாரி எண்ணெய் பாத்திரத்தில் விழுந்து உயிரிழப்பு.!

சென்னை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவர் அந்த பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் வழக்கமாக டீ குடிக்கும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது டீ குடித்துவிட்டு கடையில் இருந்து வெளியே வந்த போது எதிர்பாராத விதமாக கால் வழிக்கி அருகில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் விழுந்துள்ளார்.  இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்று … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று (11-ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், … Read more

சட்டம் ஒழுங்கு போலீசாரே விசாரிப்பதால் தொய்வு கொலை வழக்குக்கு தனிப்பிரிவு: டிஜிபி அறிக்கையளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: கொலை வழக்கு விசாரணைக்கு என தனிப்பிரிவை ஏற்படுத்துவது குறித்து டிஜிபி தரப்பில் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம்,  அரியமங்கலம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சதீஷ் குமார், சங்கர், மற்றொரு சதீஷ்குமார் ஆகியோருக்கு கடந்த 2017ல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்திருந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட் கிளை 3 பேரையும் விடுதலை செய்தது. மேலும் காவல்துறைக்கு பல்வேறு … Read more

திருப்பூர்: கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம்.!

திருப்பூர் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவிநாசி அடுத்த சேவூர் பாலிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி குடும்பத்தினர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென இன்று அதிகாலை நேரத்தில் வீடு இடிந்து விழுந்துள்ளன. இதில் பழனிசாமி மற்றும் அவரது மனைவி கலா … Read more

வனப்பகுதிகளிலுள்ள அந்நிய மரங்களை அகற்ற குழுக்கள் அமையுங்கள் – வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நியமரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்வது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, முதன்மை வனப் பாதுகாவலர், குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்ததால், அறிக்கையை திரும்பப் பெறுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றுதல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் பணிக்கு தனித்தனி குழுக்களை அமைக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 18ம் தேதிக்கு … Read more