ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்: அன்புமணி வரவேற்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்புக்குரியது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்க்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதற்கு … Read more

அரசுத் தேர்வில் தமிழை புறக்கணிப்பதா?- மத்திய அரசுக்கு தமிழக எம்பி கேள்வி!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை “ஸ்டாப் செலக்சன் கமிசன்” (SSC) விரைவில் நடத்த உள்ளது. இந்த தேர்வு குறித்து அண்மையில் வெளியான அறிவிப்பாணையில், தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம். இந்தி என இருமொழிகளில் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. அதாவது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் இடம்பெறாது என பொருள்படும்படி அந்த அறிவிப்பாணை உள்ளது. இதுகுறி்த்து மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன், மத்திய பணியாளர், பொது மக்கள் … Read more

திருச்சி அருகே 20 மயில்கள் மர்ம சாவு: விஷம் வைத்து கொலையா?

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கரட்டாம்பட்டியில் இருந்து ஆதனூர் செல்லும்  பகுதியில் செந்தாமரைக்கண்ணன் கரட்டுமலை எதிரே விவசாய நிலங்கள் உள்ளன. இந்த  பகுதியில் உள்ள ஒரு வயலில் நேற்று மயில்கள் இறந்து கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி  கிராம மக்கள், ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வனுக்கு தகவல்  தெரிவித்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு சென்று  பார்த்தார். அப்போது அங்கு 20 மயில்கள் மர்மமான முறையில்  இறந்து கிடந்தன. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு … Read more

”பணத்த கொடுக்க மாட்டேங்கிறாங்க”- தென்னை மரத்தில் ஏறி கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை மிரட்டல்!

தமிழக – கேரள எல்லைப் பகுதியில் கட்டுமானப் பணிகள் முடித்தும், ஒப்பந்தம் வழங்கிய நபர் கொடுக்கவேண்டிய பணத்தை வழங்கவில்லை எனக் கூறி, தென்னை மரத்தில் ஏறி கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக – கேரள எல்லைப் பகுதியான பாறசாலை அருகேயுள்ள செங்கல் பகுதியில், விஜயன் என்பவரது வீட்டின் முன்புறம் உள்ள தென்னை மரத்தில் ஏறிய, பாலியோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற கட்டிட ஒப்பந்ததாரர், மரத்தில் இருந்தபடி தற்கொலை மிரட்டல் … Read more

ஆன்லைன் மூலம் ஆதார் – வாக்காளர் அட்டை எப்படி இணைப்பது தெரியுமா ?

வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க விரும்புவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் இணைக்கலாம். எப்படி செய்வது எப்படி குறித்து இங்கு பார்ப்போம். உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் … Read more

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்  

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. இதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட … Read more

விசிகவின் சனாதன எதிர்ப்பு மாநாடு; திமுகவின் ஏற்பாடு- அர்ஜூன் சம்பத் ஆவேசம்!

தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறி பரப்புரை செய்ததாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்காக ராஜபாளையத்திற்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர்; வள்ளலாருடைய மிக முக்கியமான கொள்கை பசிப்பிணி போற்றுதல், அன்னதானம், புலால் மறுத்தல், மதுவிலக்கு. வள்ளலார் உடைய கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். வள்ளலாருக்கு தமிழக அரசு … Read more

"இந்து மதமே இல்லை" வெற்றி மாறன், கமல்ஹாசன் கருத்துக்கு இணை அமைச்சர் எல்.முருகன் பதில்

ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதமே இல்லை என்று கூறி தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க தமிழகத்தில் சிலர் முயற்சிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு. மேலும் தமிழர்களும், இந்துக்களும் ஒன்று தான். ஆங்கிலேயர்கள் வரலாற்றை திருத்தி பொய்யான வரலாற்றை கூறியதாகவும் விமர்சித்துள்ளார்.  மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இன்று நீலகிரி மாவட்ட … Read more

குடந்தையில் ரூ.5 கோடியில் தயாரான 23 அடி உயர ஐம்பொன் நடராஜர் சிலை வேலூருக்கு அனுப்பி வைப்பு

பாபநாசம்: கும்பகோணம் அருகே ரூ.5 கோடியில் தயாரான 23 அடி உயர ஐம்பொன்னால் ஆன, ஆனந்த  நடராஜர் சிலை லாரி மூலம் வேலூர் பொற்கோயிலுக்கு நேற்று மாலை அனுப்பி  வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திம்மக்குடியை சேர்ந்த  சிற்பச்சாலை உரிமையாளர் வரதராஜன். இவர் வேலூர் பொற்கோயிலுக்காக 2010ம்  ஆண்டு 23 அடி நடராஜர் சிலை செய்ய ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு  முறையில் ஊற்றி பணியை தொடங்கினார். பின்னர் போதிய நிதி இல்லாததால் அந்த  … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் பணியின்போது மதுபோதையில் தடுமாறும் செவிலிய உதவியாளர்! #Video

மதுரை அரசு மருத்துவமனையின் செவிலிய உதவியாளர் ஒருவர் தன் பணியின்போது மதுபோதையில் தடுமாறும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், நாள்தோறும் தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வெளியேறிவருகின்றனர். அந்த நோயாளிகளுக்கு உதவுவதற்காக ஏராளமான செவிலிய உதவியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அரசு ராஜாஜி மருத்துவமனை எலும்பு முறிவு மற்றும் விபத்து பிரிவில் பணியாற்றும் ஊழியரொருவர், பணியின்போது மதுபோதையில் நடந்துசென்று தரையில் கீழே விழுவது போன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் … Read more