புதுச்சேரியில் 4-வது நாளாக மின் துறை ஊழியர்கள் போராட்டம்; மின் தடை பாதிப்பால் பொதுமக்கள் சாலை மறியல் 

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் துறை தனியார்மயத்தை எதிர்த்து மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மின்சார தடையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் உருவாக்கிய போராட்ட குழு செப்.28-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மின் துறை தலைமையகத்தில் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழு … Read more

தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தமா? – மநீம கண்டனம்!

ரேஷன் கடைகளுக்கு தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தமா என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பருப்பு, ரவா, கோதுமை ,வெல்லம், நெய், அரிசி, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது முதல்வரின் கவனத்திற்கு செல்ல தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

புனித ஜெபமாலை அன்னை சர்ச் தேர்த்திருவிழா; போப் ஆண்டவர் தூதர் பங்கேற்பு

சோமனூர்: கிபி 1600ம் ஆண்டில் கட்டப்பட்ட கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், கோவை மறை மாவட்டத்திற்கு முதன்மை கோவிலாகவும், தாய் கோயிலாகவும் விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புபெற்ற இத்திருக்கோவில் கடந்த 2019 பசிலிக்கா திருத்தலமாக தரம் உயர்த்தி போப்பாண்டவர் அறிவித்தார். இதனால் தமிழகத்தில் 6வது திருத்தலமாக செயல்படுகிறது. இந்த ஆண்டு தேர்பவனி நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. நேற்று மாலை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாசுக்கு நன்றி வளைவில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. … Read more

சாலையோரம் கொட்டிக்கிடந்த ரூ.500 கட்டுகள்: ஆசையில் அள்ளிச்சென்ற மக்கள் – போலீசார் விசாரணை

வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்துள்ளனர். இதுகுறித்து வேலூர் வடக்கு துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ … Read more

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

6ஆவது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் இரண்டு நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 13 இடங்களில் 5ஜி சேவை அறிமுப்படுத்தப்பட்டுள்ளது. 5ஜி தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா … Read more

அக்.11-ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: 10 கட்சிகள், 13 அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இம்மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று 10 கட்சிகள் மற்றும் 13 அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் … Read more

ப.சிதம்பரத்துக்கு செம பதவி; மீண்டும் தொடங்கும் ஆட்டம்!

கட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் இல்லாத நிலை உள்ளது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தாலும் கூட, கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருவரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான மனுத்தாக்கல் செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. … Read more

பெரியகுளம் அருகே அதிமுக எம்.பி.க்கு சொந்தமான மின்வேலியில் சிக்கி சிறுத்தைப்புலி பலி.. ஆனால் கைது செய்யப்பட்டதோ ஆடுகளுக்கு கூடாரம் அமைத்தவர்..

தேனி: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழந்த விவகாரத்தில் ஆட்டுக்கு கிடை போட்டிருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம்கோம்பை வனப்பகுதி அருகே அதிமுக எம்.பி.யும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த 27ம் தேதி அந்த தோட்டத்தை சுற்றிஇருந்த வேலியில் சிக்கிய 2 வயது சிறுத்தைப்புலியை மீட்க வனத்துறை முயற்சித்தது. அப்போது வனத்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோடிய சிறுத்தைப்புலி … Read more

பெண் விவசாயியை தாக்க முயன்றதாக புகார் – அய்யாக்கண்ணு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மாவட்ட ஆட்சியர் முன்பு பெண் விவசாயியை தாக்க முயன்ற விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நேற்று (30.09.2022) நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதால் பெண் விவசாயி கவுசல்யா ஆட்சேபம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆட்சேபம் … Read more

முத்தம் கொடுக்க முயன்ற வீரருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது பாம்பு..!

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்த மகிழ்ச்சியில் அதற்கு முத்தம் கொடுக்க முயன்ற பாம்பு பிடி வீரரின் உதட்டில் பாம்பு கொத்தியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ஷிவமொகாவின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வருவதற்குள், அந்த பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர், ஒருவழியாக பாம்பை பிடித்துள்ளார். … Read more