அயன் படத்தை மிஞ்சும் வகையில் கடத்தல்!!

சென்னை விமான நிலையத்தில் ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப்பிலிருந்து 1.8 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் வருகை பகுதியை, விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தொழில் பாதுகாப்புப் படை வீரருக்கு, ஒரு ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து பாதுகாப்புப் படை வீரா்,அந்த மாப்பைக் கழட்டிக் காட்டும் படி ஊழியரிடம் கூறியுள்ளார். பின்னர் மாப்பைக் கழட்டியபோது, மாப்பின் கைப்பிடி … Read more

ஆறுமுகசாமி ஆணையத்தில் எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தது ஏன்? – சசிகலா விளக்கம்

சென்னை: ஆறுமுகசாமி விசாரணை தொடர்பாக எனக்கு 3 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், நான் எனது வாக்குமூலத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தேன்” என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். சென்னையில் வி.கே.சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் சசிகலா உட்பட 3 பேரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” இந்த விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதனால் இதுகுறித்து நான் … Read more

சான்றிதழ்களை திருப்பி கொடுக்க வேண்டும் – மருத்துவ மாணவர்கள் நிம்மதி!

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் சேர்பவர்கள் இரு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஒப்பந்தம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். அந்த வகையில், ஒப்பந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படாததால், மாணவர் சேர்க்கையின் போது சமர்ப்பித்த அசல் சான்றுகளை திருப்பித் தரக் கோரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2020ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பை முடித்த அருண்குமார், சுபோத் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

பைக் மீது கார் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் பலி

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு கூலித் தொழிலாளர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் தேனி சின்னமனூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அம்மாபட்டி நடுத்தெருவில் வசிக்கும் செல்வராஜ் (65) மற்றும் அவரது உறவினர் மணிகண்டன்  என்ற அப்பாச்சி (67) ஆகிய இருவரும் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வயல்வெளி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது துர்க்கை அம்மன் கோவில் அருகே … Read more

சென்னையில் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல்!!

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கட்டிட மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரியும், தொழில் உரிமம் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூல் … Read more

சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுப்பு: உத்தரவை ரத்து செய்யக் கோரி கம்யூ., விசிக மனு

சென்னை: சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் … Read more

நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி; சுங்க கட்டணத்துக்கு செம திட்டம்!

இந்தியா முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 54 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணம் இல்லாத பரிவர்த்தனை என்ற அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக, பாஸ்டேக் முறை அமல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் பணப்பரிமாற்ற வங்கிகள் வாயிலாக பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாஸ்டேக் முறையை பின்பற்றும் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் … Read more

மேற்கு வங்க கவர்னருக்கு உடல்நலக்குறைவு – சென்னை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் இல.கணேசன். பாஜக மூத்த தலைவரான இவர், தேசிய செயலாளராகவும், தேசிய துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பாஜகவில் இணைவதற்கு முன்பு இவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகவும் இருந்தார்.  இவர், தென் சென்னை மக்களவை தொகுதியில் 2009, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றுக்கொண்டார்.  தொடர்ந்து, எம்பி பதவி காலாவதியாகும் முன்பே, கடந்தாண்டு மார்ச் … Read more

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு – மீட்க வராத வனத்துறையால் பொதுமக்கள் அதிருப்தி

தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் மின்சாரம் தாக்கி குரங்கு படுகாயம் அடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை  வனப்பகுதியிலிருந்து குரங்குகள் உணவைத் தேடி அடிக்கடி ஊருக்குள் வந்து விடுகின்றன. இந்நிலையில் இன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் கோயில் அருகே மின்சார வயரில் தொங்கி விளையாடியது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் கை, கால் பகுதிகளில் தீப்புண் ஏற்பட்டு படுகாயம் அடைந்த குரங்கை மீட்க பொதுமக்கள் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனையடுத்து … Read more

புதையலுக்காக நண்பனையே கொன்ற கொடூரம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே புதையலுக்காக நண்பனையே நரபலி கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். கெலமங்கலம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கடந்த 28ஆம் தேதி அவரது விவசாய தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த விவகாரத்தில் லட்சுமணனின் நண்பரான மணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விவசாய தோட்டத்தில் புதையல் எடுப்பதற்காக நண்பனையே கொன்று நரபலி கொடுத்தது தெரியவந்தது. லட்சுமணனின் விவசாய தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், … Read more