தூய்மை இந்தியா தரவரிசையில் தமிழகம் கடைசி இடம்; கோவை – போத்தனூருக்கு மட்டுமே விருது!

சென்னை: தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் பெரிய நகரங்கள் ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளன. சிறிய நகரங்கள் அனைத்தும் 200-வது இடத்திற்கு மேல்தான் பிடித்துள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016-ம் ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தி வருகிறது. ஸ்வச் சர்வேக்‌ஷன் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆய்வு 75-வது சுந்திர தின நிறைவு விழாவை … Read more

பிரேத பரிசோதனை பதிவேற்றும் சாஃப்ட்வேர்: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் முகமது காதர் மீரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆய்வு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை பதிவேற்றம் செய்யும் மென்பொருளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு பஞ்சாப் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய தகவல் மையம் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த (MedLeaPR – Medico Legal Examination and Postmortem Reporting) மென்பொருள் மூலம் பல்வேறு மருத்துவ … Read more

அரசு அளித்த தடையை நீக்கிய நீதிமன்றம் விரும்பத்தகாத செயல்களுக்கு பொறுப்பேற்குமா?… சீமான் கேள்வி

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்வதற்கு அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவு பெரும் ஏமாற்றமளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணி நடத்தப்பட்டால், சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குலைக்கப்படுமெனக் கருதி, தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல முன்மாதிரி வழக்குகளில் அறிவுறுத்தியிருக்கிற … Read more

தமிழகம் முழுவதும் பணியாற்றிவரும் தற்காலிக ஆசிரியர்கள் 2,760 பேருக்கு பணி நீட்டிப்பு; செப்டம்பர் மாத ஊதியம் வழங்க அரசு உத்தரவு

வேலூர்: தமிழகம் முழுவதும் 1990-91ம் ஆண்டு மற்றும் 2002-2003ம் ஆண்டு முதல் 2006-2007ம் கல்வி ஆண்டு வரை 45 பள்ளிகளுக்கு 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மேலும் 2011-2012ம் கல்வி ஆண்டில் 100 நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் … Read more

இப்போ கண்டுபிடி! – 25 பவுன் நகையுடன் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிய ஸ்மார்ட் திருடன்

நெய்வேலி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 25 சவரன் நகை பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் திருடன் சிக்காமல் இருக்க சிசிடிவி காட்சிகள் பதிவாகும் இயந்திரத்தையும் (ஹார்ட் டிஸ்க்) எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் உள்ள வி கே சாமி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷாகி நிஷா. இவர் பண்ருட்டி அடுத்த காங்கிருப்பு அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் … Read more

நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவு!!

நாளை காந்தி ஜெயந்தி என்பதால் இறைச்சி கடைகளை மூட கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடம், சத்தி ரோடு மற்றும் போத்தனுாரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அறுவைமனைகள் மற்றும் துடியலுாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாக இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது, மீறினால் … Read more

மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்பை முடித்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் சேருபவர்கள் இரு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஒப்பந்தம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படாததால், மாணவர் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம்: அமைச்சர் ஆர்.சக்கரபாணி விளக்கம்!

பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம் தொடர்பாக தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற இலஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டதாக விவரம் அறியாமல் குறை கூறியுள்ளனர். கணிதம் படித்தும் கணக்குத் தெரியாதவர் பொங்கல் … Read more

Cleanin Mop கைப்பிடியில் தங்கம் கடத்தல் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கும் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி தங்கம் கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதில் ஏகப்பட்ட நூதன முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அப்படி தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய  ஒப்பந்த பணியாளர்கள், பயணிகள் வருகை பகுதியை, தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.   இதையடுத்து பாதுகாப்பு … Read more

சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு

சென்னை: கடல் உப்பு காற்று காரணமாக ராமேஸ்வரம் ரயில் பெட்டிகள் பராமரிப்பு நடைமேடைகள் சேதம் அடைந்துள்ளன. புதிய பராமரிப்பு நடைமேடைகள் அமைக்கும் பணி இன்று முதல் துவங்கி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வந்த ராமேஸ்வரம் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்று (01.10.2022) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 08.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் (22662) இன்று இரவு 11.15 மணிக்கு 175 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.