தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: யாருக்கு என்ன பொறுப்பு? – முழு பட்டியல்

சென்னை: தமிழக அரசுத் துறை செயலர்கள், மாவட்டஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி துறை செயலராக பொ.சங்கர், வணிக வரி, பதிவு துறை செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பணியில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றுவோர், இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இது தவிர, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் காலங்களிலும் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் நிகழும். இந்த நிலையில், தமிழக அரசுத் துறைகளின் செயலர்கள், துறை … Read more

“நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை விளையாடுவது பணம்தான்” – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது” என்று முறைகேடு வழக்கு ஒன்றை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். நீட் தேர்வில் தேர்வில் முறைகேடு செய்து, ரூ.90 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற உதவியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது என்ற செய்தியை முன்வைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று … Read more

‘திராவிடத்தை ஒழிப்போம்’ என வீடியோ வெளியிட்டது எனக்குத் தெரியாது: நயினார் நாகேந்திரன்

கோவை: “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ வெளியிட்டது எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவை புறப்பட்டுவிட்டேன். அது குறித்து தெரிந்த பின்னர் பதில் அளிக்கிறேன்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மதுரையைில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என திமுக கூறிய நிலையில் முதல் நாள் 3 லட்சம் பேர், … Read more

“பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை…” – கோவையில் மோகன் பாகவத் பேச்சு 

கோவை: “உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது,” என கோவையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். கோவை பேரூர் ஆதீனம் மறைந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் மடத்தில் இன்று (ஜூன் 23) நடந்தது. உலக நன்மைக்காக நடத்தப்பட்ட வேள்வியில் … Read more

“சென்னையில் ஒரு தொகுதியில் பவன் கல்யாண் வென்றுவிட்டால்…” – சேகர்பாபு சவால்

சென்னை: “சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு அவர் என்ன பேசினாலும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் விடுத்துள்ளார். மதுரையில் நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரை பற்றியும் தமிழக … Read more

தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான் – எ.வ.வேலு!

தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான் ஏனென்றால் அவர் கையில் வேல் உள்ளது, எனது பெயரில் வேல் உள்ளது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.   

தேர்தல் வாக்குறுதிப்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக தமிழக அரசு பதவி உயர்வு வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகக் காவல் துறையில் துவக்க நிலையில் பணியில் சேரும் காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் (10+5+10) என்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போதுள்ள … Read more

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – முழுப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்: ராஜேந்திர ரத்னூ – முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் – அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை ச.விஜயகுமார் – கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர், … Read more

தமிழக முதல்வர் அதிரடி! 55 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்! என்ன காரணம்?

55 IAS Officers Transferred: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

“பாஜகவின் பாசிச அரசியலுக்கு துணைபோய் அதிமுக துரோகம் செய்கிறது” – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

சென்னை: “திராவிட இயக்கத்தின் பெயரையும் அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரை எங்களது தலைவர் என்று கூறிக் கொண்டு, பாஜகவின் பாசிச அரசியலுக்குத் துணை போய்த் துரோகம் செய்திருக்கிறது அதிமுக.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் ‘அண்ணா’ பெயர் தாங்கிய அதிமுக முன்னாள் … Read more