ஓபிஎஸ் விட்ட சவால்… சிங்கம் போல் இறங்கிய எடப்பாடி- சீக்ரெட் சொல்லும் தங்கமணி!

நாமக்கல் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நாமக்கலில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமை வகித்தார். வரும் 2024 மக்களவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? அதிமுக வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? என்பன குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் பேசிய தங்கமணி, கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை வேண்டா வெறுப்பாக தான் ஏற்றுக் கொண்டார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் முரண்டு … Read more

காயத்தில் வலியில் துடிதுடித்த சிறுத்தை மீட்கப்பட்டது! முதுமலையில் சிகிச்சை

கோவை: தனியார் காபி  தோட்டத்தில் சுருக்க கம்பியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள சேரம்பாடி அத்திச்சொல் பகுதியில் மேத்யூ என்பவரின் காபி தோட்டத்தில் வைத்திருந்த சுருக்கு கம்பியில் சிறுத்தை ஒன்று மாட்டிக் கொண்டிருப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த உடனே, சம்பவ இடத்திற்கு  சென்ற வனத்துறையினர் பார்த்தபோது சுருக்கு கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தை ஆக்ரோஷம் மிகுந்து காணப்பட்டது . … Read more

தோட்ட வேலியில் சிக்கிய காட்டுமாடு கன்று சிறுத்தை வேட்டையாடியதில் பலி

போடி: போடி அருகே பிச்சாங்கரையில் தோட்ட வேலியில் சிக்கிய காட்டு மாட்டினை சிறுத்தை வேட்டையாடியதில் பலியானது. போடி அருகே மேற்கு மலை தொடர்ச் சியின் மலை அடிவாரத்தில் குரங்கணி மலைச்சாலையில் பிச்சாங்கரை உள்ளது. இந்த காட்டுப் பகுதியில் வன உயிரினங்களான காட்டு மாடுகள், சிறுத்தை, செந்நாய்கள், மான்கள், காடு பன்றிகள் என பல தரப்பட்ட விலங்கினங்களும் அதிகளவில் இருக்கின்றன. தொடர்ந்து வனவிலங்குகள் அதிகம் நடமாட்டம் இருக்க கூடிய இப்பகுதியில் தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் விவசாயி உரிமையாளர்கள் … Read more

நானும் சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் நேரம் வரும்போது ஒன்றிணைவோம் – டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி துணிச்சல் இல்லாதவர் என்றும் தானும் சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் நேரம் வரும்போது ஒன்றிணைவோம் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார். தஞ்சையில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் நவம்பர் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டதால் நான் அதை … Read more

ஓசி பயணம் மறுத்த வீடியோ வழக்கை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்: எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

கோவை: ஓசி பேருந்து பயணம் வேண்டாம் என்ற வீடியோ தொடர்பாக அதிமுக தொண்டர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தமிழக அரசின் சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை பார்த்து அமைச்சர் க.பொன்முடி, ‘ஓசி பஸ்ல போறீங்க’ என்று இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களை … Read more

'வரட்டா'… குறைகளை அடுக்கிய மக்கள்; பாதியில் கிளம்பிய அமைச்சர்!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது வீரபாண்டி கிராமம். இந்த கிராமத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்றைய கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டமானது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது எனவும், 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்காததால் அமைச்சரிடம் … Read more

2014ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை விற்பனை கடை மீண்டும் திறப்பு: சுற்றுலா, வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் முன்பு தலையாட்டி பொம்மை விற்பனை கடைகள் இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இந்த கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து மீண்டும் பெரிய கோயில் பகுதியில் தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி திறக்க வேண்டும் என்று பெரிய கோயில் வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், வியாபாரிகள் சார்பில் தொடர்ந்து பல போராட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்ட்ங்கள் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பெரிய … Read more

குப்பைகள் குவிந்து சுகாதாரமின்றி காட்சியளிக்கும் திருவண்ணாமலை ‘கிரிவல பாதை’

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் குப்பைகள் குவிந்து சுகாதாரம் இல்லாமல் காட்சியளிக்கிறது. ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2668 அடி உயர திரு ‘அண்ணாமலை’, 14 கி.மீ., தொலைவு கொண்டது. திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சிகளை உள்ளடக்கியது. பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன், கிரிவல பாதையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுகிறது. … Read more

அம்பேத்கரின் மதமாற்றமும் அண்ணாவின் வாழ்த்தும்..!

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற மாதம் அக்டோபர் மாதம். அவர் பௌத்தத்தை ஏற்று (1956) 66 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பௌத்தத்தை ஏற்றதற்குக் கூறிய காரணங்கள் இன்றும் பொருந்துகின்றனவா? என்பது பற்றி விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கட்டுரை தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அதன்படி, அம்பேத்கரின் மதமாற்ற முடிவுக்கு தமிழ்நாட்டில் எழுந்த எதிர்வினைகள் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: “புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத்தைத் துறந்து பௌத்தத்தை ஏற்ற அக்டோபர் 14க்குப் பிறகு ஒரு வாரம் … Read more

நீலகிரியில் குடியிருப்பு கட்ட அனுமதி பெற பல மாதங்கள் காத்திருக்கும் மக்கள்; மீண்டும் உள்ளாட்சிகளே அனுமதி வழங்கும் முறையை கொண்டு வர வலியுறுத்தல்

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் குடியிருப்புகள் கட்ட மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் வனங்கள் அதிகளவு உள்ளன. எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் மற்றும் பள்ளதாக்குகளில் காய்கறி தோட்டங்கள் காணப்படுகிறது. இது தவிர இயற்கை எழில் கொஞ்சும் அணைகள், நீரோடைகள் … Read more